tag:blogger.com,1999:blog-18224650.post115855385123413262..comments2023-06-05T19:48:22.811+05:30Comments on வைதிகஸ்ரீ:: கண்ணீர் குடிக்கும் பறவைகள் - வைராக்ய சதகம் VIIஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-18224650.post-1159292896244687362006-09-26T23:18:00.000+05:302006-09-26T23:18:00.000+05:30புலனின்பங்களைப் பற்றிய வரிகள் முழுக்க முழுக்க உண்ம...புலனின்பங்களைப் பற்றிய வரிகள் முழுக்க முழுக்க உண்மை. வள்ளுவரும் இதனை ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ என்கிறாரே. <BR/><BR/>வாங்சா மாத்ர பரிக்ரஹானபி பரம் த்யக்தும் ந சக்தாவயம் என்பது எத்தனை உண்மை. ஆசையை விடும் பக்குவம் இறை நிலையை உணர்ந்தவர்களுக்கே முடியும் என்று தான் கீதாசார்யனும் சொல்கிறான். <BR/><BR/>கடைசி சுலோகம் பலவிதமான எண்ணங்களைத் தோற்றுவிக்கிறது. என்னைப் போன்றவர்களே இறைவனின் திருப்புகழைப் பாடும் போது கண்கள் லேசாகப் பனிக்கிறது. யோகிகள் ஆனந்தக் கண்ணீர் வடிப்பது வியப்பில்லை. ஆனால் இந்தப் பறவைகள் எல்லாம் பயமின்றி அமரும் கல் போன்ற நிலையையும் ஜீவ காருண்யத்தையும் அங்கே மட்டும் தான் பார்க்க முடியும்; நம்மில் அது துர்லபம். உண்மையை விட கற்பனையே என்னைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதும் அந்த கற்பனை எதோ ஒரு காரணத்தால் எப்போதாவது உண்மையானால் கூட அதில் அவ்வளவாக மகிழ்ச்சி இருப்பதில்லை என்பதும் உண்மையிலும் உண்மை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1158641934054727342006-09-19T10:28:00.000+05:302006-09-19T10:28:00.000+05:30ஜடாயு அவர்களே,தங்கள் பின்னூட்டத்துக்கும், உத்சாகத்...ஜடாயு அவர்களே,<BR/><BR/>தங்கள் பின்னூட்டத்துக்கும், உத்சாகத்திற்கும் மிக்க நன்றி.<BR/><BR/>நீங்கள் சொல்லும் ச்லோகம் வைராக்ய சதகத்தில் இல்லை. ஒருவேளை ச்ருங்கார சதகத்தில் இருக்கலாம். அந்த சதகத்தில் எனக்கு அவ்வளவாக பரிச்சயமில்லை. புஸ்தகம் பார்த்து (அது என் அப்பா வீட்டில் இருக்கிறது) சொல்கிறேன். பருத்ருஹரியின் வார்த்தை விளையாட்டுகள் மிகவும் அழகானவை. அதனாலேயே, சம்ஸ்க்ருத நிபுணர்கள் மொழி விலாஸத்துக்கு இந்த நூல்களை காலங்காலமாக படித்து வருகிறார்கள்.<BR/><BR/>நன்றிஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1158580753746866832006-09-18T17:29:00.000+05:302006-09-18T17:29:00.000+05:30ஜயராமன், அற்புதமான சுலோகங்கள், நல்ல விளக்கம். वाञ्...ஜயராமன், <BR/><BR/>அற்புதமான சுலோகங்கள், நல்ல விளக்கம். <BR/>वाञ्छा-मात्र-परिग्रहान् - பர்த்ருஹரியின் அழகான சொல்லாட்சி! <BR/><BR/>மூன்றாவதாக உள்ள சுலோகத்தில் அரண்மனைகள் போன்ற சுகங்களின் நிலையாமையைக் கவி முழுமையாக உணர்ந்து தெளிந்து விட்டார் என்று புலனாகிறது. <BR/><BR/>பர்த்ருஹரியின் ஷ்ருங்கார, வைராக்ய சதகங்கள் நேர் எதிராக இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். இதில்லாமல், இரண்டும்-சரிதான் (இரண்டும் கெட்டான் அல்ல) என்ற நிலைப்பாடு உள்ள சுலோகம் ஒன்றும் படித்ததாக நினைவு - <BR/>किमिह बहुभिरुक्तैः युक्ति-शून्यैः प्रलापैः <BR/>द्वयमपि पुरुषानाम् सर्वदा सॆवनीयम् ।<BR/>अभिनव-मद-लीला-लालसम् सुन्दरीणाम् <BR/>स्तनभर-परिखिन्नम् यौवनम् वा वनम् वा ॥ <BR/>(நினைவிலிருந்து எழுதியது, பிழைகள் இருந்தால் க்ஷமிக்கவும்)<BR/><BR/>"பலவிதமான பேச்சுக்களால் பயன் என்ன? point இல்லாத புலம்பல்களால் தான் பயன் என்ன? ஆண்மகன் செய்யத் தகுந்த விஷயம் இரண்டு தான் - <BR/>ஒன்று, நாளும் புதிதாய்த் தோன்றும் சுந்தரிகளின் மயக்கமூட்டும் விளையாட்டுக்களிலும், கொஞ்சல்களிலும் அமிழ்ந்து, அவர்களின் அழகிய மதர்த்த மார்பகங்களில் கழியும் யௌவனம். <BR/>இன்னொன்று (இவை எல்லாவற்றையும் துறந்து போகும்) வனம்!" <BR/><BR/>இந்த சுலோகம் எந்த சதகத்தில் இருக்கிறது? இதன் தாத்பர்யம் என்ன? இது தெளிவதற்கு முன் இருந்த கவியின் மன நிலையைக் குறிக்கிறதா? இல்லை யோகமும், போகமும் ஒன்று தான் என்பதான ஞான உபதேசமா? <BR/>தங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18224650.post-1158566708233210472006-09-18T13:35:00.000+05:302006-09-18T13:35:00.000+05:30ஜெயராமன்-நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இந்த வைராக்...ஜெயராமன்-<BR/><BR/>நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இந்த வைராக்கியத்தை எழுதியது யார்? இதற்கு தமிழ் அருத்தம் நீங்களா எழுதியது இல்லை யாருடைய புத்தகம்? விவரமாக எழுதினால் படிக்க சுலுவாக இருக்கும். நன்றாக எழுதியுள்ளீர்கள்.Anonymousnoreply@blogger.com