tag:blogger.com,1999:blog-182246502024-03-08T08:03:15.083+05:30வைதிகஸ்ரீ:A Complement to the monthly magazine of the same name.
Musings on the vedic scriptures, rituals and contemporary customs!!ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-18224650.post-34730691067238277132009-02-09T09:50:00.004+05:302009-02-10T18:09:20.758+05:3009-02-2009 திங்கள் கிரஹணம் ஓர் விளக்கம்<span class="Apple-style-span" style="BORDER-COLLAPSE: collapse;font-family:Verdana;font-size:10;" >09-02-2009 அன்று இரவு சநதிர கிரஹணம் நிகழுகிறது, வழக்கமாக நிகழும் கிரஹணம் போல் இது இல்லை , அதாவது<br />சந்திரனை முழுமையாகவோ பகுதியாகவோ இந்த கிரஹணம் மறைக்காது, சந்திரனின் கிரணங்களை மட்டுமே ஓரளவு பாதிக்கும் ,இதற்கு ஆங்கிலத்தில் பெனம்பரா கிரஹணம் என்று பெயர.<br />சாஸ்திரப்படி இப்படிப்பட்ட கிரஹணம் அனுஷ்டானத்துக்கு உகந்தது அல்ல, ஆகவே ஆஸ்திகர்கள் வழக்கப்படி கிரஹணத்தில் செய்யும் ஸ்னானம் தானம் பித்ரு தர்ப்பணம் ஆகியவற்றையும் பரிஹாரங்களையும் செய்ய வேண்டாம் , மேலும் விபரங்களுக்கு போன் மூலம் கணபாடிகளை தொடர்பு கொள்ளவும் வைதிகஸ்ரீ</span>ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18224650.post-85760880395077821822007-11-21T11:20:00.000+05:302007-11-21T11:21:53.984+05:30யார் பிராமணன்?பாண்டவர்கள் வனவாசம் செய்துகொண்டிருந்த சமயம். ஒருநாள் பீமசேனன் வனத்தின் அழகை ரசித்துக்கொண்டு உலாவிக்கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பெரிய மலைப்பாம்பு அவனை பிடித்து சுற்றிக்கொண்டது. அசாத்தியமான பலம் கொண்ட பீமனால் எத்தனை முயற்சித்தும் அந்த பாம்பிடமிருந்து மீள முடியவில்லை.<br /><br />கொஞ்ச நேரத்தில், யுதிஷ்டிரர் தமயனை தேடி அங்கு வந்தார். பீமனின் நிலையை பார்த்து பயந்துபோனார். பாம்பிடம் பீமனை விட்டுவிடும்படி பிரார்த்தித்தார். வேறு ஏதாவது இறை கொடுத்துவிடுகிறேன் என்றார். ஆனால், அந்த சர்ப்பம் அதற்கு இணங்கவில்லை.<br /><br />ஆச்சரியமாக, அந்த பாம்பு பேச ஆரம்பித்தது. <br /><br />அந்த பாம்பு வேறு யாருமல்ல, பாண்டவர்களின் மூதாதயர். பூர்வீக பிறவிகளில் அந்த பாம்பு நஹூஷன் என்ற அரசன். பணமும், அதிகாரமும் சேர்ந்த செருக்கால் அந்த அரசன் பிராமணர்களை அவமதிக்கவே அகஸ்தியரின் சாபத்தால் பாம்பாக பிறந்திருந்தான்.<br />அந்த பாம்பு யுதிஷ்டிரரிடம் சில கேள்விகளுக்கு சரியான விடை சொன்னால் பீமனை விட்டுவிடுவதாக சொன்னது.<br /><br />நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..<br /><br />ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?<br /><br />யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.<br /><br />ந : இந்த குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருந்தால் அவன் பிராமணனா? பிரம்மம் என்பது சுகதுக்கங்கள் இல்லாதது என்றால், சுகதுக்கங்களை கடந்த நிலை இருக்கும் என்று தோன்றவில்லையே!<br /><br />யு : சத்தியம் முதலான நான் சொன்ன குணங்கள் ஒரு சூத்திரனிடம் இருக்குமானால் அவன் சூத்திரன் அல்லன். இந்த குணங்கள் ஒரு பிராமணரிடம் இல்லையென்றால் அவன் பிராமணன் அல்லன். ஓ, சர்ப்பமே, இந்த குணங்கள் கொண்டிருக்கும் மனிதன் பிராமணன் என்றே ஆகிறான். இக்குணங்கள் இல்லாமல் இருப்பவன் சூத்திரனே.<br /><br />சுகதுக்கங்கள் இல்லாத நிலை இல்லை என்று சொல்வது கர்மத்தால் விளைந்த அனைத்துக்கும் பொருந்தும். நீர் எப்படி இயற்கையில் உஷ்ணமாகாதோ, நெருப்பு எப்படி இயற்கையில் குளிர்ந்திருக்காதோ அப்படியே அறியாமை அகன்ற சத்தியத்தில் சுகதுக்கங்கள் இல்லை.<br /><br />ந : குணங்களே பிராமணனை தீர்மானிக்குமானால், இக்குணங்கள் இல்லா பிராமணின் பிறப்பு முக்கியமற்று போகிறதே.<br /><br />யு : பல குணங்கள் கலந்துவிட்ட இக்காலத்தில் பிறப்பால் பிராமணனை காண்பது கஷ்டம். எல்லாரும் பிறப்பில் சூத்திரர்களே. சில சம்ஸ்காரங்களாலும், வேதம் படிப்பதாலும் பிராமண குணங்கள் கிடைத்து பிராமணனாகிறான். ஸ்வாயம்புவ மனு சொல்வதும் இப்படியே. எல்லா சம்ஸ்காரங்களும் செய்தும், வேதம் படித்தும் அவனுக்கு இக்குணங்கள் கொள்ளாவிட்டால் அவன் பல குணங்கள் கலந்தவன் என்று அறிந்துகொள். சாத்திரங்களின் முடிவான தீர்மானம் இது. தன் சம்ஸ்காரங்களால் நற்குணங்கள் மேலெழும்பி இருப்பவனே பிராமணன்.<br /><br />யுதிஷ்டிரனின் இந்த பதில்களால் சந்தோஷப்பட்ட நகுஷன் பீமசேனனை விடுவிக்கிறான்.<br /><br />- மகாபாரத இதிஹாஸம். தத்வலோகா பத்திரிக்கையில் 1993 ஜனவரியில் பிரசுரமானதின் மறுமீட்பு இங்கே.ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-18224650.post-42113153513339650912007-10-12T19:26:00.000+05:302007-10-12T19:44:33.889+05:30ராம ஆஞ்சனேய ஆலிங்கனம்லங்கையிலிருந்து வெற்றிகரமாக பிராட்டியை தரிசித்து பெருமாளுடைய சந்தேஷத்தை கொடுத்து திரும்பிய ஆஞ்சனேய ஸ்வாமியை பெருமாள் சந்தோஷம் தாங்காமல் ஆலிங்கனம் பண்ணிக்கொண்டார்.<br /><br />மகான் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் பேரனான பிரசித்தமான பக்த கவி நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் ரகுவீரஸ்தவம் என்ற ஸ்தோத்திரத்தில் இதை அத்வைத பரமாக இப்படி அன்வயப்படுத்துகிறார்.<br /><br />नित्यम् सुशुप्तिषु परिश्वजसे न राम<br />भूतानि किम् निखिलभूतगुहाषयस्त्वम्।<br />आसाद्य तत् प्रकटम् अर्थम् अवाप कीर्तिम्<br />आचन्द्रतारविमलाम् अनिलात्मजन्मा॥ रघुवीरस्तवः<br /><br />நித்யம் சுசுப்திஷூ பரிச்வஜஸே ந ராம<br />பூதானி கிம் நிகிலபூதகுஹாஷயஸ்த்வம்<br />ஆஸாத்ய தத் ப்ரகடமர்த்தமவாப கீர்த்திம்<br />ஆசந்த்ர தாரவிமலாம் அநிலாத்மஜன்மா<br /><br />ராம - ஹே ராமா,<br /><br />நிகிலபூதகுஹாஷயஸ்த்வம் - உலக பூதர்களின் ஹ்ருதய குகையில் வசிக்கும் (சாக்ஷாத் ப்ரம்மனான நீ..)<br /><br />நித்யம் சுசுப்திஷூ - தினசரி சுசுப்தியில் (ஆழ்ந்த உறக்கத்தில்)<br /><br />பூதானி - எல்லா உயிர்களையும்<br /><br />பரிச்வஜஸே ந ராம - அணைப்பதில்லையா ராமா?<br /><br />தத் அர்த்தம் - அந்த செல்வம் (ஆசிர்வாதம்)<br /><br />ப்ராக்தம் - திறந்தபடி (அதாவது முழித்திருக்கும்போது)<br /><br />ஆஸாத்ய - கிடைக்கும்<br /><br />அநிலாத்மஜன்மா - வாயுபுத்ரனான ஹனுமான்<br /><br />ஆசந்த்ர தாரவிமலாம் - சந்திர நட்சத்திரங்களுள்ளவரை (அதாவது சிரஞ்சீவியாய்) அப்பழுக்கற்று...<br /><br />கீர்த்திம் - புகழை<br /><br />அவாப - அடைந்தார்.<br /><br />ஒவ்வொரு ஜீவனும் ஆழ்ந்த உறக்கத்தில் பரப்பிரும்மத்துடன் ஐக்கியமாவதாக உபநிஷதங்கள் சொல்கின்றன. ஆனால், அவர்கள் இதை அறியாமல், விழித்தெழும்போது மீண்டும் வாசனை, கர்மா கட்டுண்ட ஜீவர்களாகவே எழுகிறார்கள். <br /><br />அப்படி ஒருவன் விழித்திருக்கும்போதே, பிரும்மத்துடன் கலந்தால் - அதாவது தன் பிரும்ம உருவை உணர்ந்தால் - அதுவே மோட்சமாகும்.<br /><br />பரப்பிரும்மமான ராமன் அனுமனை ஆலிங்கணம் செய்து இந்த உயர்ந்த பதவியை கொடுத்தான். இதுவே ராமாஞ்சநேய ஆலிங்கனத்தின் ரகசியம்.ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18224650.post-54716627740788909542007-07-28T17:40:00.000+05:302008-12-09T13:28:25.573+05:30சூர்ப்பனகை vs அனுமன்ராமாயண ரகசியம் என்று நான் <a href="http://vaithikasri.blogspot.com/2006/05/blog-post.html">முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன்</a>.<br /><br />அதன் தொடர்பாக ராமாயண விஷயமாக பல பதிவுகள் இறைவன் அருளால் யதேச்சையாக கிடைக்கப்பெட்டது.<br /><br /><br />எனது அருமை நண்பர் - கோவை திரு. ராஜகோபாலன் சேஷாத்ரி CA அவர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்ட சில ராமாயண ரகசியங்களை இங்கு பதிகிறேன்.<br /><br /><br />முதலாவது:<br /><br /><br /><strong><span style="color:#006600;">எப்போதுமே பெருமாளையும், தாயாரையும் சேர்ந்தே சேவிக்கவேண்டும். தனியாக்கவே கூடாது.<br /></span></strong><br /><br /><br />உதாரணம்:<br /><br /><br /><br />சூர்ப்பனகை: சீதையைய்த்தவிர்த்து ஸ்ரீ ராமன் தான், அவளுக்கு வேண்டியதாயிற்று. சீதாதேவியை விட்டுவிடு என கெஞ்சி, ஸ்ரீ ராமனையே மணக்க விரும்பினாள், வேண்டினாள். பிரித்துவிட நினைத்தாள். முடிவு, மூக்கு, காது போயிற்று.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5IqMzOX-z2NIWsa5el_yXV11sYNoJxEAjtmZOMA6EE7KMS7KfGGxG1ItCsmKHrJ2aeRaIH3g0yhSiMOcypD_taMv_xJwA7SJo0EeobfgxGc7ylD514FuLoMXVecU-YmfPjZHrCQ/s1600-h/11.jpe"><img id="BLOGGER_PHOTO_ID_5092221074916181986" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5IqMzOX-z2NIWsa5el_yXV11sYNoJxEAjtmZOMA6EE7KMS7KfGGxG1ItCsmKHrJ2aeRaIH3g0yhSiMOcypD_taMv_xJwA7SJo0EeobfgxGc7ylD514FuLoMXVecU-YmfPjZHrCQ/s320/11.jpe" border="0" /></a> ராவணன்: ஸ்ரீ ராமனையே எதிர்த்தான்.<br />முடிவு, ராஜ்யம், பிள்ளைகள், நாடு, சகோதரர்கள், (எதைத்தான் அவன் இழக்கவில்லை.) எல்லாவற்றையுமே இழந்தான். அவனுடைய பத்து தலைகளுமே போயிற்று.<br /><br /><br />பக்த ஹனுமான்: ஸ்ரீ ராமனையும், சீதாபிராட்டியையுமே மனதில் கொண்டு ஹனுமான் சேர்ந்தே பூஜித்தார்.<br /><br /><br />பலன்:<br />1. வால்மீகி அவருக்கென்றே ஒரு முழு காண்டத்தையே ஒதுக்கி அதில் அவர் புகழையே பாடிவைத்தார்.<br /><br /><br />2. ஸ்ரீ ராமனையே சதா ஸ்மரணை செய்யும் பாக்கியத்தால், சிரஞ்சீவியாக இன்றும் நம்மிடம் வாழ்கிறார், எங்கெங்கு ராமா என நினைத்த மாத்திரத்தில், அங்கு கைகட்டி, வாய்பொத்தி, கண்ணீர் மல்க நமது இருப்பிடம் தேடி வந்து, ஸ்ரீராம பஸ்ரீனையில் ஆழ்ந்து விடுகிறார்.<br /><br /><br />3. மேலும், ஸ்ரீ ராமனே அவரை கட்டித்தழுவி அவர் தோளில் கண்ணீர் மல்கும் பாக்கியம் அவருக்கே கிடைத்தது.<br /><br /><br />“ நீ எனக்கு சீதாதேவியின் சூடாமணியை என் கையில் கொடுத்து ‘கண்டேன் சீதையை’ என்று என்னிடம் அவள் செய்தியைத் தந்ததற்கு, என்னால் அதற்கு ஈடாக உனக்கு எதை கொடுப்பேன்?<br /><br /><br />எனக்காக நூறு யோஜனை சமுத்ரத்தைத் தாண்டி, லங்கைக்கு சென்று, சீதையிடம் என் கணையாழிக்கு பதிலாக அவள் தான் சூட்டிக்கொள்ளும் சூடாமணியை எனக்காக கொண்டு வந்திருக்கிறாய். இது யாராலும் செய்யமுடியாத மிகப்பெரிய கார்யம். உனக்கு இணையாக எவ்வுலகிலும் யாருமே இருக்கமுடியாது. இச்செய்கைக்கு ஈடாகக்கொடுப்பற்கு என்னிடம் ஒன்றுமே இல்லையே. என் செய்கேன், புரியவில்லையே.<br /><br />ஆம், ஆம், ஓன்றே ஒன்று இருக்கிறது, அதையே உனக்கு த்தந்து விடுகிறேன். அது நானே தான், உனக்கு என்னையே அர்ப்பணித்தேன். என்னையே எடுத்துக்கொள். இனி நான் உனது உடமை. என்னை எடுத்துக் கொள்வாயா?” என ---- ஸ்ரீராமன் தன் பக்தன் ஹனுமானின் தோளில் கண்ணீர் மல்கி, இப்படி நினைத்து ஹனுமானை கெஞ்சி, இருகக்கட்டிக்கொண்டி ருப்பாரோ?<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0V9K4UQscwIv5tfSsc802ZBwkebVQYKcJ8osLsBlsseMl646UE2EoCDjZ9Bq0ElLO42e7fHop2VmNj5KMfsI1XX5Kj1SAowK6Bqg140PUNpbK_mo2JnlikRwTWeL7c5xU_MquwA/s1600-h/0200.jpe"><img id="BLOGGER_PHOTO_ID_5092221671916636146" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0V9K4UQscwIv5tfSsc802ZBwkebVQYKcJ8osLsBlsseMl646UE2EoCDjZ9Bq0ElLO42e7fHop2VmNj5KMfsI1XX5Kj1SAowK6Bqg140PUNpbK_mo2JnlikRwTWeL7c5xU_MquwA/s320/0200.jpe" border="0" /></a><br />தன்னையே ஹனுமனுக்கு உடமையாக்கிய ஸ்ரீராமன் இப்படியும் நினைத்திருப்பாரோ? இருக்கலாம் அல்லவா!!!<br /><br />4. சீதம்மா, அவரை வத்ஸ, (குழந்தாய்) என லவகுசருக்கு முன், அவரை அழைத்து, சீதாராமனுக்கே முதல் பிள்ளையாக்கினார். இப்பேர்பட்ட பதவி வேறு யாருக்காவது கிட்டியதா? தெரிந்தால் சொல்லுங்களேன்.<br /><br /><br /><div align="center"><span style="color:#000099;">*****ஸ்ரீசீதாராமஜயம்****</span></div>ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18224650.post-1162211635915252632006-10-30T18:01:00.000+05:302006-10-30T18:03:55.936+05:30மருந்தா-சுகமா? - வைராக்ய சதகம்இதுவரை பார்த்தது<br /><br />16 <a href="http://vaithikasri.blogspot.com/2006/10/blog-post_23.html">காமத்தின் வீழ்ச்சி</a><br />17 <a href="http://vaithikasri.blogspot.com/2006/10/blog-post_24.html">சிவனின் தனித்துவம்</a><br />18 <a href="http://vaithikasri.blogspot.com/2006/10/blog-post_25.html">மீன்களிலும் தாழ்ந்தவன் </a><br /><br />கவி மேலும் தொடர்கிறார்.<br /><br /><br />த்ருஷா சுஷ்யத்யாஸ்யே பிபதி ஸலிலம் சீதமதுரம்<br />க்ஷூதார்த: சால்யான்னம் கவலயதி மாம்ஸாதிகலிதம்<br />ப்ரதீப்தே காமாக்னௌ ஸூத்ருடதரமாலிங்கதி வதூம்<br />ப்ரதீகாரம் வ்யாதே: ஸூகமிதி விபர்யஸ்யதி ஜன: 19<br /><br /><br />तृषा शुष्यत्यास्ये पिबति सलिलं शीतमधुरं<br />क्षुधार्तः शाल्यानं कवलयति मांसादिकलितम्।<br />प्रदीप्ते कामाग्नौ सुदृढतरमालिङ्गति वधूं<br />प्रतीकारं व्याधेः सुखमिति विपर्यस्यति जनः॥ १९॥<br /><br /><br />tR^ishhaa shushhyatyaasye pibati salila.n shiitamadhura.n<br />xudhaartaH shaalyaana.n kavalayati maa.nsaadikalitam.h .<br />pradiipte kaamaagnau sudR^iDhataramaaliN^gati vadhuuM<br />pratiikaara.n vyaadheH sukhamiti viparyasyati janaH .. 19..<br /><br /><br />Meaning:<br />One drinks cool sweet water for mouth parched with thirst; the hunger-smitten eats rice, flavored with meat et cetera.; with passion afire, embraces the wife firmly; people (treat) these remedies for these diseases contrarily as happiness. <br /><br /><br />பொருளுரை:<br /><br />(மனிதன்) தாகத்தில் வறண்ட வாய்க்கு குளிர்ந்த சுவையான தண்ணீர் குடிக்கிறான்; பசி தாக்கியவன் மாமிசங்கள் முதலியவை சேர்த்து சுவைப்பட்ட சாதத்தை சாப்பிடுகிறான்; காமாக்னி கிளறும்போது மனைவியை திடமாக அணைக்கிறான்; (இவ்வித) வியாதிகளுக்கு மாற்றான மருந்துகளை சுகங்களென்று எதிரிடையாக நினைக்கும் ஜனங்கள்.<br /><br /><br />விரிவுரை:<br /><br /><em>யாக்கையின் பிணக்குகள் தீர உணவும், உறக்கமும் இடையறாது ஏற்கப்படுகின்றன. தாகம், பசி, காமம் வாட்டும்போது உடல் தேடும் உணவும், உறவும் இந்த பிணக்குகளிலிருந்து தற்காலிக விடுப்புக்கே. இந்த தீர்வுகள் மருந்துகளே அன்றி சுகங்களாகா. இதற்கு இரண்டு சான்றுகள். இத்தீர்வுகள் பெறா உடல் வாடுகிறது. மேலும், இந்த தீர்வுகள் உடலுக்கு எப்போதும் தேவைப்படுவதும் இல்லை. இன்று சுகமாயிருப்பது பின்னொருவேளை சுகமாயிருப்பதில்லை. இவ்விரண்டு காரணங்களால் இவை மருந்துகள் என்பது தெரிகிறது. மருந்துகள் சுகங்களாகா. உடலுக்கு பிறப்பும், இறப்பும் நிரந்தர பிணிகளாயின. பசியும் வேட்கையும் தற்காலிக பிணிகளாகின்றன. இந்த தற்காலிக நிவாரணங்களுக்காக அல்லல்படுவோர் அற்பர்கள். மூலமான பிறப்பெனும் வியாதி ஒழிய மருந்து வேண்டுபவனே அறிந்தவன். பவமென்னும் இவ்வுடல் ஒழிவதே உண்மையான சுகம்.</em>ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18224650.post-1161753313125782592006-10-25T10:39:00.000+05:302006-10-25T14:14:35.706+05:30மீன்களிலும் தாழ்ந்தவன் - வைராக்ய சதகம்இதுவரை பார்த்தது<br /><br />16ஆவது ஸ்லோகம் <a href="http://vaithikasri.blogspot.com/2006/10/blog-post_23.html">காமத்தின் வீழ்ச்சி</a><br /><br />17வது ஸ்லோகம் <a href="http://vaithikasri.blogspot.com/2006/10/blog-post_24.html">சிவனின் தனித்துவம்</a><br /><br />கவி மேலும் தொடர்கிறார்.<br /><br />அஜானந்தாஹாத்ம்யம் பதது சலபஸ்தீவ்ரதஹனே<br />ஸ மீனோऽப்யஞானாத்வடிசயுதமச்னாது பிசிதம்<br />விஜானந்தோऽப்யேதே வயமிஹ விபஜ்ஜாலஜடிலான்<br />ந முஞ்சாம: காமானஹஹ கஹனோ மோஹமஹிமா 18<br /><br /><br />अजानन्दाहात्म्यं पततु शलभस्तीव्रदहने<br />स मीनोऽप्यज्ञानाद्वडिशयुतमश्नातु पिशितम्।<br />विजानन्तोऽप्येते वयमिह विपज्जालजटिलान्<br />न मुञ्चामः कामानहह गहनो मोहमहिमा॥ १८॥<br /><br /><br />ajaanandaahaatmyaM patatu shalabhastiivradahane<br />sa miino.apyaGYaanaadvaDishayutamashnaatu pishitam.h .<br />vijaananto.apyete vayamiha vipajjaalajaTilaan<br />na muJNchaamaH kaamaanahaha gahano mohamahimaa 18<br /><br />A moth falls in fire not knowing its burning power; the fish<br />gets caught for food in baited hook in ignorance; and here we, despite aware of complex dangers of sensual pleasures, do not renounce them. Oh! how profound is the power of delusion! 18<br /><br />தீவிரமாக தகிக்குமென்றறியாமல் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள்; (ஆபத்தென்று) அறியாமல் தூண்டிலின் இறையை கவ்வி மாட்டும் மீன்கள்; காமசுகங்களின் ஆழமான ஆபத்துகளை அறிந்தும் இங்கே விட இயலாமலுள்ள நாம்; மோகங்களின் மகிமை எத்தனை கடுமையானது. 18<br /><br /><br />================<br />விளக்கவுரை:<br />அனைத்து உயிரனங்களும் புலனின்பத்தில் அழிகின்றன. உணவாசை, உடலாசை என்று வாழ்க்கையை தொலைக்கும் மீன்களும், விட்டில்களும் ஒரு விதத்தில் மனிதனைவிட மேலானவை. ஏனெனில், அவை, அறியாமல் உள்ளுணர்வில் வாழ்கின்றன. <br /><br />ஆனால், பகுத்தறிவுள்ள ஒரே ஜீவனான மனிதன் மற்ற உயிரினங்களைவிட தாழ்கிறான். காரணம் - அவன் அறிந்தே தவறிழைத்து மாள்கிறான். <br /><br />பகுத்தறிவு பெற்றதாலேயே, மானிட ஜன்மம் கர்ம வினைகளுக்கு காரணமாகிறது. மற்ற பிறப்புகள் கர்மவினைகளை அனுபவிக்கவே படைக்கப்பட்டன.<br /><br />ஆனால், மனிதர்களில், அறியாமல் கெட்டவர்களைவிட அறிந்து கெட்ட மனிதர்களே மிகுதி. இராவணன், துரியோதனன் முதலானோர் இதற்கு எடுத்துக்காட்டு. இகவாழ்க்கையிலும் உடலுக்கும், வாழ்க்கைக்கும் ஊறு என்று அறிந்தே மக்கள் அல்ப சுகங்களுக்காக பெரும் பலன்களை இழக்கிறார்கள். குடிக்கு கேடு என்று அறிவித்துக்கொண்டே கோடிகளாய் குடிகள் விற்கின்றன. <br /><br />அறிதான மானிடப்பிறப்பில், இந்த உடலை பலனாக்கி உய்வோர் மிகச்சிலரே. அறிவினாலும் வெல்ல இயலாத இப்புலனின்பங்கள் எத்துனை சக்தி வாய்ந்தவை என்று வியக்கிறார் கவி.ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-18224650.post-1161663049289961112006-10-24T09:37:00.000+05:302006-11-20T08:42:24.920+05:30சிவனின் தனித்துவம் -வைராக்ய சதகம்<p class="MsoNormal"><span lang="TA">முன்பு பார்த்தது 16ஆவது ஸ்லோகம் <a href="http://vaithikasri.blogspot.com/2006/10/blog-post_23.html">காமத்தின் வீழ்ச்சி</a></span></p><p class="MsoNormal"><span lang="TA"><br />இதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலாக மேலும் தொடர்கிறார் கவி.<br /><br /><strong>சிவனின் தனித்துவம்</strong><br /><br /><br />ஏகோ ராகிஷூ ராஜதே ப்ரியதமாதேஹார்தஹாரீ ஹரோ</span><span style="color:black;"><?xml:namespace prefix = o /><o:p></o:p></span></p><p class="MsoNormal"><span lang="TA">நீராகேஷூ ஜனோ விமுக்தல்லநாஸங்கோ ந யஸ்மாத்பர: </span><span style="color:black;"><o:p></o:p></span></p><p class="MsoNormal"><span lang="TA">துர்வாரஸ்மரபாணபன்னக விஷவ்யாவித்தமுக்தோ ஜன: </span><span style="color:black;"><o:p></o:p></span></p><span lang="TA">சேஷ: காமவிடம்பிதான்ன விஷயான்போக்தும் ந மோக்தும் க்ஷம: 17 </span><p class="MsoNormal"><span lang="HI"><br /></span></p><p class="MsoNormal"><span style="font-size:130%;"><span lang="HI">एको</span><span lang="HI"> </span><span lang="HI">रागिषु</span><span lang="HI"> </span><span lang="HI">राजते</span><span lang="HI"> </span><span lang="HI">प्रियतमादेहार्धहारी</span><span lang="HI"> </span><span lang="HI">हरो</span><o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-size:130%;"><span lang="HI">नीरागेषु</span><span lang="HI"> </span><span lang="HI">जनो</span><span lang="HI"> </span><span lang="HI">विमुक्तललनासङ्गो</span><span lang="HI"> </span><span lang="HI">न</span><span lang="HI"> </span><span lang="HI">यस्मात्परः।</span><o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-size:130%;"><span lang="HI">दुर्वारस्मरबाणपन्नगविषव्याविद्धमुग्धो</span><span lang="HI"> </span><span lang="HI">जनः</span><o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-size:130%;"><span lang="HI">शेषः</span><span lang="HI"> </span><span lang="HI">कामविडम्बितान्न</span><span lang="HI"> </span><span lang="HI">विषयान्भोक्तुं</span><span lang="HI"> </span><span lang="HI">न</span><span lang="HI"> </span><span lang="HI">मोक्तुं</span><span lang="HI"> </span><span lang="HI">क्षमः॥</span><span lang="HI"> </span><span lang="HI">१७॥</span><o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-size:130%;color:black;"><o:p></o:p></span></p><span lang="TA"></span><span style="color:black;"></span><p class="MsoNormal"><i><span style="font-size:130%;">eko raagishhu raajate priyatamaadehaardhahaarii haro<o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span style="font-size:130%;">niiraageshhu jano vimuktalalanaasaN^go na yasmaatparaH .<o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span style="font-size:130%;">durvaarasmarabaaNapannagavishhavyaaviddhamugdho janaH<o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><span style="font-size:130%;"><i>sheshhaH kaamaviDambitaanna vishhayaanbhoktu.n na moktu.n xamaH </i><i><span lang="TA" style="font-family:Latha;color:black;"></span></i><i>17</i><i><span lang="TA" style="font-family:Latha;color:black;"> </span></i><i><o:p></o:p></i></span></p><p class="MsoNormal"><span style="color:black;"><o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family:lucida grande;">Shiva is unique among the sensuous, for he shares half the body with<o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family:lucida grande;">His beloved; among the dispassionate no one excels Him in detachment from women. Rest of the people, stunned in infatuation by Cupid's irresistible arrows tipped with serpent poison, can neither enjoy their desires nor give them up at will. 17 </span></p><p class="MsoNormal"><i><span style="font-family:TMNEWS;"><o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span lang="TA">தம் பிரியமானவளை பாதியுடலாக கொண்ட சிவன், பிரேமிகளில் சிறந்த ஒருவன். (அதே சமயம்), மோகமற்று பெண்ணுறவின்று விடுபட்ட ஜனங்களில் அவனை விஞ்சியவரில்லை. மற்றவர்களோ, தடையற்ற மன்மதனின் பாணமாகிய பாம்பின் விஷத்தால் மதிகலங்கி மோக மயக்கத்தில் விஷயங்களை முழுதும் அனுபவிக்கவோ, (அல்லது) விடவோ சக்தியற்றவர்கள். 17 </span></i><i><span style="font-family:TMNEWS;"><o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span style="font-family:TMNEWS;"><o:p><br /></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span style="font-family:TMNEWS;"><o:p>விளக்கவுரை:<br /></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span style="font-family:TMNEWS;"><o:p><br /></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span lang="TA">சிவன் மனித இலக்கணத்துக்கு வரையறாதவன். எல்லாம் விட்டொழிந்த யோகியாகவும், இல்லறம் போற்றும் குடும்பியாகவும் அவன் மிளிர்கிறான். அவன் ஆணுமல்லன், பெண்ணுமல்லன். உலகார் வேண்டாததை அவன் ஏற்கிறான். துன்பம், மயானம், தும்பை, எருக்கு, பனிமலை இவையெல்லாம் சிவார்ப்பணம். அவன் மிக்கோரமுதுண்ண தான் நஞ்சுண்ட மேலவன். </span></i><i><span style="font-family:TMNEWS;"><o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span style="font-family:TMNEWS;"><o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span lang="TA">அவன் ஒரே சமயத்தில் தக்ஷிணாமூர்த்தியாக ஞானத்தின் எல்லையை காட்டி, ஆனந்தத்தின் எல்லையாக நடராஜனாகிறான். </span></i><i><span style="font-family:TMNEWS;"><o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span style="font-family:TMNEWS;"><o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span lang="TA">அவனை நீக்கி, மற்றவர்கள் எல்லாம், இந்திரனோ, ப்ரும்மனோ, திருமாலோ, மனிதர்களோ, அரக்கர்களோ, பசுக்களோ அனைவரும், காமத்தால் மயங்கி சுழலுபவர்களே. </span></i><i><span style="font-family:TMNEWS;"><o:p></o:p></span></i></p><p class="MsoNormal"><i><span style="font-family:TMNEWS;"><o:p></o:p></span></i></p><i><span lang="TA">அதிலும் மனிதர்கள் நிலை பரிதாபகரமானது. மோகத்தில் தீர்க்கமாக வீழ மனமோ சக்தியோ இன்றி போனாலும், அதை முழுதும் ஒழித்துப்போடவும் இயலாமல் உழலுகிறார்கள் என்கிறார் கவி.</span></i>ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-18224650.post-1161577288961701372006-10-23T09:48:00.000+05:302006-10-24T09:08:56.426+05:30காமத்தின் அழிவு - வைராக்ய சதகம்<span style="font-size:130%;">स्तनौ मांसग्रन्थी कनककलशावित्युपमितौ<br />मुखं श्लेष्मागारं तदपि च शशाङ्केन तुलितम्।<br />स्रवन्मूत्रक्लीन्नं करिवरशिरस्पर्धि जघनं<br />मुहुर्निन्द्यं रूपं कविजनविशेषैर्गुरु कृतम्॥ १६॥<br /></span><br />ஸ்தனௌ மாம்ஸக்ரந்தீ கனககலசாவித்யுபமிதௌ<br />முகம் ஸ்லேஷ்மகாரம் ததபி ச சசாங்கேன துளிதம் <br />ஸ்ரவன்மூத்ரக்ளீன்னம் கரிவரசிரஸ்பர்தி ஜகனம்<br />முஹூர்நிந்த்யம் ரூபம் கவிஜனவிசேஷைர்குரு க்ருதம் 16 <br /><br />stanau maa.nsagranthii kanakakalashaavityupamitau<br />mukha.n shleshhmaagaara.n tadapi cha shashaaN^kena tulitam.h .<br />sravanmuutrakliinna.n karivarashiraspardhi jaghana.n<br />muhurnindya.n ruupa.n kavijanavisheshhairguru kR^itam.h .. 16..<br /><br />breasts which are but two lumps of flesh are compared as golden vessels; the mouth, seat of phlegm and mucus, are compared to the moon; the loins, outlet for wet urine, are the forehead of an elephant; thus poets have glorified the contemptible human form.<br /><br /><span style="font-size:130%;">மாமிசக்கோளங்களான மார்பகங்கள் தங்க கலசங்களென ஒப்பப்படுகின்றன; எச்சிலின் இருக்கையாக இருந்தாலும் வாயோ வெண்ணிலவுக்கு சமமாகிறது; பெருகும் மூத்திரக்கேடுடைய அரை இடுப்போ, யானையின் மத்தகமாகிறது. வெறுக்கக்கூடிய இவ்வுடலமைப்பை கவிகள் (எத்தனை) உயர்த்திவிட்டார்கள். 16 <br /></span><br />சௌந்தர்யம் மனதின் கற்பனை. காமம் மனதில் விளைவது. அழகான ரதிகளிடமட்டுமில்லாமல், ஜனங்கள் குரூபிகளிடமும் அதே வேகத்துடன் கூடுகிறார்கள்.<br /><br />ஏனென்றால், காமம் மனதில் பிரியமான பிரமையை ஏற்படுத்தி அதிலேயே மக்களை மோகிக்க பண்ணுகிறது. அந்த பிரமை அடிக்கடி உருவகப்படுத்திக்கொள்ளும் சௌந்தர்யத்தின் நினைவால் எழுவது. யோகிகளும், குழந்தைகளும் இந்த நினைவுப்படுத்தல் இல்லாததாலேயே காமத்தில் வீழ்வதில்லை. சொல்லப்போனால், இந்த மல, அஸ்தி, உதிர கூட்டான இந்த உடல், நாடியால் கட்டப்பட்டு, மயிர் அடர்ந்த தோலினால் மூடிய ஒரு மாமிச கூடு. இது உண்மையில் வெறுக்கத்தக்கது. இதில் ரமிக்கும் மக்கள், கழிவில் பெருகும் கிருமிகளை ஒத்தவர்கள்.<br /><br />அங்கங்களிலும், தோல் பரிமாணத்திலும் மயங்கும் கவிகள் வார்த்தைகளில் பிம்பம் வரைந்து இந்த காம மாயையை மேலும் மனதில் பூட்டுகிறார்கள்.<br /><br />இந்த பிரமை மறைவதே வாழ்வின் முதல் வெற்றி.<br /><br />இவ்வுடலாசைக்கு இளமையில் வாழ்க்கையும், முதுமையில் மானமும் பலியாகின்றன.<br /><br />காமத்தால் கவிகளின் பொய்களை நம்பி, காலத்தின் சுழலில் சிக்கி, வாழ்க்கையின் இலக்கை இழந்து வீழ்ந்தோரை எச்சரிக்கிறார் பர்த்ருஹரி.ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-18224650.post-1161397470064098452006-10-21T07:50:00.000+05:302006-10-30T19:29:27.466+05:30உருவ வழிபாடுபூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன.<br /><br />உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி வாழத்தப்படுகிறது) என்றால் அவர்களுடைய படம், உருவச்சிலைக்கு இல்லாமல் அவரது உடலுக்கு செய்யப்படுகிறது என்கிறார்கள். உடல் உருவமில்லையா? சரீரம் உயிருள்ளதா அல்லது உடம்பில் உரையும் இந்த ஜீவன் உயிருள்ளதா? உடலில் உள்ள இந்த ஜீவனை பூசை செய்வது எப்படி நிகழும்? அது பூசைக்காக எங்கே கிடைக்கும்? பூசை உடலுக்குத்தான் நடக்கும், உடல் ஐம்பூதங்களாலான உருவம்.<br /><br />உடலில் உள்ள உயிர் உடலுக்கு செய்யப்படும் பூசை, மரியாதைகளை தன்னுடையதாக எண்ணி அதனால் மகிழ்கிறது. இது உண்மை. ஆனால், எங்கும் வியாபித்திருக்கும் இறை விக்கிரக உருவத்தில் இருக்கிறதா இல்லையா? அது எல்லாம் அறிந்ததா அல்லது இல்லையா? சரீரத்தில் குடியிருக்கும் இந்த மனம், உடலுக்கு பூசை செய்பவன் எலும்பு, மாமிசம் முதலியவற்றிற்கு பூசை செய்யவில்லை, என்னையே பூசிக்கிறான் என்று நினைப்பது போல சர்வ-வியாபித்திருப்பவனும் விக்கிரக உருவிலும் இருப்பவன். பூசை செய்பவன் தன்னைத்தான் பூசித்துக்கொண்டிருக்கிறான், கல்லையோ மரத்தையோ பூசிக்கவில்லை என்பதை அறியமாட்டானா?<br /><br />உயிருக்கே பூசை நடக்கிறது. ஜடத்திற்கு அல்ல. ஆனால், உருவத்தை மீடியமாக வைத்துக்கொள்ளாமல் உயிரை பூசிப்பது நிகழவே முடியாது. எங்கும் நிறைந்தவன், சர்வேசுவரன், எல்லாம் அறிந்தவனின் பூசை விக்கிரத்தின் மூலமாகச் செய்யாமல், சாதுக்கள், பெரியோர்களின் உடலின் மூலமாக செய்வதில் ஒரு குற்றம் நிகழ்கிறது. அந்த (சாது, பெரியோர்களின்) உயிர் சரீரத்தின் பூசையை தன்னுடைய பூசையாக எண்ணி ஏற்றுக்கொள்கிறது. பூசை செய்பவனுடைய பார்வையும் அந்த உடலிடமே இருந்து விடலாம்; இருந்து விடுகிறது. கல், மரம் முதலிய விக்கிரகங்களின் மீடியத்தின் மூலம் பூசை செய்தால் பூசை செய்பவனுடைய பார்வையில் கல், மரம் முதலியவை இருப்பதில்லை. எந்த உயிரும் இருப்பதில்லை. அவன் நேராக ஈசனையே, ஆராதனைக்குரியவனையே பூசிக்கிறான். அவனுடைய பூசையை இடையில் தன்னுடையதாக கருதும் ஜீவன் ஏதும் அங்கு இல்லை. ஆகவே அந்த பூசை நேராக ஈசனையே அடைகிறது.<br /><br />“ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி” (சுக்ல யஜூர்வேதம் 32-2) என்கிறது வேதம். “அதற்கு உருவமில்லை” என்பது பொருள். ஏனெனில் ஆராதனைக்குறிய ஏதேனும் திருவுருவம் இருந்திருந்தால் அதை நேருக்கு நேர் காணாமல் எந்த விக்கிரமும் அமைய முடியாது. அவனும் வேறு மூர்த்தியை தன்னுடையதாக ஏற்பதில்லை. அப்போது பூசையே நாசமாகிவிடும். அவனுக்கு எந்த உருவமும் இல்லை. ஆகையினாலேயே எந்த விக்கிரகமும் அவனுடைய பூசைக்கு வழியாக முடிகிறது. <br /><br />அவன் எல்லா திருவுருவங்களிலும் இருக்கிறான். எல்லாம் அறிந்தவனாக இருப்பதால் தனக்கே பூசை நடக்கிறது என்பதையும் அறிகிறான். உயிருக்கு பூசையின் பேறு கிடையாது. பூசையின் அறிவு இருக்கிறது. அந்த அறிவே அவனை திருப்தி செய்கிறது. நீங்கள் மரியாதைக்குறியவரை பூசை செய்யும்போது (வணங்கி வாழ்த்தும்போது) பூசைப்பொருட்கள் எல்லாம் அவரது உடலுக்கு, ஐம்பூத உருவத்திற்கே கிடைக்கின்றன. அவரது உயிருக்கு (மனம், ஜீவன்) தனது பூசையின் அறிவு மட்டும்தான் கிடைக்கிறது. அந்த அறிவே அவரை திருப்திப்படைய செய்கிறது.<br /><br />ஏன் பூசை செய்யவேண்டும்? செயல் இல்லாமலோ, பொருட்களை அர்ப்பணிக்காமலோ, பாவனை பரிபக்குவம் அடையாது. அதனால் பூசை செய்யப்பட வேண்டும். நமது வாழ்வில் பொருளின் தேவையும், செயலின் பெருமையும் ஒன்றுக்கொன்று பொருந்தியுள்ளன. அதனால், நாம் பொருளை அர்ப்பணிக்காமலோ, செயல் செய்யாமலோ இருக்கும்போது நம் மனதில் பாவனையும் சரியாக அமைவதில்லை. தன் ஈடுபாட்டை வெளிப்படுத்தவும், பாவனையை வெளிக்காட்டி அதை திடப்படுத்தவும், பொருட்களை அர்ப்பணிப்பதும், செயல் மூலம் சேவை செய்வதும் வழியாகும்.<br /><br />வாழ்வில் செயலின் பெருமையும், பொருளின் தேவையும் முடிந்துவிட்டவனே பொருள், செயல் இன்றி மானசீக பூசைக்கு உரிமையுடையவன். இல்லாவிட்டால் மானசீக பாவனை மட்டுமே மிகவும் துல்லியமாக இருக்கும்; மனதில் அதன் நெருக்கம் இருக்காது. நீங்கள் உங்களுக்காக பொருட்களை விரும்பிச்சேர்க்கிறீர்கள். வேலையே மற்றவர் மூலம் செய்ய விரும்புகிறீர்கள். உங்களுக்கு விருப்பம் பொருளில், செயலில் இருக்கிறது. இனி அந்த விருப்பு பரமாத்மாவிடம், தேவனிடம், குருவிடம், சாதுக்களிடம் எந்த மீடியத்தின் மூலம் எழப்போகிறது? உங்களுக்கு விருப்பமான பொருட்கள், சரீரத்துக்கு சேவை தருமானால், விருப்பு அங்கு செல்லும், கற்பனையால் மட்டுமே செல்லாது.<br /><br />இதுவே பூசையின் ரகசியம். இதை அறியாமல் பூசையை இகழ்பவர்கள் பரிதாபத்துக்குறியவர்கள். இதை அறியாமல் மூட பூசை செய்பவர்கள் கண்டனத்துக்கு உறியவர்கள்.ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-18224650.post-1158642144380170352006-09-19T10:30:00.000+05:302006-09-19T11:27:53.433+05:30எந்த நிலையிலும் ஆசை - வைராக்ய சதகம் - VIIIமுன் <a href="http://vaithikasri.blogspot.com/2006/09/vii.html">பகுதியில் </a>14 ச்லோகம் வரை பார்த்தோம்.<br /><br />மேலும், தொடருகிறேன்....<br /><br />================<br /><br /><span style="font-weight:bold;">பாடல் - 15</span><br /><br /><br />bhikShA-shanaM tadapi nIrasam eka-vAraM <br />shayyA ca bhUH parijano nija-deha-mAtram |<br />vastraM vishIrNa-shata-khaNDa-mayI ca kanthA<br />hA hA tathApi viShayA na parityajanti ||15||<br /><br />भिक्षा-शनं तदपि नीरसम् एक-वारं <br />शय्या च भूः परिजनो निज-देह-मात्रम्।<br />वस्त्रं विशीर्ण-शत-खण्ड-मयी च कन्था<br />हा हा तथापि विषया न परित्यजन्ति॥१५॥<br /><br />பிக்ஷா-சனம்-ததபி-நீரஸமேகவாரம்<br />சய்யா ச பூ: பரிஜனோ நிஜ தேஹ மாத்ரம் |<br />வஸ்த்ரம் விசீர்ண சத கண்ட மயீ ச கந்தா<br />ஹா ஹா ததாபி விஷயா ந பரித்யஜந்தி || 15 ||<br /><br />===================<br /><br /><span style="font-weight:bold;">பொருள் - 15 </span><br /><br /><br />தினசரி ஒருவேளை கிடைக்கும் பிச்சையிட்ட, அதுவும் சுவையற்ற, உணவு; பூமியே படுக்கை; உண்மையில் (இவ்) உடல் மட்டுமே சேவகன்; தேய்ந்துபோய் நூறு துண்டுகளாகி தைத்த துணியே உடுப்பு; ஹா!! ஹா!! இருந்தாலும், விஷய சுகங்களை (ஒருவன்) விடுவதில்லை || 15 ||<br /><br />====================<br /><br /><span style="font-weight:bold;">மேலுரை - 15 </span><br /><br /><br />வாழ்க்கை நிராசையானவருக்கும் விஷயங்களில் ஆசை நிற்பதில்லை என்கிறார் கவி. எல்லா சாதனங்களை துறந்தோருக்கும் அவர்கள் அனுபவிக்காத சுகங்களில் ஆசை குறைவதில்லை. இதுவே ஆச்சரியம் என்பதை ஹா!! ஹா!! என்று வியக்கிறார். புவி (பூ:) என்பது கட்டாந்தரை என்பது சூட்சுமம். துறவிக்கு அவன் உடலே சேவகன் என்பது அவனுக்கு வேறு ஆதரவுகள் இல்லை என்பதை சுட்டும். இங்கு கவி தீராத ஆசையின் பிடியில் உழலும் தன்னைக் குறித்தே முக்கியமாக சொன்னாலும், பரித்யஜந்தி என்று பொதுவாகவே சுட்டி இதுவே உலக நியதி என்று காட்டுகிறார். || 15 ||<br /><br />======================ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18224650.post-1158553851234132622006-09-18T09:55:00.000+05:302006-09-26T23:18:26.130+05:30கண்ணீர் குடிக்கும் பறவைகள் - வைராக்ய சதகம் VII"வைராக்ய சதகம்" என்னும் இந்த அற்புத காவியத்தை மேலும் அனுபவிப்போம்.<br /><br /><br /><br />=========================<br /><br /><span style="font-weight:bold;">பாடல் 12 </span><br /><br /><br />avashyaM yAtArashcirataramuShitvApi viShayA<br />viyoge ko bhedastyajati na jano yat svayam amUn |<br />vrajantaH svAtantryAd atula-paritApAya manasaH<br />svayaM tyaktA hyete shama-sukham anantaM vidadhati ||12||<br /><br />अवश्यं यातारश्चिरतरमुषित्वापि विषया<br />वियोगे को भेदस्त्यजति न जनो यत् स्वयम् अमून्।<br />व्रजन्तः स्वातन्त्र्याद् अतुल-परितापाय मनसः<br />स्वयं त्यक्ता ह्येते शम-सुखम् अनन्तं विदधति॥१२॥<br /><br />அவச்யம் - யாதாரச்சிரதமுஷித்வாபி – விஷயா<br />வியோகே- கோ - பேதஸ்த்யஜதி - ந - ஜனோ - யத் - ஸ்வயம் - அமூன் |<br />வ்ரஜந்த;-ஸ்வாதந்த்ர்யாத் - அதுள - பரிதாபாய - மனஸ;<br />ஸ்வயம் - த்யக்தா - ஹ்யேதே - சம - ஸூகம் - அனந்தம் - விதததி || 12 ||<br /><br />===================<br /><br /><span style="font-weight:bold;">பொருள் - 12 </span><br /><br />As, Sensual pleasures surely leave us even if stayed with us long time, what difference is made, if we voluntarily discard them? (Because,) Sensual plesures cause incomparable misery if (they) leave us, but cause infinite bliss if we discard them with our self-control || 12 ||<br /><br />புலனின்பங்கள் பல காலம் நம்மிடம் இருந்தாலும், ஒருநாள் நம்மை பிறிகின்றன. அதனால், நாமே அவற்றை துறந்தால் என்ன வேறுபாடு (விளையும்?)? புலனின்பங்கள் நம்மை பிறிந்தால், எண்ணற்ற துயரமும், நாம் அவற்றை துறந்தால், சுயக்கட்டுப்பாட்டில் (விளைந்த) முடிவற்ற இன்பமும் (அல்லவா) கிடைக்கின்றன!! || 12 ||<br /><br />================<br /><br /><span style="font-weight:bold;">மேலுரை - 12 </span><br /><br /><br /><span style="font-style:italic;">கவி இங்கு விஷய சுகங்களின் இரண்டு குறைகளை சொல்கிறார். ஒன்று, அவை வரைமுறையுடையவை. எல்லாமே ஒருநாள் முடிவுக்கு வரும். (அதாவது, சுகங்கள் தரும் விஷயங்கள் முடியும். அல்லது, நம் இச்சை ருசி மாறிவிடும்). இரண்டாவது, அவை முடியும்போது அவற்றை இழந்ததால் மிக்க மனக்கஷ்டத்தையும் கொடுக்கும். இதை ஈடு செய்ய ஒரே வழி, நாமாகவே இந்த விஷய சுகங்களை ஒழித்துக்கட்டுவதுதான். அப்படி செய்தால், நம்மீது நமக்கு மதிப்பும், புலன்களை வென்ற அபரிதமான மகிழ்ச்சியும் கிடைக்கும்.<br /><br />இந்த உண்மை ஆன்மீக விஷயங்களில் மட்டுமல்லாது, உலக நடப்புகளிலும் உணரப்படுகின்றது. பல தீய பழக்கங்களை மக்கள் குற்ற உணர்ச்சியோடே அனுபவிக்கிறார்கள். மாறாக இன்பங்கள் நல்லதாக இருந்தாலும், அவற்றை நுகரும்போது இது எத்தனை நாளைக்கு என்று பயந்துகொண்டே அனுபவிக்கிறார்கள். இவை இரண்டும் இந்த ஆசைகளை துறந்தால் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும், என்கிறார் கவி.</span><br /><br />==========================<br /><br /><span style="font-weight:bold;">பாடல் - 13 </span><br /><br /><br />brahma-j~nAna-viveka-nirmala-dhiyaH kurvantyaho duShkaraM<br />yanmu~ncantyupabhoga-bhA~njyapi dhanAnyekAntato niHspR^ihAH |<br />samprAtAn na purA na saMprati na ca prAptau dR^iDha-pratyayAn<br />vA~nChA-mAtra-parigrahAn api paraM tyaktuM na shaktA vayam ||13||<br /><br />ब्रह्म-ज्ञान-विवेक-निर्मल-धियः कुर्वन्त्यहो दुष्करं<br />यन्मुञ्चन्त्युपभोग-भाञ्ज्यपि धनान्येकान्ततो निःस्पृहाः।<br />सम्प्रातान् न पुरा न संप्रति न च प्राप्तौ दृढ-प्रत्ययान्<br />वाञ्छा-मात्र-परिग्रहान् अपि परं त्यक्तुं न शक्ता वयम्॥१३॥<br /><br />ப்ரும்ம-ஞான-விவேக-நிர்மல-திய: குர்வந்த்யஹோ-துஷ்கரம் <br />யன்முங்ஜன்த்யுபபோக-பாங்ஜ்யபி-தனான்யேகாந்ததோ-நி:ஸ்ப்ருஹா: |<br />ஸம்ப்ராதான்-ந-புரா-ந ஸம்ப்ரதி-ந-ச ப்ராப்தௌ த்ருட-ப்ரத்ய்யான்<br />வாங்சா-மாத்ர-பரிக்ரஹான்-அபி-பரம்-த்யக்தும்-ந சக்தா வயம் || 13 ||<br /><br />=======================<br /><br /><span style="font-weight:bold;">பொருள் - 13 </span><br /><br /><br /><br />Ah! What a difficult feat is performed by blemishless, discriminating minds with knowledge of (ultimate) reality, for they renounce without craving entire wealths bringing enjoyment (to them). (Whereas), We are unable to discard even wealths missed in the past, not available now or uncertain in future, (though), though these wealths remain only in mind || 13 ||<br /><br />ஓ!! பகுத்தறிந்து ப்ரும்மஞானம் பெற்ற தூய்மையான மனங்களின் செயல் எவ்வளவு கடினமானது! அவை, சுகங்களுக்கு ஆதாரமான எல்லா செல்வங்களையும் பொருட்படுத்தாமல் துறக்கின்றனவே!! நாமோ, கிடைக்காமல் நழுவிய செல்வங்கள், இல்லாத செல்வங்கள், கிடைக்கும் என்று நம்பிக்கையற்ற செல்வங்களைக்கூட (மனதினால் கூட) துறக்க சக்தியற்றவர்களாக இருக்கிறோம். || 13 ||<br /><br />==================<br /><span style="font-weight:bold;"><br />மேலுரை - 13 </span><br /><br /><br /><span style="font-style:italic;">இந்த பாடலில் கவி நம் இயலாமையை சுட்டுகிறார். அல்பமான நம் மனங்கள் நம்மிடமில்லாத செல்வங்களை கூட ஆசைப்படாமல் இருக்க மறுக்கின்றன. கிட்டாதாயின் வெட்டென மறக்க கூட முடியாமல் ஆசை சூழ்ந்த நம் மனங்களுக்கு, எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பரப்பிரும்மத்தின் உண்மைநிலை உணர்ந்த மனம் தூய்மையானவர்கள், அவர்களின் கையிலுள்ள செல்வங்களை கூட முழுதும் துறப்பது விந்தையான செயலாக படுகிறது. இதனால், ஆசையை விடும் பக்குவம் உண்மை நிலையை பகுத்துணர்வர்களுக்கு எளிது என்கிறார் கவி.</span><br /><br />========================<br /><br /><br /><span style="font-weight:bold;">பாடல் - 14 </span><br /><br /><br />dhanyAnAM giri-kandareShu vasatAM jyotiH paraM dhyAyatAM-<br />AnandAshrukaNAn pibanti shakunA niHsha~Nkam a~NkeshayAH |<br />asmAkaM tu manorathoparacita-prAsAda-vApI-taTa-<br />krIDA-kAnana-keli-kautuka-juShAm AyuH paraM kShIyate ||14||<br /><br />धन्यानां गिरि-कन्दरेषु वसतां ज्योतिः परं ध्यायतां-<br />आनन्दाश्रुकणान् पिबन्ति शकुना निःशङ्कम् अङ्केशयाः।<br />अस्माकं तु मनोरथोपरचित-प्रासाद-वापी-तट-<br />क्रीडा-कानन-केलि-कौतुक-जुषाम् आयुः परं क्षीयते॥१४॥<br /><br />மலைக்குகைகளில் வசித்து, பரஞ்சோதியை தியானித்து பெருகும் ஆனந்த கண்ணீர்த்துளிகளை பயமில்லாமல் குடிக்கும் பறவைகள் அமர்ந்துள்ள மடியை உடையவர்கள் பேறு பெற்றவர்கள். என் வாழ்வோ, கற்பனையில் (தோன்றிய) அரண்மனைகளிலும், நீர்நிலை கரைகளிலும், உல்லாச தோட்டங்களிலும் விளையாடி வேகமாக கழிகின்றன || 14 ||<br /><br />==================<br /><br /><span style="font-weight:bold;">மேலுரை - 14</span><br /><br /><span style="font-style:italic;">எதுவுமில்லாமல் குகைகளில் வசிப்போர்கள் தியானத்தில் உண்மையான பேரின்பத்தை பெருகிறார்கள் என்கிறார் கவி. பரஞ்சோதி என்று சொல்வது உண்மையான ப்ரும்மத்தின் த்யான ஸ்வரூபம். அதை த்யானித்தால் எல்லையில்லாத இன்பத்தில் கண்ணீர் பெருகும். மற்றும் இவர்கள் சமாதி நிலையில் பறவைகள் அமரும் கல் போல உலகுக்கு தோன்றுவார்கள் என்பதை மடியில் பயமில்லாமல் அமரும் பறவையை சுட்டி உணர்த்துகிறார். இதற்கு நேர்மாறாக, ஒன்றுமில்லாமல் கற்பனையில் இன்பம் காணும் நம் இழிநிலையை சுட்டுகிறார். நிஜத்தை விட கற்பனையே அல்ப ஜீவன்களுக்கு ஆனந்தமாய் இருக்கிறது என்பது தாத்பர்யம். மேலும், அந்த கற்பனை நிஜமாகும்போது அந்த ஆனந்தம் இருப்பதில்லை என்பதும் இங்கு நுணுக்கம். </span> <br /><br />=============<br /><br /><br />மேலும் வரும்.....ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-18224650.post-1156411369400514982006-08-24T14:49:00.000+05:302006-09-17T20:27:08.066+05:30ஆசை என்னும் நதி - வைராக்ய சதகம் - VIவைராக்ய சதகம் (வைராக்கியம் நூறு) என்ற இந்த அற்புதமான பாடல் மேலும் தொடர்கிறது.<br /><br />முந்தைய பாகத்தை <a href="http://vaithikasri.blogspot.com/2006/08/blog-post.html">இங்கே</a> பார்த்தோம்.<br /><br />===================<br /><br /><br />AshA nAma nadI manoratha-jalA tR^iShNA-tara~NgAkulA<br />rAga-grAhavatI vitarka-vihagA dhairya-druma-dhvaMsinI<br />mohAvarta-sudustarAtigahanA prottu~Nga-cintA-taTI<br />tasyAH para-gatA vishuddhamanaso nandanti yogIshvarAH 10<br /><br /><br /><br />ஆஷா நாம நதீ மனோரத-ஜலா த்ருஷ்ணா-தரங்காகுலா<br />ராக-க்ராஹவதீ விதர்க-விஹகா-தைர்ய த்ரும த்வம்ஸினி<br />மோஹாவர்த-ஸூதுஸ்தராதிகஹனா ப்ரோத்துங்க-சிந்தா-தடீ<br />தஸ்யா: பர-கதா விசுத்தமனஸோ நந்தந்தீ யோகீச்வரா: 10<br /><br /><br /><br /><span style="font-size:130%;">आशा नाम नदी मनोरथ-जला तृष्णा-तरङ्गाकुला<br />राग-ग्राहवती वितर्क-विहगा धैर्य-द्रुम-ध्वंसिनी।<br />मोहावर्त-सुदुस्तरातिगहना प्रोत्तुङ्ग-चिन्ता-तटी<br />तस्याः पर-गता विशुद्धमनसो नन्दन्ति योगीश्वराः॥१०॥<br /></span><br /><span style="font-size:130%;">நம்பிக்கை என்னும் இந்த நதி விருப்பங்கள் என்னும் வெள்ளம் நிறைந்து, பொருட்களில் ஆசை என்னும் அலைகள் பெருத்து அடித்தபடி விரோதமான பேராசையெனும் காகங்கள் வசிக்க, புலனிச்சைகள் ஆர்ப்பரித்து இழுக்க, கரைகளிலுள்ள தைரியம் என்னும் மரங்களை வீழ்த்தியபடி ஓடுகிறது. மேலும், மோகங்களாலான ஆழமான சுழல்களையும், கவலை என்னும் உயரமான கரையையும் கொண்ட இந்த நதியை பெரும் யோகிகளே சுத்தமான மனதுடன் தாண்டி சுகமடைகிறார்கள் 10<br /><br /></span><br /><br />The river of hope flows, with fantasies as water, with agitating waves of desires, with birds of scheming greedy thoughts, attachments (to objects) grasping in, felling the trees of courage on its banks. With whirlpools of ignorance and steep banks of anxiety, Yogis pass this river with pure minds and enjoy supreme happiness.<br /><br />==================================================<br /><br /><br />na saMsArotpannaM caritam anupashyAmi kushalaM<br />vipAkaH puNyAnAM janayati bhayaM me vimR^ishataH<br />mahadbhiH puNyaughaishcira-parigR^ihItAshca viShayA<br />mahAnto jAyante vyasanamiva dAtuM viShayiNAm 11<br /><br /><br /><span style="font-size:130%;">न संसारोत्पन्नं चरितम् अनुपश्यामि कुशलं<br />विपाकः पुण्यानां जनयति भयं मे विमृशतः।<br />महद्भिः पुण्यौघैश्चिर-परिगृहीताश्च विषया<br />महान्तो जायन्ते व्यसनमिव दातुं विषयिणाम् ॥११॥<br /></span><br /><br />ந ஸம்ஸாரோத்பன்னம் சரிதம் அனுபச்யாமி குசலம்<br />விபாக: புண்யானாம் ஜனயதி பயம் மே விம்ருஶத:<br />மஹத்பி: புண்யௌகைச்சிர பரிக்ருஹீதாச்ச விஷயா<br />மஹாந்தோ ஜாயந்தே தாதும் விஷயிணாம் 11<br /><br /><br /><br />I don’t see (true) wellness arising from good-deeds performed in life after life. On deep thought, I am scared about huge accumulation of merits, resulting in constant fulfillment of sensual pleasures, ending up in further attachment to (sensual) objects, which produce misery. 11<br /><br /><span style="font-size:130%;">சம்சாரங்களில் இடையறாது செய்த புண்ணியங்களால் (முடிவான) நலம் (நான்) காணவில்லை. ஆழ்ந்து சிந்திக்கும்போது, (இந்த) புண்ணியங்களின் சேர்க்கை எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த புண்ணியங்களின் பெரும் சேர்க்கை, புலனின்பங்களை நுகர்ப்பித்து, விஷயங்களில் இன்னும் ஆட்பித்து பெரும் துயரத்தையே கொடுக்கின்றன. 11 </span>ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-18224650.post-1155896465051944402006-08-18T15:46:00.000+05:302006-09-01T22:09:12.406+05:30ஆசைக்கு நிந்தனை! - வைராக்ய சதகம்வைராக்ய சதகம் - நான்கு செய்யுள்களை <a href="http://vaithikasri.blogspot.com/2005/11/vairagya-shatakam-2-not-even-broken.html">முந்தைய பகுதியில்</a> பார்த்து அனுபவித்தோம்.<br /><br />தொடர்ந்து, இங்கே எழுதுகிறேன்.<br /><br />இங்கும் கவி ஆசையை மேலும் நிந்திக்கிறார்.<br /><br />=====================================================<br /><br /><span style="font-family:lucida grande;">amIShAM prANAnAM tulita-bisinI-patra-payasAM</span><br /><span style="font-family:lucida grande;">kR^ite kiM nAsmAbhir vigalita-vivekair vyavasitam |</span><br /><span style="font-family:lucida grande;">yad-ADhyAnAm agre draviNa-mada-niHsaMj~na-manasAM</span><br /><span style="font-family:lucida grande;">kR^itaM vIta vrIDair nija-guNa-kathA-pAtakamapi ||5||</span><br /><br />अमीषां प्राणानां तुलित-बिसिनी-पत्र-पयसां<br />कृते किं नास्माभिर् विगलित-विवेकैर् व्यवसितम्।<br />यद्-आढ्यानाम् अग्रे द्रविण-मद-निःसंज्ञ-मनसां<br />कृतं वीत व्रीडैर् निज-गुण-कथा-पातकमपि॥५॥<br /><br />அமீஷாம் ப்ராணானாம் துளித-பிஸினி பத்ர பயஸாம் |<br />க்ருதே கிம் நாஸ்மாபிர் விகலித- விவேகைர்- வ்யவஸிதம் ||<br />யதாட்யாநாம் அக்ரே த்ரவிண மதநி:ஸம்ய்ஞ-மனஸாம்<br />க்ருதம் வீத வ்ரீடைர்நிஜ குண கதா பாதகமபி || 5 ||<br /><br />What attempts for the sake of our life, as fickle as drops floating on lotus leaf! With stupefied minds, We committed the sin of shamelessly singing our self-praise stories in front of rich proud with their wealth || 5 ||<br /><br />தாமரையிலை தண்ணீர் போன்ற நிலையற்ற நம் உயிரை காப்பாற்ற விவேகம் இழந்து நாம் என்னவெல்லாம் செய்யவில்லை?<br /><br />பணத்தால் செருக்குற்ற செல்வர்களின் முன்னால் வெட்கமிழந்து குழப்பமான மனதுடன் தற்புகழ்ச்சி கதைகளை சொல்லும் பாவத்தை செய்தோம் || 5 ||<br /><br /><br /><br />விளக்கம் : ப்ராணா: - ப்ராணம் – உயிர்நாடி, வாழ்க்கை என்று இரண்டு விதமாக பார்க்கலாம். தற்புகழ்ச்சி பாவம். அதை பணத்துக்காக கர்வமானவர்களிடம் மனதை அடகுவைத்து செய்தோமே என்று வருந்துகிறார் கவி. நிலையற்ற வாழ்க்கைக்கான நிலையான தன்மானத்தை இழக்க கூடாது என்பது தாத்பர்யம். || 5 ||<br /><br />===================================================<br /><br /><br />क्षान्तं न क्षमया गृहोचित-सुखं त्यक्तं न सन्तोषतः<br />सोढा दुःसह-शीत-वात-तपन-क्लेशा न तप्तं तपः।<br />ध्यातं वित्तमहर्निशं नियमित-प्राणैर्न-शंभोः पदं<br />तत्-तत्-कर्म कृतं यद् एव मुनिभिस्तैस्तैः फलैर्वञ्चिताः॥६॥<br /><br />kShAntaM na kShamayA gR^ihocita-sukhaM tyaktaM na santoShataH<br />soDhA duHsaha-shIta-vAta-tapana-kleshA na taptaM tapaH |<br />dhyAtaM vittamaharnishaM niyamita-prANairna-shaMbhoH padaM<br />tat-tat-karma kR^itaM yad eva munibhistaistaiH phalairva~ncitAH ||6||<br /><br />க்ஷாந்தம் ந க்ஷமயா க்ருஹோசித-சுகம் த்யக்தம் ந ஸந்தோஷத:<br />ஸோடா து:ஸஹ ஶஈத-வாத-தபன-க்ளேஶஆ ந தப்தம் தப: |<br />த்யாதம் வித்தமஹர்னிஶம் நியமித-ப்ராணைர்ன-ஶம்போ: பதம்<br />தத்-தத்-கர்ம க்ருதம் யதேவ முனிபிஸ்தைஸ்தை: பளைர்வஞ்சிதா: || 6 ||<br /><br />We forgave not out of pardon (because of weakness); gave-up home comforts not out of happiness (but out of lack of fulfillment); tolerated unberable cold, wind and heat not for penance (but without austerities); controlling senses, intensely thought of riches day and night but not of Shiva’s feet. Thus, We have performed all like ascetic saints, but without any benefits. || 6 ||<br /><br />தவறான காரியங்களை பொறுத்தோம், மன்னிப்பினால் அல்ல (ஆனால், பலமின்மையால்). வீட்டு சுகங்களை துறந்தோம், ஆனால் சந்தோஷப்பட்டு அல்ல (ஆனால், திருப்தியின்மையால்). பொறுக்க இயலாத குளிர், வெயில், காற்றை சகித்தோம், ஆனால், தவத்திற்காக அல்ல. தன்னை அடக்கி இரவு பகல் செல்வங்களை தியானித்தோம், பரமேச்வரன் திருவடிகளை அல்ல. இந்த செயல்கள் எல்லாம் முனிவர்களை ஒத்து செய்தோம், ஆனால் பலன் ஏதுமில்லை! || 6 ||<br /><br />விளக்கம்: பொறுமையாக இருப்பது, அவசியமான சுகங்களை விடுவது, குளிர்-வெயில் என்று பாராமல் முயற்சி செய்வது எல்லாம் முனிவர்களின் இயல்புகள். அவைகளை நாமும் செய்கிறோம், ஆனால் பலனில்லை. காரணம், இறைவனின் திருவடிகளுக்காக முயற்சிக்காமல் சம்சாரத்திற்காக உழலுகிறோம்.<br /><br />7. भोगा न भुक्ता वयमेव भुक्ताः<br />तपो न तप्तं वयमेव तप्ताः।<br />कालो न यातो वयमेव याताः<br />तृष्णा न जीर्णा वयमेव जीर्णाः॥७॥<br /><br />bhogA na bhuktA vayameva bhuktAH<br />tapo na taptaM vayameva taptAH |<br />kAlo na yAto vayameva yAtAH<br />tR^iShNA na jIrNA vayameva jIrNAH ||7||<br /><br />போகா ந புக்தா வயமேவ புக்தா:<br />தபோ ந தப்தம் வயமேவ தப்தா: |<br />காலோ ந யாதோ வயமேவ யாதா:<br />த்ருஷ்ணா ந ஜீர்ணா வயமேவ ஜீர்ணா: || 7 ||<br /><br />While attempting enjoyment of mundane wordly pleasures, We ourselves got consumed (in desires); Attempting austerities, We got ourselves burned; attempting to spend time, Our life has come to an end; Alas, our desires did not get satisfied, but we ourselves are consumed in desires. || 7 ||<br /><br /><br />உலக சுகங்களை அனுபவிக்க முயன்று, நாமே அந்த சுகங்களுக்கு இறையானோம். தவம் செய்ய முயன்று, நாமே தவித்தோம். காலத்தை கழிக்க முயன்று நாமே (வாழ்க்கையின்) முடிவை எட்டினோம். (அந்தோ!), ஆசையை ஜீரணம் செய்ய முயன்று நாமே அதற்கு இரையானோம் || 7 ||<br /><br /><br /><br />விளக்கம்: ஆசைக்கு தீனி போட்டு மனிதனே தன் ஆயுளை அதற்கு பலியாக்குகிறான் என்கிறார் கவி. இந்த செய்யுளில், போகா - போக்தா भोगा - भोक्ता (நுகரும் இன்பம் - நுகர்பவன்) தபம் - தப்யம் तपं - तप्यं (தவம் - தவிப்பு) என்கிற ஜோடி வார்த்தைகள் அனுபவிக்க ரசமானவை. भोगं போகம் என்பதை உலக சுகம் என்று தமிழ்படுத்தியுள்ளேன் || 7 ||<br /><br /><br />बलीभिर्मुखमाक्रान्तं पलिनेताङ्कितं शिरः।<br />गात्राणि शिथिलायन्ते तृष्णैका तरुणायते॥८॥<br /><br />balIbhirmukhamAkrAntaM palinetA~NkitaM shiraH |<br />gAtrANi shithilAyante tR^iShNaikA taruNAyate ||8||<br /><br />பலீபிர் முகமாக்ராந்தம் பலிநேதாங்கிதம் சிர: |<br />காத்ராணி சிதிலாயந்தே த்ருஷ்ணௌகா தருணாயதே || 8 ||<br /><br /><br />வரிகள் நிறைந்த சுருங்கிய முகம், நரைமுடிகளால் தாக்கப்பட்டு வெள்ளையாக்கப்பட்ட தலை, தளர்ந்து போன அங்கங்கள், ஆசை மட்டுமே இளைமையாக இருக்கிறது!! || 8 ||<br /><br /><br />விளக்கம்: வாழ்க்கையின் இறுதியிலும் ஆசையின் தாக்கம் குறைவதில்லை என்கிறார் கவி. நரைமுடிகள் தலையை தாக்குவதாக (आक्रान्तं) சொல்வது கவிதை நயம்.<br /><br /><br /><br />nivR^ittA bhogecChA puruSha bahumAno.api galitaH<br />samAnAH svaryAtAH sapadi suhR^ido jIvitasamAH |<br />shanairyaShTyutthAnaM ghana-timira-ruddhe ca nayane<br />aho mUDhaH kAyastadapi maraNApAya-cakitaH ||9||<br /><br />निवृत्ता भोगेच्छा पुरुष बहुमानोऽपि गलितः<br />समानाः स्वर्याताः सपदि सुहृदो जीवितसमाः।<br />शनैर्यष्ट्युत्थानं घन-तिमिर-रुद्धे च नयने<br />अहो मूढः कायस्तदपि मरणापाय-चकितः॥९॥<br /><br /><br />நிவ்ருத்தா போகேச்சா புருஷ பகுமானோபி கலித: |<br /><br />ஸமானா: ஸ்வர்யாதா: ஸபதி ஸூஹ்ருதோ ஜீவிதஸமா; |<br /><br />ஶனைர் யஷ்ட்யுத்தானம் கன திமிர ருத்தே ச நயனே<br /><br />அஹோ மூட: காயஸ்ததபி மரணாபாய சகித: || 9 ||<br /><br /><br /><br />(சுகங்களில்) இச்சை இறங்கிவிட்டது. மனிதன் என்கிற கௌரவமும் போய்விட்டது. (என்) சமமான நண்பர்களோ சொர்க்கத்துக்கு விரைவாக ஓடி விட்டார்கள். (என்) வாழ்க்கையோ கோல் ஊன்றி மெதுவாக எழும்பும் நிலை. இரண்டு கண்களும் கூட கனமான திரைகளால் மூடப்பட்டன. அந்தோ!! இருந்த போதிலும், இந்த முட்டாள் உடம்பு மரணத்தை எண்ணி நடுங்குகிறது. || 10 ||<br /><br />விளக்கம் - புருஷன் என்கிற கௌரவமும் போனது என்பதில் கவி – அந்த पुरुषः என்கிற பதத்தில் கணவன், ஆண்பிள்ளை, மனிதன் என்று மூன்று விதமான அர்த்தங்களில் யோசிக்கலாம். சமமான நண்பர்கள் सुहृदो समानाः ஸூஹ்ருதோ ஸமானா: என்பது ஒரு அற்புதமான பதம். சொர்க்கத்துக்கு ஓடிவிட்டதாக (ஆயாதா:) சொல்வது சுவை.<br /><br />======================<br /><br />மேலும் தொடரும்....<br /><br />தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பும், விளக்கங்களும் என்னுடையவை.<br /><br />பிழைகளையும், font குழப்பங்களையும் தயை செய்து எனக்கு தெரியப்படுத்தவும்.<br /><br />நன்றிஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-18224650.post-1151084769568675562006-06-23T23:11:00.000+05:302006-08-12T16:03:36.906+05:30அகலிகைஅகலிகை. இது தழிழாக்கப்பட்ட பெயர். சரியான பெயர் = ‘அஹல்யா’ . அதாவது, ‘அழகின்மையே இல்லாதவள்’ என்று பொருள். அதாவது, அழகே வடிவானவள்.<br /><br />இவள் கதை வினோதமானது. ஆச்சரியகரமானது. பலப்பல பரிமாணங்களை தாங்கியது. ஆனால், பெண்ணியவாதிகளின் பலத்த சர்ச்சைக்கு இலக்கானது. <br /><br />கற்பு என்னும் கனலுக்கு சனாதன தர்மத்தில் சரியான இலக்கணம் என்ன என்பதை இவள் கதை நமக்கு உணர்த்துகிறது.<br /><br />அகலிகை படைப்பும் அவள் வாழ்வும் வினோதம்! அதனால், அவள் பெற்ற தாழ்வும், இறுதியில் மீள்வும் அந்த மீள்வு கொடுத்த புகழும் மேலும் வினோதம்.<br /><br />அகலிகை உடம்பாலும், மனதாலும் கெட்டவள். ஆனால், அதற்காக அவள் புகழ் அழிக்கப்படவில்லை. மாறாக, கற்பரசிகளில் முதன்மை தகுதி பெற்றவள். புராணங்களில் பேசப்படும் ஐந்து பதிவிரதைகளில் முதலில் வணங்கப்படுபவள். பிராட்டி சீதையைக்கூட இவ்விழயத்தில் முந்தியவள். இதுதான் ஆச்சரியகரம். <br /><br /><br />இதுவே பெண்மைக்கும் கற்புக்கும் சனாதன புராணம் காட்டும் நியதி. கற்பு சாஸ்திரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.<br /><br />இவள் கதை ராமாயணத்தில் மிகச்சிறிதாக பேசப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் ஒரு நாற்பது ஸ்லோகங்களில் இவளின் நிகழ்ச்சி அடங்குகிறது. ஆனாலும், அகலிகை மிகப் பெரிய சக்தியாக பேசப்படுகிறாள். அகலிகை கதை பாடாமல் ராமாயண காதை பேசப்படுவதில்லை.<br /><br />அகலிகையின் கதையில் நுட்பங்கள் பலருக்கு தெரிவதில்லை. அகலிகை தவறு இழைக்காதவள் என்கிறார்கள். அகலிகை ராமர் கால்பட்டு சாபம் நீங்கினாள் என்கிறார்கள்.<br /><br />இவள் கதையை முழுமையாக எழுதவும், கற்பு நெறிக்கு சரியான இலக்கணத்தை சுட்டிக்காட்டவும் இந்த பதிவு இட ஆசைப்பட்டேன்.<br /><br />விச்வாமித்திரர் ஐயனை காட்டுக்கு அழைத்துப்போனது, பிராட்டியை மணமுடிக்க என்று புராணக்காரர்கள் பேசுகிறார்கள். ஆனால், அருணகிரியார் அவ்வாறு சொல்லவில்லை. ஐயன் காடேந்தது அகலிகைக்கு அருள் வழங்க என்கிறார்.<br /><br />“கல்லிலே பொற்றாள் படவேயது<br />நல்ல ரூபத்தே வரக்கானிடை<br />கௌவை தீரப்போகும் இராகவன்” <br />(கொள்ளையாசை – திருப்புகழ்)<br /><br />ஆயிரம் வருடங்களாக ஐயன் ராமன் கால் தூசிக்கு ஏங்கியிருக்கும் இந்த பக்தையை மீட்க காட்டிற்கு வந்தான் ஐயன் என்கிறார் அருணகிரி.<br /><br />முதலில் இவள் புராண கதை.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/0157.0.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/0157.0.jpg" border="0" alt="" /></a><br /><br />உலகில் படைத்த பெண்களின் அழகை எல்லாம் சேர்த்து இவளை படைத்தான் படைப்புத்தேவன் பிரம்மா. அத்துணை அழகு.<br /><br />படைத்தவன் அவளை கௌதமரிடம் மணமுடித்தான். கௌதமர் சப்தரிஷிகளில் ஒருவர். தவத்தில் மிகப் பெருமை வாய்ந்தவர். அவர் உயரிய பண்புகளை உடையவர். பிரம்மா, இந்த அழகைத்திரட்டிய பெண்ணை காக்க புலன்களை அடக்கிய முனிவரே சிறந்தவர் என்று கருதினான் போலும்.<br /><br />காமம் யாரை விட்டது? அது நம் படைப்பின் காரணம் இல்லையா! நம் உடற்கூறின் உந்துதலில் நியதிகள் சிலசமயம் கண்ணுக்கு தெரிவதில்லை போலும். மாற்றான் மனைவிக்கு ஏங்கினான் தேவன் இந்திரன். <br /><br />இடையே ஒரு விளக்கம். தேவர்கள் நம்மைப்போல கர்மங்களுக்கும், வாசனைகளுக்கும் (ஆசை, வெறுப்பு) உட்பட்டவர்கள். இவர்கள் தெய்வம் இல்லை. (பார்க்க என் முந்தைய ஒரு பதிவு : ‘இந்து மத்த்தில் பல தைவம் உண்டா’.) சனாதன தர்மத்தில் ‘முப்பத்து முக்கோடி தெய்வங்கள்’ என்றெல்லாம் பேசுவதும், எழுதுவதும் அறியாமை மூடத்தனம். தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் வித்தியாசம் தெரியாததால்.<br /><br />காமத்தால் அறிவு மங்குகிறது. ‘மையலால் அறிவு நீங்கி’ என்பது கம்பன் வரிகள். இந்திரன் சொல் கேட்டு சந்திரன் நள்ளிரவில் கோழிபோல கூவுகிறான். முனிவர் எழுந்து நதிக்கரைக்கு குளிக்க செல்லுகிறார்.<br /><br />இந்து சாத்திரம் ஒரு அதீதமான விஞ்ஞானம். இங்கு கோட்பாடுகள் நம்பிக்கையால் மட்டும் நிகழ்வதில்லை. மண்ணால் ஆன உடலை மந்திர உடலாக்க நித்தமும் முயற்சி தேவை. மந்திரங்கள் மொழிகள் அல்ல. அவை தகுந்த குருவினால் ஏற்றப்படும் மின்சார கோள்கள். அவற்றை தக்க வைத்துக்கொள்ள வாழ்வாங்கு வாழவேண்டும். வெறும் மந்திர புத்தகத்தை படித்தால் இறையாண்மை வந்துவிடாது.<br /><br />அருணோதய காலத்தில் (காலை சுமார் 4 ½ மணி அளவில்) குளிக்க வேண்டும் என்கிறது சாத்திரம். ஆதவன் எழும் முன்னே எழாதவன் பாபங்களை சுமக்கிறான். ராமாயணத்தில் பரதன் ஐயனை காட்டுக்கு அனுப்ப தான் காரணமாகியதற்கு வருந்துகிறான். அப்போது, ராமனை காட்டிற்கு அனுப்பியவர்கள் எத்துனை பாவங்களை சுமப்பார்கள் என்று சபிக்கிறான். அதில் ஒன்று, அதிகாலை தூங்குபவர்கள் பெறும் பாவம். <br /><br />இந்திரனோ முனிவர் உருவில் வந்தான். அவள் இந்திரன் என்று அகலிகை அறியாமல் இருந்தாள் என்று சிலர் பேசுவதும் தவறு. பெண்ணுக்கு மாற்றானை புரியாதா என்ன? ஒட்டு மீசை வைத்து உலகையே ஏமாற்றுவது இந்நாளைய சினிமாவில்தானே சாத்தியம். <br /><br />கணவன் கால் செருப்பை கழற்றும் சத்தம் கூட மனைவிக்கு தெரியும் என்பார்கள். <br /><br />தேவேந்திரனை கண்ட அகலிகை அவன் மீது மையல் கொண்டாள். <br /><br />அகலிகை அறியாமல் குற்றம் செய்தாள் என்று கவிகள் மழுப்பவில்லை. தன் அழகை அனுபவிக்க தேவேந்திரனே வந்தான் என்று ஆணவத்தில் சந்தோஷப்பட்டாள் என்கிறார் வால்மீகி. ('தேவராஜ குதூஹலாத்'). இவ்வாறு தெரிந்து தவறிழைத்ததால் அவள் தாழ்ந்து போனாள் என்கிறான் கம்பநாடான்.<br /><br />தக்கது அன்று என்ன ஓராள்... <br />தாழ்ந்தனள் இருப்பத் தாழா<br />முக்கணான் அனைய ஆற்றல் ... <br />முனிவனும் முடுகி வந்தான்....<br /><br />சென்ற முனிவர், காலம் தவறாக தென்பட்டதை உணர்ந்து திரும்புகிறார். அத்துணை தவ வலிமை பெற்ற முதலிடை முனிவர்களில் ஒருவருக்கு நடக்கும் பிழை தெரியாமல் இருக்குமா என்ன? ஆனால், முன்னமேயே தெரிந்து அவர் அதை தடுக்க மாட்டாததே ஒரு ஆச்சரியம். இறைவன் சித்தத்தில் முனிவரின் கவனம் முன்னமேயே இதில் விழவில்லை போலும்!<br /><br />முனிவர் திரும்பியதும் இந்திரன் பூனை வடிவம் எடுத்து தப்பியோட பார்க்கிறான். முனிவரிடம் தப்ப முடியவில்லை.<br /><br />உலகிற்கு நிரந்தரமான நெடிய பழி தேடி வைத்தவள் அகலிகை (இது கம்பன் வரிகள்). திரும்பிய முனிவரை பார்த்து பயந்து நிற்கிறாள். 'ஒரு விலைமகளைப் போல நடந்து கொண்ட நீயும் கருங்கல்லாய் கிட..' என்று அகலிகையை சபித்தார் முனிவர்.<br /><br />"மெல்லியலாளை நோக்கி விலைமகள் அனைய நீயும்<br />கல்லியல் ஆதி என்றான் கருங்கல்லாய் மருங்கு வீழ்வாள்."<br /><br />கருங்கல்லாய் ஆனாள் என்பது புராண செய்தி. அதை ஒட்டியே கம்பன் இங்கு பாடுகிறான். "கல்லியல் ஆதி" என்கிறான்.<br /><br />ஆனால், ஆதி காவியமான வால்மீகி ராமாயணத்தில் அவ்வாறு இல்லை. 'அன்ன ஆகாரம் இல்லாமல், யார் கண்ணிலும் படாது இங்கேயே நெடுநாள் கிட' என்பதாகவே சபிக்கப்படுகிறாள். "வாயுபக்ஷா நிராஹாரா தப்யந்தீ பஸ்மசாயினீ" என்பதே வால்மீகி வாக்கியம்.<br /><br />இது சாபமா என்று கேட்டால், முழுதாக சாபம் இல்லை என்பேன். தவம் செய்து கிட என்கிறார் முனிவர். தவம் செய்வது தண்டனையா? இல்லையே? தண்டனைகள் மிருகங்களை இன்னும் கொடிய மிருகமாக்க இல்லை! அவை மிருகத்தனம் களைந்து தேவ ஒளியை தோற்றுவிப்பதற்கே! <br /><br />இதுவே முனிவர் அளித்த சாபம் என்கிற வரம்.....<br /><br />இந்த சாபத்தில் இன்னொரு பாடமும் இருக்கிறது. <br /><br />கம்பன் சொன்ன 'கல் போல் கிட' என்பது ஏன்? அந்நிய ஆடவன் தீண்டும்போது (மனதை, உடலை) கல் போல் கிடக்க வேண்டியவள் பெண். அப்படி இல்லாது இருந்ததால் 'கல்லியல் ஆதி' (கல் போல் கிட) என்று உணர்த்துகிறார் முனிவர். சாப வடிவில்.<br /><br />அகலிகை சாபம் பெற்றாள். ஆனால், தேவேந்திரனுக்கு என்ன சாபம் கிடைத்தது? பெண்ணியவாதிகள் அகலிகையே கஷ்டப்பட்டாள், வழக்கம்போல ஆண்கள் தப்பிவிட்டார்கள் என்கிறார்களே, அது மிகவும் தவறு.<br /><br />பாவத்திற்கு மூலமான இந்திரனுக்கு தண்டனை இல்லையா. நிச்சயம் இருந்தது. அது அகலிகையை விட கடுமையாக இருந்தது. <br /><br />அகலிகைக்கு கிடைத்ததோ நிராகரிப்பு. இது மனதை வாட்டும். ஆனால், தேவேந்திரனுக்கு கிடைத்ததோ அவமானம். ஆயிரம் பங்கு கொடியது. இது உயிருடன் எரிக்கும்.<br /><br />முனிவர் இந்திரனை மேலே சாபமிட்டார் இவ்வாறு...<br /><br />‘தேவேந்திரா! இந்த பாவச்செயலுக்கு உனக்கு என்ன தண்டனை தெரியுமா? உன் வாழ்நாள் முழுக்க நீ அலியாவாய். அது மட்டும் உனக்கு போதாது. எந்த யோனியில் நீ லயித்து இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும்.’ <br /><br />இதுதான் அந்த தவசி சொன்ன சாபம்.<br /><br />அப்பப்பா என்ன கொடுமை!! கல்லாகி காட்டில் கிடப்பதை விட ஆயிரம் பங்கு கொடியது. அவமானத்தில் ஒளிந்து ஒளிந்து வாழ்வது.<br /><br />இந்த கொடிய சாபம் பெற்ற இந்திரன் இந்த சாபத்துக்கு தக்கவனே!!<br /><br />(பிறகு மற்ற தேவர்கள் இந்திரனை அழைத்து அவனுக்கு பல தவத்தை செய்வித்து அவன் உடலில் தோன்றிய உறுப்புகளை ஆயிரம் கண்களாக மாற்றி அவன் ஒருவாறு அவமானத்துடன் வாழ வழி செய்கிறார்கள்... அது ஒரு கிளைக்கதை.. <br /><br />இந்த கிளைக்கதையின் தாத்பர்யம் என்ன?<br /><br />அதாவது, அவமானம் இந்திரனுக்கு ஒரு குறியாக (symbol) ஆக மட்டுமே இருக்கட்டும். அவனை அவமானப்படுத்தும் நோக்கில், பெண்ணினத்தை அவமானப்படுத்த வேண்டாம் என்பது இங்கு குறிக்கிறது.... )<br /><br />தனக்கேற்பட்ட சாப நிலை குறித்து அகலிகை விக்கித்து நிற்கிறாள். <br /><br />அந்த தவக்கனல் வருந்தி வாடும் அகலிகைக்கு மோட்சமும் வழங்குகிறார். <br /><br />சாப விமோசனம் எப்போ என்று கதறி அழும் அகலிகைக்கு முனிவர் வாயிலிருந்து "தசரதன் மகனாக பிறக்கும் இராமன் என்பவன் வரும் போது அவன் பாத தூளி உன்மேல் படும்போது இந்த கல் வடிவை விடு" என விமோசனத்திற்கு வழி கிடைக்கிறது.<br /><br />("தண்டார்த் தசரத ராமன் என்பான் கழற்றுகள் கதுவ இந்தக் கல்லுருத் தவிர்தி என்றான்")<br /><br />இது வாடலில் முனிவர் கொடுத்த ஒரு சிறு சுகம். மீளுகைக்கு வழி தெரிந்து காத்திருத்தலில் வலி குறைகிறது.<br /><br />ராமன் கால் பட்டு எழுந்தாள் என்று பலரும் சொல்வதில் முழு உண்மையில்லை. <br /><br />ராம்பிரான் கால் தூள் பட்டு (கால் பட்டு இல்லை!) அகலிகை மீண்டாள் என்றே வால்மீகியும், கம்பனும் விளக்கமாக சொல்கிறார்கள் ("கழல் துகள்" என்றே கம்பன் பாடலில் வருகிறது). <br /><br />என்ன இருந்தாலும் அகலிகை மாற்றான் மனைவி. ஏக பத்தினி விரதனான ஐயன் ராமன் கால் அவள் மேல் பட்டது என்பது கூட சரியில்லை என்பதே கவிகளின் தெளிவு.<br /><br />ஆச்ரமத்துக்கு ஏவிய ஐயன் கால் துகள் பட்டு அகலிகை கல்லிலிருந்து உரு பெற்று நிற்கிறாள். அகலிகை எழுந்ததும் 'அன்னையே' என்று அவளை அழைக்கிறான் ராமன். <br /><br />அவள் யார், ஏன் கல்லில் மறைந்திருந்தாள், இப்போது எப்படி தோன்றினாள் என்று விச்வாமித்திரர் விளக்குகிறார். <br /><br />அவள் வரலாற்றை (வழி தவறிய விவரத்தை) அறிந்ததும் ராமன் மீண்டும் அவளை 'அன்னையே' என்று அழைக்கிறான். <br /><br />அவன் அகலிகை மேல் இருந்த முதல் எண்ணத்தை சிறிதும் மாற்றவில்லை.<br /><br />பொதுவாக பெண்களை அம்மா, தாயே என்று மரபாக அழைப்பதும், அவள் தாழ்ந்துவிட்டாள் என்று அறிந்ததும் மாறுவதும் வழக்கம்தானே? <br /><br />ஆனால், இராமனோ "போது நீ அன்னை என்று பொன்னடி வணங்கிப்போனான்.." என்கிறார் கம்பன்.<br /><br />அதாவது, மறுபடியும் அவளை அன்னையே என்று அழைத்து அவள் காலடியில் விழுந்து வணங்கி விடை பெறுகிறான் ராமன்.<br /><br />என்ன ஆச்சரியம்! ஒரு முன்னாள் குற்றவாளியை இன்னாள் அருள்தலைவன் வணங்க வேண்டுமா? அதுவும் அன்னையே என்று அழைக்க வேண்டுமா?<br /><br />அகலிகை ராமனுக்கு அன்னைதான்! மிகவும் மூலமான அன்னை!<br /><br />இந்த விளக்கம் பேராசிரியர் திரு.ராதாகிருஷ்ணன் சொல்லி கேட்டிருக்கிறேன்...<br /><br />இராமன் அன்னையே என்றழைக்க உரிமை உள்ளவர்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகிய மூவர். தன்னை பெற்றவள், தகப்பனின் மாற்று இல்லத்தரசிகள் என்ற முறையில்... <br /><br />ஆனால், அகலிகை.. <br /><br />சாபம் பெற்ற நாள் முதல் ராமனை எதிர்பார்க்கிறாள் அகலிகை. <br /><br />தசரதன் மகனாக அந்த இறைவனே இராமனாக வரவேண்டும் என்று அகலிகை முதலில் அறிவாள். <br /><br />இராமன் தசரதன் மைந்தனாகும் முன்னே முனிவரின் வாயால் பிறந்துவிட்டான். உண்மைதானே!<br /><br />ஊன் உடம்பாக கோசலை திருவயிறில் தாங்கும் முன்னே, அகலிகையின் மனக்கருவில் உருவாகிவிட்டான் எம்பிரான். ராமனுக்காக, தசரதனுக்கு முன்னே, பல வருடம் மனதில் தவம் இருந்தாள் அகலிகை... <br /><br />அப்படியானால், அகலிகை இராமனுக்கு அன்னைதானே??<br /><br />அதனால், இராமன் கௌதம முனிவரை அணுகி "நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ நேர்க" என்கிறான். "நெஞ்சில் குற்றமற்ற இவளை நீங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள்" என்கிறாள்.<br /><br />உடலால் ஏற்பட்ட குற்றங்களுக்கு பெண் என்றும் பொறுப்பல்ல. உடற்கூறுதான் காரணம். மனதால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான். <br /><br />தீய எண்ணத்தால் ஏற்படும் தவறுக்கே மனிதன் பொறுப்பாகிறான். தீய எண்ணத்தில் தோன்றிய தவறை நல்ல எண்ணத்தால் மட்டுமே அழித்து எழுத முடியும். ராம, ராம என்ற தாரக மந்திரத்தால் ஆண்டுகள் பல ஐயனுக்காக ஏங்கி காத்திருந்த அந்த மனதில் எல்லா குற்றங்களும் பொசுங்கிவிட்டன. ராமனை வணங்கிய நெஞ்சு குற்றமற்றது. <br /><br />அதனால், அவள் "நெஞ்சினால் பிழைப்பிலாள்" என்று ஆகிறாள்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/1068/940/1600/977b.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/1068/940/320/977b.jpg" border="0" alt="" /></a><br /><br />ராமாயணம் காட்டும் நீதி இதுவே! கற்பு என்பது போட்டால் உடைந்துவிடும் மண்சட்டி அல்ல.<br /><br />இந்த கதையில் நாம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். அகலிகை வந்தவன் மாற்றான் இந்திரன் என்று அறிந்தும் அவன் பேற் கொண்ட ப்ரேமையால் மயங்கி தவறிழைத்தாள். அதை நினைத்து மனமாற வருந்தி மன்னிப்பு கேட்கிறாள். அவள் மனமார திருந்தியதால், முனிவர் கௌதமரும் நல்வழி காட்டுகிறார். <br /><br />ஒவ்வொரு வினையும் எதிர்வினை கொண்டதாகிறது. ஒரு காரணமும் ஒரு காரியத்தில் விளைகிறது. ஒவ்வொரு தவறும் தண்டனைக்கு உரியதாகிறது. <br /><br />ஒவ்வொரு வருந்துதலும் மீட்புக்கு கதவு திறக்கிறது. ஒவ்வொரு தவத்திற்கும் பலன் கிடைக்கிறது. <br /><br />இதுதான் இங்கு காணும் கோட்பாடு.<br /><br />தன் கதையால், அகலிகை நமக்கு வேதாந்தத்தையும் போதிக்கிறாள். முனிவர் கௌதமர் ஒரு ஜிதேந்திரியர் (புலன்களை வென்றவர்). அவர் அகலிகை என்கிற பக்தியுடன் வாழ்கிறார். <br /><br />அந்த பக்தி இந்திரன் என்கிற மனதால் களங்கப்படும் போது, மனதுக்கு அடிமையாகி அந்த ஜிதேந்திரயருடமிருந்து நழுவுகிறது. <br /><br />பின், அந்த பக்தி புலன்களில் வெறுப்புற்று வருந்தி, கல் போல தவத்தில் கிடக்கிறது. (அதாவது, புற உலகிடமிருந்து ஒடுங்கி... அதாவது புலன்களிடமிருந்து விடுபட்டு....) <br /><br />அந்த தவத்தின் விளைவாக, அகண்டமான இந்த பிரம்மத்தின் கருணையால், களங்கம் கலைந்து தன் சுய பிரதாபம் ஏற்று தன் ஜிதேந்திரிய தலைவனும் இணைகிறது.<br /><br />இக்கதை பாவர்களுக்கு என்றும் ஊக்கமளிக்கிறது. <br /><br />தவத்தால் பாவங்களை கழுவி தன் பழைய பிரகாசத்தை எந்த ஜீவனும் அடைய முடியும் என்பது இந்த கதையின் திரிபு. <br /><br />ஜீவன் ஆசாபாசங்களால் எப்போதும் கட்டுண்டவன். அதனால் தன் சீலத்தை இழந்தவன். அதை தவத்தாலும் தியாகத்தாலும் அவன் பெற வேண்டும்; பெற முடியும். <br /><br />இதைப்பெற ஆக்கமான ஒரு வளர் பாதையே மந்திரங்கள். தன் வழியில் சத்தியத்திலிருந்து விலகாமல் இருக்க அவன் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். <br /><br />அவ்வாறு மடத்தனத்தால் விலகினாலும், உண்மை வருத்தத்தில் விளைந்த கண்ணீர், மேலும் தவறிழைக்காமல் இருக்க உறுதி, உழைப்பில் விளைந்த தவம் என்பவற்றால் எந்த பாவமும் இல்லாது எறிந்து போகும்.<br /><br />ராமாயணத்தில் மந்திர சாத்திரத்தை ஏற்றி இயற்றப்பட்ட அற்புதமான வடமொழி காவியம் 'அத்யாத்ம ராமாயணம்'. அதில் அகலிகை இராமன் குறித்து வணங்கிய ஸ்தோத்திரம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அகலிகை தன்னை மீட்ட அந்த சிறுவன் கோலத்தில் உள்ள ஐயனை துதிக்கிறாள். <br /><br />அந்த துதி பரம பாவனாமனது. பரம வீரியமானது. அந்த துதியில் மனமுருகி பாடுவோருக்கு ராமன் உருவம் கண்ணிலேயே காண்பது போன்று அமைந்திருக்கிறது. மிகவும் தரத்தில் வீழ்ந்து நாம் செய்யும் எல்லா பாவங்களையும் பொசுக்கும் அந்த மகா துதியை நாமும் துதித்து ஈடேறுவோமாக.ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-18224650.post-1149876424039284492006-06-09T23:29:00.000+05:302006-07-12T09:28:10.246+05:30வினோபாஜீயும் பகுத்தறிவும்<strong>நா</strong>ன் ஒரு சமயம் இரயிலில் போய்க் கொண்டிருந்தேன். யமுனை பாலத்தின் மீது வண்டி சென்றது. அருகிலிருந்த ஒருவர் மிக்க மகிழ்ச்சியோடு அதில் ஒரு காசை எடுத்து எறிந்தார்.<br /><br />பக்கத்தில் பகுத்தறிவாளர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் 'நாடு ஏற்கனவே ஓட்டாண்டியாய் இருக்கிறது; போதாதற்கு இவர்கள் வேறு காசை வீணே எறிகிறார்கள்!' என்றார்.<br /><br />நான் "நீங்கள் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளவில்லை. எந்த பாவனையோடு அவர் ஒரு காசை எறிந்தாரோ அதற்கு நான்கைந்து காலணா மதிப்பாவது உண்டா இல்லையா? <br /><br />பிற நல்ல காரியங்களுக்காக இக்காசைக் கொடுத்திருந்தால் இத்தானம் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். இதைப்பற்றி நாம் பின்னர் யோசிப்போம். ஆனால், அந்த பக்தர் இக்காசைத் துறந்தது, இது வெறும் ஆறல்ல, ஆண்டவனது கருணையே இவ்வாறு பெருகிக் கொண்டிருக்கிறது என்ற பாவனையினாலேயே ஆகும். இப்பாவனைக்கு உங்கள் பொருளாதார சாத்திரத்தில் ஏதேனும் இடம் உண்டா? <br /><br />நாட்டின் ஆறு ஒன்றைக் கண்டதும் அவரது உள்ளம் உருகிப் போய் விட்டது. இப்பாவனைக்கு, உணர்ச்சிக்கு நீங்கள் மதிப்பளிக்க முடியுமானால், அதிலிருந்து நான் உங்கள் தேசபக்தி எவ்வளவு என்று அறிந்து கொள்வேன்" என்றேன்.<br /><br />தேசபக்தி என்பதற்கு வெறும் சோறு என்பதுதான் பொருளா? நாட்டின் பெறிய ஆறு ஒன்றைப் பார்த்ததும் நம் செல்வம் அனைத்தையும் அதில் ஆழ்த்தி விடுவோம். அதன் பாதங்களில் சமர்ப்பித்து விடுவோம் என்ற பாவனை எழுமானால் அது எவ்வளவு பெரிய தேசபக்தியாய் இருக்க வேண்டும்?<br /><br />அந்த எல்லாச் செல்வங்களும், அந்த மஞ்சள்-வெள்ளை கட்டிகளும், புழுக்களின் மலத்தினால் ஆன முத்துக்களும், நிலக்கரியினால் ஆன வைரமும் - இவை அனைத்தின் மதிப்பும் நீரில் ஆழ்த்தி விடத் தக்கவையே.<br /><br />ஆண்டவனது பாதங்களின் எதிரில் இவற்றை எல்லாம் மண், இழிந்தவை என்றே மதி.<br /><br />ஆற்றுக்கும் ஆண்டவனுடைய பாதங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைப்பீர்கள். இந்த சிருஷ்டி இருக்கிறதே, அதற்கும் ஆண்டவனுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா இல்லையா? <br /><br />"ஆறு என்பது பிராணவாயுவும், நீரகமும் சேர்ந்தது; சூரியனோ 'காஸ்' வெளிச்சத்திற்கு ஒரு பெரிய மாதிரி. அதை வணங்குவதாவது!"<br /><br />உனது சோற்றுப்பானை இருக்கிறதே, அதைத்தான் விழுந்து கும்பிட வேண்டுமா? அச்சோற்றில்தான் அப்படி என்ன வைத்திருக்கிறது? அதுவும் பார்க்கப்போனால் ஒரு வெள்ளை மண்ணே. அதற்காக உனக்கு ஏன் நாக்கில் இவ்வளவு நீர் ஊறுகிறது?<br /><br />இவ்வளவு பெரிய சூரியன் உதித்திருக்கிறது; இவ்வளவு அழகிய ஆறு ஓடுகிறது; இவைகளில் ஆண்டவனை உணர முடியாவிட்டால் வேறெங்குதான் உணர முடியும்?<br /><br />ஆங்கிலக்கவி வோர்ட்ஸ் வொர்த் மிகுந்த துயரத்துடன், 'முன்பெல்லாம் வானவில்லைக் கண்டால் துள்ளிக் குதிப்பேன்; என் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி எழும். ஆனால், இப்பொழுது நான் ஏன் மகிழ்ச்சியால் குதிப்பதில்லை? முன் இருந்த வாழ்க்கை இன்பத்தை இப்பொழுது இழந்து கல்லாகிவிட்டேனா?' என்று கேட்கிறார்.<br /><br />அதாவது, பயனைக் கருதிச் செய்யும் பக்திக்கு, விவரம் அறியாத நாட்டுப்புற மக்களின் பக்தி-பாவனைக்கு, பெருமதிப்புண்டு.<br /><br />இறுதியில் அதிலிருந்தே பேராற்றல் உதிக்கும். மனிதன் எத்தகையவனாக இருந்தாலும், ஆண்டவன் சன்னதிக்கு ஒருமுறை வந்துவிட்டால் அவன் மதிப்பிற்கு உரியவனாகி விடுகிறான்.<br /><br />தீயில் எந்த மரத்தை இட்டாலும் அது பற்றி எரியும். ஆண்டவனிடம் பக்தி என்பது ஓர் அபூர்வமான சாதனை.<br /><br />பயனை விரும்பிப் புரியப்படும் பக்திக்கும் ஆண்டவன் மதிப்பளிப்பான். பிற்காலத்தில் அந்த பக்தியே பயன் கருதாததாகி பூரணத்துவத்தை நோக்கிச் செல்லும்.<br /><br />=====================<br /><br />வினோபா பாவே - கீதைப் பேருரைகள். ஏழாம் அத்தியாயம். 'பிரபத்தி' யில் பக்கம் 114.<br /><br /><br /><br /><br /><em>பிகு: இப்பதிவு சில அரைகுறை பகுத்தறிவு பதிவுகளின் 'கோயிலில் அபிஷேகம் ஏன்' போன்ற கேள்விகளுக்கு விடையாக உங்களுக்கு தோன்றினால் நான் பொறுப்பல்ல.</em>ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-18224650.post-1148911225205598862006-05-29T19:29:00.000+05:302006-10-10T15:01:52.360+05:30ராமாயண உட்பொருள்<strong>ராமாயண சாரம்</strong><br /><br />தபஸிலும் ஸ்வாத்யாயத்திலும் (வேத படிப்பு) மிகச்சிறந்த வால்மீகி ராமாயண காவியம் எழுதினார் என்றால், அதில் மிகச் சிறந்த வேத வேதாந்தங்களை அடக்கி இருக்கிறார்.<br /><br />ஹிந்து புராணங்களில் symbolism அதிகம் இருக்கின்றன. அவை சொல்ல வரும் விழயங்கள் நுட்பமானவை. உள்கருத்துக்களை நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />Ideal woman ஆன பிராட்டி சீதா பெண்களுக்கு இலக்கணமாக பேசப்படுகிறாள். பிராட்டியை ஜீவனாக உருவகப்படுத்தி, அந்த ஜீவன் எப்படி ஆன்மீக படியேறி பரமாத்மாவை அடைவான் என்பதே ராமாயணம் நமக்கு காட்டும் வழி.<br /><br />ராம என்கிற பதத்துக்கு எல்லா விஷயங்களிலும் ரமிக்கின்றவன் என்று அர்த்தம். (who revels in all beings and things…) எல்லாவற்றிலும் நீக்கமற கலந்திருக்கும் ஆத்மா தான் ராமன். அந்த ஆத்மா இணைந்திருப்பது சீதை என்கிற மனதுடன். சுயகட்டுப்பாடு (self control) இருக்கும் இடத்தில் ஆத்மா என்கிற ராமன் வெளிப்படுவான். எங்கு ஒன்றுக்கொன்று விரோதம் இல்லாமல் புலன் கட்டுப்பாடு (no conflict = a+yodhya) இருக்கிறதோ, அங்கு ராமன் என்கிற ஆத்மா வெளிப்படும்.<br /><br />ராமன் என்கிற ஆத்மா, சீதை என்கிற மனதுடன் இணையும்போது சம்சாரம் (life) மற்றும் விஷயங்கள் ஏற்படுகின்றன.<br /><br />சீதை என்கிற மனது எங்கிருந்து வந்தது என்று யாராலும் சொல்ல முடியாது. (அத்வைத்த்தில் இது தீராத தர்க்கம். சங்கரர் இதை அனாதி என்று சொல்லி விட்டுவிட்டார்...) <br /><br />சீதையும் இந்த பூமியிலிருந்து தோன்றி பூமியிலேயே மறைகிறாள். மனசு எங்கிருந்து தோன்றுகிறது; சமாதி நிலையில் எங்கு மறைகிறது என்று அறிவார் இல்லை.<br /><br />சீதை என்கிற மனம், ராமன் என்கிற ஆத்மாவுடன் இரண்டற கலந்து வெளி விவகாரங்களில் லயிக்காத வரை பூர்ணமான ஆனந்த நிலையில் இருக்கிறது. (perfect harmony) அது அயோத்தியாக இருந்தாலும், காடாக இருந்தாலும் சரி.<br /><br />சீதை தங்கமானுக்கு ஆசைப்படும்போது, மனம் கீழான லௌகீக விஷயங்களில் ஆசைப்படும்போது, புறத்தே விரிந்து புலன் கருவிகளை நாட ஆரம்பிக்கிறது. இதுவே ஜீவனுக்கு இறங்கு முகம்.<br /><br />ராமனின் (ஆத்மாவின்) பூர்ணத்துவத்தை மறந்த / அறியாத சீதை (மனம்), லட்சுமணனை (தபஸ் – முயற்சி) ராமனுக்காக ஏவுகிறாள். இதனால், சீதை (மனம்) பத்துதலை ராவணனுக்கு (பத்து புலன் கருவிகள்) எளிதாக வசப்படுகிறாள். தருமமும், தபஸூம் நிறைந்த உலகிலிருந்து, சீதை லங்கைக்கு (விஷயங்களால் நிறைந்த சம்சாரத்திற்கு material world) கடத்திச் செல்லப்படுகிறாள்.<br /><br />பின் மனம் பல கஷ்டங்களை அனுபவித்து வருந்தி, ஒரு முகப்பட்டு ராமனுக்கு ஏங்கி சரணாகதி அடைகிறது. <br /><br />ராமன் (self ஆத்மா) வாலி என்கிற காமத்தை வீழ்த்தி, வானரங்களை (நினைவுகள்) சேர்த்துக்கொண்டு சமுத்திரத்தை (விஷய சுகங்களாக தோன்றும் மாயை) தாண்டி லங்கையை அடைகிறான்.<br /><br />அதாவது சீதை என்கிற மனம் உள்ளே திரும்பி ஆத்மாவிடம் இடையறாது லயித்தால் மனம் தன் அஸ்தித்வத்தை (இருப்பை) இழக்கிறது. பூர்ணமான புருஷனான ஆத்மா தன்னில் மனதை லயப்படுத்திக்கொண்டாலும், மனதால் பாதிக்கப்படுவது இல்லை.<br /><br />ஜீவன் தன்னுடைய சுய சொரூபம் சுத்தப்பட்டு பரம்பதப்பட்ட (rehabilated) நிலையில் மனது ஆத்மாவில் ஒடுங்கி மறைகிறது. மோக்ஷ நிலையை எட்டிய ஆத்மாவுக்கு மனதால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. தன் ஆத்ம இன்பத்தில் (kingdom of life) லயித்த அதற்கு மனதின் தேவை இல்லாமல் போகிறது. அதனால், மனது காட்டுக்கு விரட்டப்படுகிறது. <br /><br />ஆனால், மனஸ் ஆத்மாவின் தொடர்பின் காரணமாக ஞானம் பிறக்கிறது (லவ குசர்கள்). அவர்களின் சாரமாக ராமாயணம் உலகெங்கிலும் பரப்பப் படுகிறது.<br /><br />இதுவே ராமாயணத்தின் சாரம். இதை உணர்ந்தவனுக்கு பிறப்பில்லை.ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-18224650.post-1146364492179210552006-04-30T08:03:00.000+05:302006-06-10T00:35:52.573+05:30இந்து மதத்தில் பல தைவம் உண்டா?வேத்த்தை பற்றியும், அது சொல்லுகிற கர்மாக்களை பற்றியும், அந்த கர்மங்களால் ஆராதிக்கப்படுகிற தேவதைகளைப் பற்றியும் மேல் தேசத்தாரும், பிற மதக்கார்ர்களும் பல மறுப்புகளை சொல்லுகிறார்கள்.<br /><br />அவைகளுக்கு சரியான பதிலை சொல்ல வேண்டியது.<br /><br />அவைகளில், முதலாவது மறுப்பு. “நாம் பல தைவங்களைப் பூஜை செய்கிறோம். தங்களைப் போல ஒரே தெய்வத்தை நம்புகிறதில்லை – என்பது.<br /><br />நாம் பல தேவதைகளுக்கு பூஜை செய்து, அவர்களை சந்தோஷப்படுத்தி, அவர்களிடமிருந்து நமக்கு வேண்டிய பலன்களைப் பெறுகிறோம். இது உண்மையே.<br /><br />ஆனால், இவர்கள் தைவமன்று; தைவம் ஒன்றுதான். (ஏகம் சத் – ரிக்வேதம்) தேவதைகள் மனிதர்களான நம்மைப்போலதான். கர்மத்தினால் கட்டுப்பட்டவர்கள். முன்பிறப்புகளில் செய்த புண்ணியங்களாலே சில அதிகாரங்களைப் பெற்றிருக்கிறார்கள்.<br /><br />அவர்கள் தைவம் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்றால் – வேதத்தையே பார்ப்போம். தேவதைகளுக்கு யஜமானன் இந்திரன். அவன் விருத்திரன் என்ற அஸூரனைக் கொன்ற காலத்தில், அவனுடைய இந்திரியங்களின் சக்தி போய்விட்டது. பிரும்மாவிடம் முறையிட்டுக்கொண்டான். அவர் பால் யாகத்தையும், தயிர் யாகத்தையும் செய்யும்படி உத்திரவு பண்ணினார். அவைகளால் அவனுக்கு சக்தி திரும்பிவந்து, திருப்தி உண்டாயிற்று (யஜூர். அஷ்ட-2, ப்ர-5, அநு-3)<br /><br />இன்னொரு உதாரணம். ஒரு காலத்தில் யாகம் பண்ணும்போது ருத்திரன் என்ற தேவதையை மறந்துபோய் ஹவிஸ்ஸை கொடுக்கவில்லை. அவன் கோபித்துக்கொண்டு ஆதித்தியர்கள் என்கிற தேவதைகளை தொந்தரவு செய்தான்.<br /><br />மேலும்....<br /><br />மித்திரன் என்ற தேவதை யாகங்களில் சரியாய் செய்யப்பட்டதற்கு யஜமானன். வருணன் என்கிற தேவதை கெடுதலாய் செய்யப்பட்டதற்கு யஜமானன். இவர்கள் இருவரையும் யாகம் செய்கிறவன் சந்தோஷப்படுத்தாவிட்டால், நன்றாய் செய்த அங்கத்தை நன்றாக செய்யப்படாத அங்கத்துடன் சேர்ப்பார்கள். அல்லது அங்கங்களை நன்றாய் செய்யாதபடி செய்வர்கள். ( யஜூர். கா-6, பிர-6, அநு-7)<br /><br />இப்படி மனிதர்களைப் போல சக்தி இழக்கிறவர்களையும், கெடுதல் செய்கிறவர்களையும் தைவம் என்று புத்தியுள்ளவன் எவன் சொல்லுவான்? ஆகையினால், நம்மைப்பற்றி மேல் தேசத்தார் சொல்லும் குற்றத்துக்கு இடமேயில்லை.<br /><br />இதன்மேல் ஒரு கேள்வி... தேவதைகள் தைவமன்று என்று சொன்னீரே? அவர்களை ஏன் பூஜிக்கவேண்டும்?<br /><br />நம்முடைய ராஜா டெல்லியில், அவருடைய பிரதிநிதி ஏதோ மெட்ராஸில் ராஜபவனத்தில் இருக்கிறார்களே, நமக்கு வேண்டியவைகளைப்பற்றி அவர்களை கேட்காமல் கீழ் உத்தியோகஸ்தர்களை ஏன் கேட்கிறோம்? கிராமத்தில் தரிசு நிலத்தை சாகுபடி செய்ய ஆசைப்படுகிறவன் தாசில்தாருக்கு ஏன் மனு செய்து கொள்ளுகிறான்? <br /><br />ஏன் என்றால், ராஜாவின் பிரதிநிதிக்கு கீழே உத்தியோகஸ்தர்களை படிப்படியாக வைத்து, அவர்களுக்கு சில அதிகாரங்களைக் கொடுத்து, அவைகளுக்கு தகுந்தபடி அந்தந்த உத்யோகஸ்தர்களுக்கு மனு செய்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்கிறது.<br /><br />ஆகையால், சில விஷயங்களில் தாசில்தாரையும், சிலவற்றில் கலெக்டரையும், சில விஷயங்களில் கவர்னரையும் ஜனங்கள் கேட்கிறார்கள்.<br /><br />இதுபோல, தைவமானது, நாலுமுக பிரும்மா முதல் அனைகம் அதிகாரிகளை வைத்து அவர்களுக்கு மனிதர்களை காட்டிலும் அதிகமான அறிவையும் சக்தியையும் கொடுத்திருக்கிறது.<br /><br />ஜனங்கள் அவர்களை பூஜை செய்து தங்களுக்கு வேண்டிய பிரயோஜனங்களை அடையட்டும் என்றும் ஏற்பாடு செய்திருக்கிறது.<br /><br />இது வேறும் யூகமில்லை. பகவத்கீதையில் கிருஷ்ணனே இப்படி சொல்லியிருக்கிறார். “பகவான் உலகங்களை மறுபடியும் உண்டுபண்ணி, அவர்களுக்கு உடம்புகளையும், இந்திரியங்களையும் கொடுத்து ........ யாகங்களையும் ஏற்படுத்தி, அவர்களை பார்த்து, இந்த (யாக) செயல்களால் நீங்கள் நலம் பெறுங்கள். ........ எனக்கு உடம்புகளான தேவதைகளை இந்த வேள்விகளினால் சந்தோஷப்படுத்துங்கள்... யாகத்தினால் சந்தோஷப்பட்ட தேவதைகள் தாங்கள் மீண்டும் சந்தோஷப்பட வேண்டிய எல்லாவற்றையும் தங்களுக்கு கொடுப்பார்கள்.. “ (அத்தி-3, சு-10,11) என்று.<br /><br />ஆனால், மனிதனுக்கும் தைவத்துக்கும் வித்தியாசமில்லையா? ராஜாவுக்கு எல்லோருடைய குறைகளை கேட்க முடியாது. ஆனால், தைவம் அப்படியில்லையே? அதற்கு எல்லாம் தெரியும். எதையும் செய்ய சக்தி உண்டு. அதை தடுப்பார் யாருமில்லை. ஆகையாலே எல்லோரும் அதையே கேட்கலாமே? என்று கேட்டால்...<br /><br />இதற்கு பதில்.....<br /><br /><br />தைவம் எது நமக்கு நல்லதோ அதையே செய்யும். ஒரு நல்ல தகப்பன் – பிள்ளை கொய்யாப்பழம் வேணும் என்று கேட்டால், அதை வாங்கிக் கொடுப்பதில்லை. படிக்க புஸ்தகம் வேண்டும் என்றால், உடனே அதை வாங்கிக் கொடுக்கிறான். அதுபோல, ஒருவன் மோக்ஷம் வேண்டும் என்று முறைப்படி கேட்டால், கேட்ட காலத்தில் தைவம் அதைக் கொடுக்கிறது. (மோக்ஷத்தை கொடுக்க அந்த தைவத்தால் மட்டுமே முடியும். தேவதைகளால் அன்று...) இந்த உலகத்திலாவது, சுவர்க்கத்திலாவது அனுபவிக்க கூடிய சுகங்களை கேட்டால் உடனே கொடுப்பதில்லை. <br /><br />தைவத்தினுடைய இந்த அபிப்ராயத்தை தெரியாமல், ஜனங்கள் எப்படியாவது தங்களுக்கு வேண்டிய பலன்களை அடைய முயற்சி செய்வார்கள். தகாத வழியில் போய் கெட்டுப் போவார்கள். இதை நினைத்து, தேவதைகளுக்கு அதிகாரம் கொடுத்து அவர்களை கொண்டு மக்களுக்கு திருப்தி பண்ணி வைக்கிறது.<br /><br />(மேலும் வரும்...)<br /><br />- ஸ்ரீ உ.வே. V.K. ராமநுஜாச்சார்யர் ஸ்வாமி உரையிலிருந்து ஒரு பகுதி...ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-18224650.post-1145869297840327382006-04-24T14:27:00.000+05:302006-04-27T08:14:13.663+05:30ராவணனும் தசரதனும் - 2ம்யூஸ் அவர்களுடன் விவாதம் மேலும் தொடர்கிறது.<br /><br />முதல் பாகத்தை இங்கே பார்த்தோம்:<br /><br />http://vaithikasri.blogspot.com/2006/04/blog-post.html<br /><br />மேலும்...<br /><br />ம்யூஸ்: <br /><br />தசரதன் மற்றும் ராவணனுக்கு இடையேயான வித்தியாசம் தெரிய வந்தது. காதலுக்கும் காமத்துக்குமுள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளீர்கள். <br /><br />என்னை புரட்சிக்காரனாக வர்ணித்துள்ளீர்கள். எனக்கு தேவைகளின் மேல் இருக்குமளவுக்கு புரட்சிகளின் மேல் நம்பிக்கையில்லை. <br /><br />தமிழ் நாட்டில் ஏற்கனவே ஒரு புரட்சித் தலைவரும், தலைவியும் உண்டு. அப்படியானால் நான் யார் - புரட்சி புடலைங்காயோ? எனக்கு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. தங்களை புரட்சிக்காரர்களாக நம்பும் மனிதர்கள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.<br /><br />ராமன் போன்ற தெளிவான யுக புருஷர்கள் பூமியில் மிகவும் அரிது. அவன் எனக்கும் தெய்வந்தான். <br /><br />கிருபானந்த வாரியாரிடம் ஒருவர் ஏறத்தாழ இதே கேள்வியினைக் கேட்டதாகப் பல வருடங்கள் முன்பு படித்தேன். "தசரதன் மட்டும் அத்தனை மனைவியர் கொண்டிருக்கும் போது நான் மட்டும் ஒரே பெண்ணுடன் வாழ வேண்டும் என்கிறீர்களே" என்று அந்த மனிதர் கேட்டாராம். அதற்கு வாரியார் "தசரதனால் அனைத்து மனைவியரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடிந்தது. உன்னாலும் அது முடியும் என்றால் நீயும் திருமணம் செய்து கொள்ளலாம்" என்றாராம். <br /><br />நானும் தசரதன் எல்லா மனைவியரையும் ஸந்தோஷமாக வைத்துக் கொண்டான் என்பதை ஒரு நம்பிக்கையாக ஏற்றுக் கொள்கிறேன்.இருந்தாலும் என்னுடையது கேவலம் மனித மனந்தானே. சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன. <br /><br />என்னால் ராமன் போல் எல்லா விஷயங்களிலும் தெளிவுடனும், தர்ம சீலனாகவும் இருக்க முடியவில்லை. முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னைச் சுற்றி இருப்பவர்களிடமோ, நான் அறிந்த மனிதர்களிலோ ராமன் போன்றவர்கள் இல்லை. இருக்கவும் முடியாது என்று தோன்றுகிறது. அப்படியே இருந்தாலும் அது ஒரு எக்ஸெப்ஷனல் கேஸ், முழுக்க முழுக்க தெய்வீகமானது. அனைவருக்கும் பொருத்த முடியாது. <br /><br />ஆனால் தசரதன் போன்ற மேன்மையான குணங்கள் கொண்ட மனிதர்கள் உள்ளார்கள். என் அனுபவம் இதை உறுதி செய்கிறது.ஒரு கேள்வியினை என் மனம் என்னிடம் கேட்கிறது. <br /><br />தசரதன் எனும் ஒரு கணவனால் ஆயிரக் கணக்கான மனைவியரை சந்தோஷமாகவும், காதலுடனும் வைத்துக் கொள்ள முடியும்போது ஒரு மனைவியால் பல கணவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாதா? அப்படிச் செய்தால் கற்பு நிலை தவறுகிறாள் என அனைத்து மத நூல்களும், சமூக ஒழுக்கங்களும் கூறுகின்றனவே.<br /><br />தங்களுடைய பதிலைப் படித்து இந்தக் குழப்பத்திலிருந்தும் விடுபட ஆசைப் படுகிறேன். தயவு செய்யுங்கள்.<br /><br />=====================<br /><br />என் பதில்:<br /><br />தங்கள் கருத்துக்கள் மிகவும் புரட்சிகரமானவைதான். எனக்கு.<br /><br />என் பதிலுரை:<br /><br />1. இராமாயணத்தை கேள்வி ஞானம் தான் என்கிறீர்கள். கம்ப ராமாயணத்தை ஒரு தடவையாவது வாழ்க்கையில் படிக்குமாறு கெஞ்சுகிறேன். பக்தி இலக்கியமாக இல்லாவிட்டாலும், கம்பனின் அரசாளும் தமிழுக்காகவும், அந்த பாத்திரங்களை அவன் கையாண்டுள்ள அனுபவத்திற்காகவுமாவது.<br /><br />2. தசரதன் தன் மனைவி மார்களை காதலித்து சந்தோஷப்படுத்தினான் என்று நீங்கள் எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள். நம் கலாசாரத்தில் கணவன் மனைவி இல்லறத்தில் கடமை மேலோங்கியிருக்கும், காதல் இருந்தாலும் தெரியாது. <br /><br />தசரதன் மனைவி மார்கள் தசரதனின் ஆளுமையில் மயங்கி தன்னை சரண் கொடுத்த சாதாரண இந்திய பெண்கள். அவர்கள் சந்தோஷம் தசரதனின் சந்தோஷத்தில்தான். இதில் மாடர்ன் காதல் வரவில்லை.அச்சமுதாயம் முழுக்க முழுக்க சொசைட்டியை ஒத்து வாழ்வதே இலட்சியமாக கொண்ட சமுதாயம். அதுவே பெருமை அதுவே புகழ் என்று இருந்த நிலை. அதை மனதில் கொள்ளுங்கள்.<br /><br />3. ராமன் மாதிரி வாழ்வது இயலாது என்று நீங்கள் சொல்வது ராமனை வருத்தம் அடைய செய்யும். மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று காண்பிக்கவே ராமன் அவதரித்தான் என்கின்றன புராணங்கள்.ராமன் மாதிரி வாழ்வதில் குழப்பமே இல்லை. <br /><br />தனக்கு என்று இஹ வாழ்க்கையில் வேண்டுவது எல்லாம் தன் தன்மானமும் கசடற்ற புகழும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவன் எல்லா நடவடிக்கைகளிலும் தெரிகிறது. எதைச்செய்தால் சமுதாயத்தில் மாண்போ அதை செய்வதுதான் அவன் வாடிக்கை. அதை புரிந்து கொள்வது எளிதுதான். குழப்பமில்லை. <br /><br />அவனைப்போல வாழ்வது வேண்டுமானால் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அவன் வழி எல்லோருக்கும் புரிந்த குழப்பமில்லாத வழி.<br /><br />4. பெண்களும் பல கணவருடன் 'சந்தோஷமாக' இருக்க முடியுமா என்கிறீர்கள். சந்தோஷம் என்று எதை நீங்கள் சொல்கிறீர்கள். கலவி சுகமா. மாடர்ன் லைப் காதலா. இவை இரண்டும் என்றால் நிச்சயம் முடியும். சந்தேகம் இல்லை.<br /><br />ஆனால், பல கணவன் படைத்த பெண் வாழ்க்கையை இழக்கிறாள். அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை. தாய் மகன் உறவு ரத்த சம்பந்தத்தால் ஏற்படுவதால் அதில் பல மகன்களை தாய் தனதாக்கி கொள்ள முடிகிறது. எல்லாம் தன் உயிராகவே பார்க்கிறாள். <br /><br />ஆனால், ஆண் பெண்ணே ஏற்கும் போது தன் எதிர்பார்ப்புக்கு உட்பட்டு ஏற்கிறான். அதனால், ஆணால் பல பெண்களிடம் கலவி இன்பம் விகல்பம் இல்லாமல் பெற முடிகிறது. <br /><br />அதே அவன் மனதார ஒரு பெண்ணை - அந்த பெண்ணின் உள்ளே உள்ள ஆத்மாவை - காதலிப்பான் ஆனால், அவனாலும் வேறொருத்தியை ஏறெடுத்தும் பார்க்க தோணாது. எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.<br /><br /><br />===================<br /><br />மீண்டும் ம்யூஸ்:<br /><br />நீங்கள் கூறுவது அனைத்தும் எனக்குப் புரிகிறது, ஏற்றுக் கொள்கிறேன் - கடைசி பாராவை தவிர்த்து. <br /><br />"அவள் தன்னை ஒருவனுக்கு கொடுக்கும்போது எல்லாவற்றையும் கொடுத்து விடுகிறாள். ஆண் மாதிரி பேரம் பேசுவதில்லை."<br /><br />நம்ப முடியவில்லை. ஒரு வேளை நீங்கள் அந்தக் காலத்திலிருந்ததாகக் கருதப்படும் அபூர்வமான பத்தினிகள் என்ற ஸ்பீஸிஸ் பற்றிக் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன். <br /><br />தற்காலத்தைச் (கலிகாலத்தை) சேர்ந்த என்னைச் சுற்றியிருக்கும் ஆண்கள், பெண்கள் அனைவரும் பேரம் பேசுகிறார்கள் (யு. எஸ். க்ரீன் கார்ட்; கை, பாக்கெட், பீரோ, வீடு, கக்கூஸ் நிறைய பணம்). "மாப்பிள்ளை மாருதி மாதிரியிருந்தாலென்ன. மாருதி எஸ்டீம் எத்தனை இருக்கு?" என்பதுதான் குறைந்த பக்ஷ பேரமே. இதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.<br /><br />எங்கு தன்னலமில்லா காதல் மலர்கிறதோ அங்கு அவர்கள் தங்களை இழக்கிறார்கள். வேறோரு கூட்டணிக்கு அங்கே வழியில்லை.<br /><br />இயற்கையில் எல்லாமே விரிந்து கொண்டு போகின்றன. ஒருவரிடம் தன்னலமற்ற காதலும், காமமும் கொண்ட ஒருவர் அவற்றை விரித்து பல பேரிடமும் கொண்டு செல்ல விரும்ப வாய்ப்பு இருக்கிறதா? கூட்டணிக்கு வாய்ப்பிருக்கிறதே.<br /><br />இவ்விரிவு ஒருவர் மேலேயே விரிந்து கொண்டு போகும் வாய்ப்பும் இருப்பதை உணர்கிறேன். ஆனால், கூட்டணியாய் ஜெயிப்பவரைவிட தனியாக நின்று ஜெயிப்பவருக்குத்தானே மரியாதை என்று சொல்லி ஜோக்கடித்து விடாதீர்கள். கேள்வியே அந்த மரியாதை ஏன் என்பதுதான்.<br /><br />தசரதனை விடுங்கள். அந்தக் காலத்தில் தசரதனுக்கு இருந்தது போல சாபமில்லாத அரசர்களும், குடிமகன்களும் பல தார மணம் புரிந்துகொண்டார்களே. முதல் மனைவிக்கும் பல ஆண் குழந்தைகளிருந்தாலும் பல திருமணங்கள் செய்து கொண்டார்களே. <br /><br />எனக்குத் தெரிந்தவரை பல தார மணம் ஒரு சமுதாய கடமை இல்லை. இந்தக் காலத்திலும் இது தொடர்கிறதே. எதற்காக? ஏன் ஆண்களுக்கு மட்டும் இந்த உரிமை? மீண்டும் கூறுகிறேன். என்னால் புரட்சி எல்லாம் செய்ய முடியாது. <br /><br />ஒருதார வாழ்க்கை முறை மீதும், கற்பு எனும் கொள்கை மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை எனக்கு உங்கள் மீது மரியாதையைத் தருகிறதே. ஏன்? <br /><br />ஏனென்றால் நடைமுறையில் நானும் அப்படித்தான் என்பதாலிருக்கலாம். அல்லது குறைந்தபக்ஷம் இவை உயரியவை என்று எனக்கு செய்யப்பட்ட போதனைகள் அடிமனத்தில் குடிகொண்டிருப்பதால்.இன்னமும் தன் மனைவியை மட்டும் காதலிக்கும் டோண்டு மாமாவைப் பார்க்கும்போது பரவசமாகத்தான் இருக்கிறது. <br /><br />இது போன்ற தம்பதிகளை நமஸ்காரம் செய்வதே நல்ல புத்தியைத் தரும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் என்னை, என் வாழ்க்கையை புரிந்து கொள்ள இவை எல்லாம் ஏன் இப்படி இருக்கின்றன என்று கேள்வி கேட்கிறேன். சில விஷயங்கள் பற்றிய புரிதல்கள் நான் ஸந்தோஷமாக இருக்கவும், உண்மையையும், நிதர்ஸனத்தையும் அறியவும் உதவுகின்றன. <br /><br />வாழ்க்கை பற்றி கற்றுக் கொண்டே இருக்க ஆசை.காலமும், காலத்தால் ஏற்படும் அனுபவமும், அதை சரியாகப் புரிந்து கொள்ளும் புத்தியும் எனக்கு மேலும் கற்றுக்கொடுக்கட்டும். <br /><br />ஓம்ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-18224650.post-1145470326267492652006-04-19T23:33:00.000+05:302006-06-14T08:02:09.353+05:30ராவணனும் தசரதனும்திரு ம்யூஸ் அவர்கள் தன் <a href="http://bliss192.blogspot.com/2006/04/blog-post_18.html">ஒரு பதிப்பில் </a>கற்பு என்றொரு விவாத்த்தில் எனக்கு தெரிந்த அபிப்ராயத்தை முன் வைத்தேன். அவர் திடீரென்று கம்ப்ளீட்டாக புதிதாக ஒரு குண்டை போட்டார். அதாவது (அ) ராமணனும் தசரதனும் ஒரே தவறைதான் செய்தார்கள் (ஆ) ராமன் தசரதன் நடத்தைக்கு வெட்கப்பட்டான் என்று. <br /><br />அவர் பதிப்பும் என் பதிலும் வருமாறு: <br /><br />ம்யூஸ்: <br /><br />ராமாயணத்தில் எனக்கு எழும் ஒரு சந்தேகம். ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களே, நீங்கள் இதற்குப் பதில் சொல்லலாமே.ராவணனுக்கு அவனை விரும்பாத ஒரு பெண்ணைத் தொட்டால் தலை சுக்கு நூறாகிவிடுமென்ற ஒரு சாபம் இருந்தது. அதனாலேயே அவன் சீதையை அசோக வனத்தில் வைத்து நைச்சியம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தான். தொட முடியவில்லை.எம்பெருமான் அவனை அழித்ததற்குக் காரணம் அவன் ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதே. ஆனால், பெருமானின் தந்தைக்கோ ராவணன் பெற்ற சாபத்திற்கு நேரெதிரான சாபமிருந்ததாகக் கேள்வி. (சரியா என்று தெரியவில்லை.) அதாவது தசரதன் அடிக்கடி திருமணம் செய்ய வேண்டும் என்பதே அச்சாபம் (சாபமா, அல்லது வரமா? :-) ). ராமனின் தந்தையும் பல பெண்களை மணம் செய்து கொண்டவர்தான். இருவரும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தினாலும், தசரதனை வணங்கும் ராமன் ராவணனை அழிக்கிறான். இதுதான் எனக்குப் புரியவில்லை. விளக்கம் தேவை.தன் தந்தையின் நடத்தையே தனயனை ஒரே ஒரு பெண்ணின் மேல் மட்டும் காதல் பக்தி கொள்ளத் தூண்டியதோ என்றும் தோன்றுகிறது.<br />April 19, 2006 5:47 AM<br /><br />என் பதில்: <br /><br />ம்யூஸ் அவர்களுக்கு,தங்கள் கேள்வி விசித்திரமாய் இருக்கிறது. என்ன அடிப்படையில் கேட்கீறீர்கள் என்பது விளங்கவில்லை.<br /><br /> கேலிக்காகவா, இல்லை நிஜமாகவே இது உங்கள் சந்தேகமா.<br /><br />தசரதன் வருடத்துக்கு ஒரு தடவை மணம் புரிந்தது அவனுடைய சாய்ஸ். அது ஒரு சாபத்திலிருந்து தன்னை காக்க அவன் எடுத்த உத்தி. அவன் யாருடைய மனைவியையும் கடத்தவில்லை. யாரையும் வலுக்கட்டாயமாக கெடுக்கவில்லை. மிரட்டி அடிபணியவைக்கவில்லை. அடிமைப்படுத்தி சேவகம் புரிய வைக்கவில்லை.<br /><br />இந்த நான்கையும் ராவணன் செய்தான்.<br /><br />பல மனைவிகளை ஏற்பது நம் கலாசாரத்துக்கு உட்பட்ட ஒரு செயல். இதில் வெட்கப்பட வேண்டியது ஒன்றும் இல்லை. (தங்களைப் போன்ற புரட்சியாளர்கள் தவிர்த்து).<br /><br />எத்தனையோ குடும்பங்களில் அக்காவே வற்புறுத்தி தன் தங்கையை மாமாவுக்கு மணம் செய்து வைத்ததை நான் அறிவேன். குழந்தைக்காக.<br /><br /><br />ஏன், தமிழர் காவலர்களாக தங்களை கூறிக்கொள்ளும் மூத்த தலைவர்களும் இரண்டு மனைவி வைத்துக்கொண்டு பெருமையாக சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்களே!<br /><br />(இரண்டாவது கல்யாணம் சட்ட விரோதம். இவர்கள் சட்டத்தை மீறியவர்கள்தான். ஆனால், முதல் மனைவியின் புகார் இல்லாமல் கைது செய்ய முடியாது என்ற அற்ப விஷயத்திற்காக இவர்கள் தோளில் துண்டு போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.)<br /><br />தசரதன் பெண்மையை மதித்தவன். தன் மனைவி மார்களை கலந்து ஆலோசிக்காமல் அவன் எந்த முடிவும் எடுக்க மாட்டான். மனைவி கைகேயியுடன் போருக்கு செல்லும் அளவுக்கு அவன் மனைவி மார்களுக்கு சம உரிமை வழங்கியிருந்தான்.<br /><br />அவன் எங்கே! ராவணன் எங்கே.<br /><br />ராவணன் பார்க்கும் பெண்களை உடனே பெண்டாள நினைப்பவன். தன் அண்ணன் குபேரன் மனைவியையே கற்பழிக்க முயற்சி செய்து சாபம் வாங்கியவன். தேவ லோகத்து பெண்களை தகாது நடந்து சாபம் வாங்கினவன்.<br /><br />தன் சுய லாபத்திற்காக நாட்டையே பணயம் வைத்தான். மனைவி, தம்பிகள் சொல்லியும் கேட்காமல் தேவிக்காக இலங்கையே அழித்தான். ஆனால், தசரதன் தான் கொடுத்த வாக்கை காப்பாற்ற அநியாய கைகேயின் கோரிக்கையும் ஏற்றுக்கொண்டவன்.<br /><br />இவர்களை ஒரே தராசில் நீங்கள் காட்டுவது என்ன வருத்தமான விஷயம்!<br /><br />தசரதன் நடவடிக்கைகளில் வருந்தி ராமன் ஏகபத்தினி விரதம் ஏற்றான் என்பது மிகவும் அடாதது.<br /><br />ராமாயணத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் ராமன் தசரதன் புகழ் பேசுகிறான். ராமனை நீ யார் என்று யாராவது கேட்டால் போதும், தசரதாட்மஜம் என்று தசரதனின் பையன் என்றுதான் சொல்லிக்கொள்வான்.<br /><br />காட்டில் பரதனை பார்த்த வுடன் ராமன் கேட்கும் முதல் கேள்வியே நன் பெருமைக்குரிய அப்பா எப்படி என்றுதான். தேவியை காட்டுக்கு வராதே என்று ராமன் கெஞ்சும்போதும் என் அப்பாவுக்கு நீ சேவை செய் என்றுதான் கேட்கிறான்.<br /><br />ஜடாயுவை கட்டிக்கொண்டு அழும் காரணமே அவர் தசரதனின் நண்பன் என்றுதான். என் அப்பாவையே தங்களிடம் பார்க்கிறேன் என்கிறான்.<br /><br />இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.தங்கள் பதிப்புகளில் வீச்சு இருக்கும் அளவிற்கு ஆழமும், உண்மையும் குறைந்து இருப்பது வருத்தமளிக்கிறது.<br /><br /><br />.கு: தசரதனின் சாபம்: ச்ரவணின் மரணத்தால் அவன் சாக வேண்டும் என்பது. ஆனால், exception ஆக, சாஸ்திரப்படி கல்யாணம் ஆகி ஒரு வருடம் விரதம் முடியாத்தால் விலக்கு. அதனால், வருடா வருடம் புது மணம் செய்து புது மாப்பிள்ளை exemption வாங்கிக் கொண்டார் இவர்.<br />April 19, 2006 10:58 AMஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18224650.post-1133269869343443492005-11-29T18:38:00.000+05:302006-04-28T20:49:30.830+05:30VAIRAGYA SHATAKAM 2 - NOT EVEN A BROKEN SHELLउत्खातं निधि-शङ्कया क्षिति-तलं ध्माता गिरेर् धातवो<br />निस्तीर्णः सरितां पतिर् नृपतयो यत्नेन सन्तोषिताः।<br />मन्त्राराधन-तत्-परेण मनसा नीताः श्मशाने निशाः<br />प्राप्तः काण-वराटकोऽपि न मया तृष्णे सकामा भव॥३॥<br /><br />utkhAtaM nidhi-sha~NkayA kShiti-talaM dhmAtA girer dhAtavo<br />nistIrNaH saritAM patir nR^ipatayo yatnena santoShitAH<br />mantrArAdhana-tat-pareNa manasA nItAH shmashAne nishAH<br />prAptaH kANa-varATako.api na mayA tR^iShNe sakAmA bhava 3<br /><br /><strong><span style="font-size:130%;color:#990000;">3. ஓட்டைச் சோழிகூட…<br /></span></strong><br />புதையலை தேடி பூமியைத் தோண்டிப் பார்த்தாகி விட்டது; அறிய தங்கத்தை தேடி மலைப் பாறைகள் நெருப்பில் உருக்கிப் பார்க்கப் பட்டன; (பணத்தைத் தேடி) கடல்களை தாண்டிப் போய்ப் பார்த்தாகி விட்டது; பெரும் முயற்சியினால் ப்ரபுக்கள் திருப்தி செய்து வைக்கப் பட்டார்கள்; பல இரவுகளில் லயித்த மனத்துடன் பிரயாசைப்பட்டு சுடுகாட்டில் மந்திர ஜபம், பூஜை செய்யப்பட்டன; இத்தனை செய்து பார்த்தும் ஒரு ஓட்டைச்சோழி கூட எனக்குக் கிடைக்கவில்லை. அதனால், ஏ ஆசையே! நீ த்ருப்தியாக இரு. 3<br /><br /><span style="font-size:130%;color:#990000;"><strong>NOT EVEN BROKEN SHELL </strong></span><br /><br />Earth was dug for treasure; rocks smelted for precious metals; Oceans crossed (for wealth); Leaders were pleased with utmost effort; mantras chanted with absorbed mind and worshipped in cremation sites; But, gained not even a broken piece of a glimmering shell. Oh Desire! remain contented. 3<br /><br />खलालापाः सोढाः कथम् अपि तद्-आराधन-परैः-<br />निगृह्यान्तः-बाष्पं हसितम् अपि शून्येन मनसा।<br />कृतो वित्त-स्तम्भ-प्रतिहत-धियाम् अञ्जलिः अपि<br />त्वम् आशे मोघाशे किम अपरम् अतो नर्तयसि माम्॥४॥<br /><br />khalAlApAH soDhAH katham api tad-ArAdhana-paraiH-<br />nigR^ihyAntaH-bAShpaM hasitam api shUnyena manasA<br />kR^ito vitta-stambha-pratihata-dhiyAm a~njaliH api<br />tvam Ashe moghAshe kima aparam ato nartayasi mAm 4<br /><br /><strong><span style="font-size:130%;color:#990000;">TEARFUL EYES; SMILING FACE<br /></span></strong><br />Enduring somehow in servility the talk and humiliation of the wicked; shabbily controlling tears but smiling with a vacant mind; saluting and bowing to idiots blinded by their wealth; oh insatiable Desire!, all your hopes belied but What other futile deeds would you have me dance in? 4<br /><br /><span style="font-size:130%;color:#990000;"><strong>கண்களில் கண்ணீர்! முகத்தில் சிரிப்பு!!<br /></strong></span><br />(பணத்திற்காக) தீயவர்களை அண்டிப் பிழைக்க அவர்கள் திட்டுக்களைப் பொறுத்துக்கொண்டோம்; பெருகும் கண்ணீரை அடக்கி, (சொரணையில்லாத) சூன்யமான மனத்தோடு, முகத்தில் சிரிப்பைக் காட்டி சேவை செய்தோம்; செல்வத்தால் அறிவிழந்த மூடர்களை கை கூப்பி பணிந்தோம்; ஆனால், ஆசையே, நம்பிக்கை எதுவும் பலிக்கவில்லையே!, இன்னும் எத்தனை வீண் முயற்சிகளில் என்னை ஆட்டுவிப்பாய்? 4ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18224650.post-1133160540853309072005-11-28T12:15:00.000+05:302005-11-29T13:33:51.806+05:30<div align="center"><span style="font-size:130%;">விதி Vs மதி - 2 </span></div><p><span style="font-size:130%;color:#006600;"><strong>ஸத்காரியத்திலும் துக்கம் ஏன்? கெட்ட நடத்தையிலும் சுகமடைவது ஏன்?</strong></span><br /><br /><br /><br />புஸ்தகம்: "விதி பெரியதா? மதி பெரியதா?"<br /><br /><a href="http://vaithikasri.blogspot.com/2005/11/blog-post.html">பாகம் 1 வினைப்படியே வாழ்க்கை நடக்குமானால் முயற்சி ஏன்? ஐ இங்கே முதலில் பார்த்தோம்.</a><br /><br />இப்போது:<br /><strong>பாகம்: 2 ஸத்காரியத்திலும் துக்கம் ஏன்? கெட்ட நடத்தையிலும் சுகமடைவது ஏன்</strong><br /><br />சுபவாஸனையின்படியே நடக்கும் போது, ஓரோர்ஸமயம் ஏற்கனவே சித்தத்தில் பதிந்துள்ள அசுபவாஸனைகள் பல ஒருங்கு சேர்ந்து கெட்ட காரியங்களில் மிக்க பலமாக ஏவுவதும் உண்டு. தீரர் அதற்கு சிறிதும் சலியாமல் திட விவேகத்தால் அவைகளை தகைத்து வென்று போடுவார். சொற்பகாலம் சுருட்டு, கள், கஞ்சா முதலியவைகளை அப்பியஸித்தவன் பின்னர் அவைகளை துரப்பியாஸமெனக் கண்டு இனி இவ்வப்பியாஸம் கூடாதென்று உறுதிகொண்டு அவைகளை நிறுத்தியிருக்கினும் ஓரோர் ஸமயம் முன்போலவே அவைகளில் சபலம் உண்டாகின்றது. அது பூர்வம் செய்த அப்பியாஸத்தினால் எற்பட்டுள்ள வாஸனையினாலேயே அன்றோ?அற்பகால அப்பியாஸத்திற்கே இவ்வளவு பலமாக வாஸனையேற்படும் எனின், அனந்த கோடி ஜந்மங்களில் அழகிய மங்கையை விரும்புதலும், ஆடையாபரணங்களில் மயங்குவதும், ருசியாகிய பதார்த்தங்களை உண்பதும் இவை போன்ற காரியங்கள் அப்பியாஸத்தில் எற்பட்டிருக்கும் ஆதலின் அதற்குத் தக்கபடி வாஸனை மனஸனில் எவ்வளவு திடமாய் ஊன்றி இருக்க்க் கூடும்?அப்படிப்பட்ட வாஸனைகள் அசுப காரியங்களில் ஏவும்போது மனிதருக்கு அவைகளை நிக்ரஹிப்பது அஸாத்தியம் என்றே தோன்றும். ஆனால், அது தவறேயாம். அதற்குத் தக்கபடி மிகவும் திடமாகிய முயற்சியால் அவைகளை வென்று போடலாம் என்பது நிச்சயம். </p><p>இது வரையிலும் வாஸனையைப் பற்றி விஸ்தரிக்கப்பட்டது.</p><p>கர்மாவாவது: இதற்கு முன் எடுத்திருந்த அளவற்ற ஜன்மங்களில் மனுஷ்ய ஜன்மங்களும் எவ்வளவோ ஏற்பட்டிருக்க கூடுமன்றோ? மனுஷ்ய ஜன்மங்களில் செய்யப்பட்ட நல்ல காரியங்களும் கெட்ட காரியங்களும் அப்போதைக்கப்போது மனஸினில் மிக்க நுட்பமாய் பதிந்து போகின்றன. அவை ஸ்வர்க்கத்திலாவது நரகத்திலாவது, மனுஷ்யப் பிறவியிலாவது, காலாந்தரத்தில் தத்தம் பயனான இன்ப துன்பங்களைக் கொடுக்கின்றன. அவ்விதம் இன்பதுன்பங்களைத் தரும் மனஸினிலுள்ள பதிவே கர்மா என்பதாம்.</p><p><strong><span style="color:#990000;">சங்கை: மனுஷ்ய ஜன்மத்தில் செய்யப்படும் செய்கைகளும் கர்மாக்களாகின்றன என்பது கூடாதோ?<br /></span></strong></p><p>கூடாதென்க. ஏனெனின், செய்கை மாத்திரத்தினாலேயே கர்மா ஏற்படும் என்பதல்ல. மற்று யாதெனின் இது புண்ணியம், இது பாபம் எனப் புண்ணிய பாபங்களில் பகுத்தறிவுள்ளவர் செய்யும் செய்கைகளே கர்மாக்களாகும் என்பதே சாஸ்திரங்களின் மர்மம்.இவ்விதம் புண்ணிய பாபங்களின் பகுத்தறிவோடு கர்த்திருத்துவாதி பாவனைகளுடன் செய்யப்பட்டுள்ள நல்ல காரியங்களும் கெட்ட காரியங்களும் செய்யப்படும்போதே அறிவினில் பதிவு ரூபமாகுந் தன்மையைப் பெற்றுக் காலாந்தரத்தில் கர்மாக்களாய் வந்து இன்ப துன்பங்களுக்கு ஏதுவாகின்றன.</p><p>இக்கருமங்கள் <strong>பிராரப்தம், ஸஞ்சிதம், ஆகாமி</strong> என முவ்வகைப்படும். அதெப்படி எனின், இதற்கு முன் எடுத்திருந்த மனுஷ்ய ஜன்மத்தில் லக்ஷம் கர்மா செய்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அவைகளில் ஓர் கொடும் பாபகர்மம் பக்குவப்பட்டுப் பலகோடி நரகயாதனையை அளித்தது. அதன் பிறகு மற்றோர் கர்மா பரிபக்குவப்பட்டு கிருமி கீடாதி பலஜன்மங்களைத் தந்தது. அதன் பிறகு மற்றோர் கர்மா பக்குவப்பட்டு பசுவாதி ஜன்மாவைத் தந்தது. இங்ஙனம் மூன்று கர்மங்களின் பயனை அனுபவிக்கவே நான்காவது ஓர் பெரிய புண்ணிய கர்மா பக்குவப்பட்டு வந்து அரியதாகிய இம்மனிதப் பிறவியைத் தந்தது. </p><p>இங்ஙனம் மனிதப்பிறவியை மாத்திரம் தந்து அதனோடு அக்கருமம் முடிந்து போகவில்லை.இந்த தேஹம் எவ்வளவு சுவாஸம் விடவேண்டியது என ஈசாக்ஞையின் படி நியதாமாய் உள்ள சுவாஸத்தையும் தந்து, இத்தேஹம் தோன்றியது முதல் மரிக்கும் வரையிலுள்ள காலத்தில் எந்தெந்தஸமயத்தில் எந்தெந்த இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென நியதமாகிய இன்ப துன்ப போகத்திற்கும் ஏதுவாகின்றது.</p><p>இங்ஙனம் இதற்குப் பூர்வம் மனுஷ்ய ஜன்மத்தில் ஸம்பாதிக்கப் பட்ட லக்ஷங்கர்மாக்களில் ஏற்கனவே அனுபவத்தினால் மூன்று கர்மங்கள் ஒழியவே நான்காவதாகிய கர்மாவினால் இம்மனுஷ்ய ஜன்மாவைப் பெற்று இன்ப துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறோம் அன்றோ. இந்த கர்மமே ப்ராரப்தம் என்பதாம். ப்ர, ஆரப்தம் எனின் பயன் தரத்தலைப்பட்டுள்ளது எனப் பொருள். இந்நான்கு கர்மங்களுக்கு அந்நியமாய் இனி மறுபிறவிகளில் பயன் தருவனவாயுள்ள 99,996 கர்மங்களும் ஸஞ்சிதங்கள் எனப்படும். இம்மனித ஜன்மத்தைப் பெற்று இப்போது புதிதாய்ச் செய்கிறோம் அன்றோ. அங்ஙனம் செய்யப்படும் கர்மங்களே ஆகாமி கர்மங்கள் என்பனவாம். </p><p><strong>ஸஞ்சிதங்களையும், ஆகாமிகளையும் ஞானத்தினாலும், பிராயச்சித்தத்தினாலும் ஒழித்துப் போடலாம்</strong>. ஆயினும், இந்த மனுஷ்ய தேகத்தைத் தந்து இதனால் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களையும் தரத் தலைப்பட்டுள்ளதாகிய ப்ராரப்த கர்மம் மாத்திரம் ஞானத்திலாவது மற்றெதனாலாவது துலையாது. <strong>இதனை அனுபவித்தே ஒழிக்க வேண்டும்</strong>.<br /></p><p>இவன் இப்போதிய செய்கைகளை நல்லவைகளாகவே செய்தாலும் அல்லது தீயவைகளாகவே செய்தாலும் அல்லது ஹடங் கொண்டு வீம்பு பிடித்துச் சும்மா இருந்தாலும் ப்ராரப்தகர்மத்தின்படி எவ்வின்ப துன்பம் வர வேண்டுமோ அது வந்தே தீரும். அப்படி வரும் இன்ப துன்பங்கள் இப்போதிய செயல்களின் பயனென மூடர்களுக்குத் தோன்றும். இப்போதிய செய்கைகளுக்குப் பயன் மறு பிறவிகளில்தான் வரும். இப்போதிய இன்ப துன்பங்களெல்லாம் பூர்வ கர்மப் பயனே என்பது நிர்ணயம்.</p><p>இவ்வுண்மையே</p><p>एवं हठाच्च दैवाच्च स्वभावात्कर्मणस्तथा।</p><p>यानि प्राप्नोति पुरुषस्तत्फलम् पूर्वकर्मणा॥</p><p>“இங்ஙனம் ஹடத்தினாலும் தைவத்தினாலும் ஸ்வபாவத்தினாலும் செய்கையினாலும் எந்த இன்ப துன்பங்களை அடைகின்றானோ அவை பூர்வ கர்மங்களின் பயனே”</p><p>என மஹாபாரதம் ஆரண்ய பர்வாவில் சொல்லப்பட்டுள்ளது. </p><p>ப்ராரப்த கர்மத்தின்படி ஸுகமாவது துக்கமாவது வரத்தயாராய் இருக்கும்போது மனிதன் வாஸனா வசமாய் யாதானும் ஓர் காரியத்தைச் செய்யக்கூடும். அப்படிச் செய்யவே ப்ராரப்த கர்மா ஆயத்தமாய் வந்து விடுகின்றது. உண்மை இவ்விதம் ஆதலால் இப்போது வரும் இன்ப துன்பத்திற்கு ப்ராரப்த கர்மமே முக்கிய ஹேதுவாய் இருக்கின்றது.</p><p>இங்ஙனம் அறிய வேண்டியதாய் இருக்க, மனிதர் அவிவேகத்தால் இவ்வாறு அறியாமல் இப்போது நிகழும் சுக துக்கங்கள் எல்லாம் இப்போது செய்யும் காரியங்களின் பயன் என்றே எண்ணுகின்றனர்.</p><p>இப்போது செய்யும் செய்கைகளே ஏது எனக் கொண்டோமானால், உலகில் நல்ல காரியங்களைச் செய்வோர் எல்லாம் ஸுகமும், கெட்ட காரியங்களைச் செய்வோர்கள் எல்லோருக்கும் துக்கமுமே வரவேண்டும் என்றே ஏற்படுகின்றது. னால், உலகில் அப்படிப்பட்ட நியமத்தைக் காணோமே? நல்ல காரியங்களைச் செய்துகொண்டு துக்கத்தை அனுபவித்தலையும், கெட்ட காரியங்களைச் செய்துகொண்டு சுகத்தை அனுபவித்தலையும் காண்கின்றோமன்றோ? இதற்குக் கதி சொல்லவழியில்லாமல் போகின்றது. </p><p>ஆதலால் இப்போது வரும் இன்பதுன்பம் பூர்வகர்ம்ப் பயனே என்றும், இப்போது செய்யும் புண்ணிய பாபங்களுக்கு ஜன்மாந்திரத்தில் பயன் என்றும் அறிந்து கொள்ள வேண்டியது. </p><p><br /><span style="color:#660000;"><strong>சங்கை: ப்ராப்த கர்மாயத்தமாகவே இன்ப துன்பம் வருமென்று சொல்லப்பட்டதே. இன்ப துன்பமாவது மானஸிகமாகிய விருத்தியே அன்றோ? ப்ராரப்த ஆயத்தமாக வருவது இப்படிப் பட்ட மானஸிகமாகவேயுள்ள விருத்தி மாத்திரமா? அவ்விருத்திக்கு ஸாதனங்களாகிய செல்வம் வியாதி, தாரித்திரியம் முதலியவைகளும் கூட ப்ராரப்தாயத்தமாகவே வருவனவா? செல்வம், வியாதி, தாரித்திரியம் முதலியவைகளுக்கு ஏதுவாய் காணப்படும் வியாபாரம், உத்தியோகம், கெட்ட நடத்தை, வ்ரத-உபஸ்தான-தர்மங்கள் முதலியவைகளும் கூட பராரப்தாயத்தமாகவே வருவனவா?</strong></span></p><p>இன்ப துன்பத்திற்கு நேரில் ஸாதனமான செல்வம், வியாதி, தாரித்திரியம், முதலியவைகள் மாத்திரமே ப்ராரப்தாயத்தமாக வருவன. அவைகளுக்கும் ஸாதனங்களான வியாபாரம், துர்மார்க்கம், வ்ரத-உபஸ்தான தர்மங்கள் முதலியனவும் ப்ராரப்த கர்மாயத்தமாய் வருவன என்பது தவறேயாகும்.<br />அவைகளையும் ப்ராரப்தாயத்தமாக வருவன என்போமானால், “இத்தகைய வியாபாரம் கூடாது. துர்மார்க்கம் செய்யாதே. வ்ருத-உபஸ்தான-தர்மங்களைச் செய் என்பது முதலிய விதிவிலக்குகள் வீண் என்றே முடியும். ஏனெனின் ப்ராரப்தாயத்தமாக வருவதைத் தடுக்க எவராலும் இயலாதென சாஸ்திரங்கள் கூறுகின்றமையால் அதே சாஸ்திரங்களில் துர்மார்க்கம் முதலியவை கூடாது, வ்ருத-உபஸ்தான-தர்மாதிகளைச் செய் என்று சொல்லியிருக்கின்றமையால், துர்மார்க்க, வ்ருதோபஸ்தான தர்மாதிகளை மனிதர் தம் இச்சையால் செய்யவும், தவிர்க்கவும் கூடும் என்று அறியப்படுகின்றது. தம்மிச்சையால் செய்யப்படுவதும் தவிர்க்கப் படுவதுமாகிய செய்கைகள் எல்லாம் வாஸனையாலேயே வருவனவன்றி ப்ராரப்த்தால் அல்ல என்பதே சாஸ்திரங்களின் நிர்ணயம்.<br />பூர்வம் தேஹத்தால் செய்யப்பட்ட பாப புண்ணியங்கள் பின்வரும் ஜன்மத்தில் தேக மூலமாகவே பயன் பட்டு துக்க சுகங்களைத் தரும். இந்திரியங்களால் செய்யப்பட்ட கர்மங்கள் இந்திரிய மூலமாகவும், மனோ மாத்திரத்தினால் செய்யப்பட்ட கருமங்கள் மனோ விருத்தி மாத்திரத்தினாலும், ஸ்வப்னாதிகளில் இன்ப துன்பங்களைத் தரும்.</p><p>உதாரணமாக ஒருவன் இன்றிரவில் சரீரத்தில் வ்ரணம் (காயம்) ஏற்பட்டு அதன் மூலமாய்த் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பது மட்டில் ப்ராரப்த கர்மாயத்தமே தவிர, துன்மார்க்கம் செய்ததனாலேயே அந்த வ்ரணம் ஏற்பட வேண்டும் என்றாவது, அல்லது ஸந்மார்க்கத்தில் சென்றே அங்ஙனமாக வேண்டும் என்றாவது அவனது கர்மாவினால் விதிக்கப் பட்டிருக்கும் என்பதல்ல. ரக்த காயம் ஏற்பட்டு துன்புற வேண்டும் என்பது மட்டுமே கர்ம நியதம். ஆனால், அது ஆலயாதிகளுக்கு ஸ்வாமி தரிசனம் செய்யப் போவதில் நிகழ்ந்தாலும் நிகழலாம். அல்லது, துர்மார்க்கம் செய்யப்போன இடத்தில் அடி, சிகைச்சேதம் முதலிய சிக்ஷைகளால் நிகழ்ந்தாலும் நிகழலாம். துர்மார்க்கம் செய்யப்போவதோ, ஸத்காரியம் செய்யப்போவதோ இவை முதலியன அவரவர் வாஸனையாலேயேயாம் என்று அறிக.<br /></p><p>வாக்கு மனக்காயங்களால் செய்த கர்மாவின் பயனை முறையே வாக்கு மனக் காயங்களாலேயே அனுபவிக்க வேண்டும் என்பது மட்டில் பூர்வ கர்ம நியதம் என்பதையே நிர்ணயமாகக் கொள்ள வேண்டும். </p><p>இவ்வுண்மையானது மஹாபாரதம் சாந்திபர்வம் மனு ப்ருஹஸ்பதி ஸமாகம ப்ரகரணம் முதலிய இடங்களில்...</p><p><em>“சரீரத்தால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனைச் சரீரத்தாலேயே அனுபவிக்க வேண்டும். சரீரமே சுகத்திற்கும் துக்கத்திற்கும் ஆயதனமாம். வாக்கினால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனை வாக்கினாலேயே அனுபவிக்க வேண்டும். மனஸினால் எக்கருமத்தைச் செய்கின்றானோ அதன் பயனை மானஸிக விஷயத்தாலேயே அனுபவிக்க வேண்டும்”</em></p><p>என்பது முதலிய வாக்கியங்களால் உபதேசிக்கப் பட்டிருக்கின்றது.</p><p>ஒருவன் சுரோத்திரம் (காது) எனும் இந்திரியத்தினால் பூர்வ ஜன்மத்தினில் ஏதோ ஓர் புண்ணியம் செய்திருந்தான் என வைத்துக் கொள்வோம். அதன் பயன் இப்போது அவ்விந்திரிய மூலமாகவே அனுபவிக்கப் படும் சுகமாயிருக்க வேண்டும். அம்மட்டும் ப்ராரப்த கர்மமேயன்றி அது துர்மார்க்கப் பாட்டைக் கேட்டே ஏற்பட வேண்டும் என்றாவது, ஸத்வாக்கியங்களை சிரவணம் செய்தே வரவேண்டும் என்றாவது நிர்ணயிக்கப் பட்டதல்ல. துர்மார்க்க பாட்டையோ ஸத் வாக்கியங்களையோ சிரவணம் செய்தல் அவரவரது வாஸனையாலேயேயாம். இங்ஙனமே மற்ற இந்திரியங்களால் நிகழும் அனுபவத்திலும் ஊஹித்துக் கொள்க.<br /></p><p><span style="color:#990000;"><strong>சங்கை: ப்ராரப்த கர்மா இந்த தேஹத்தையும் இதனால் ஜீவிக்க வேண்டிய காலத்தையும் அப்படியே வாழ்நாளில் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களையும் தருகின்றது என்று சொல்லப் பட்டதே? தேஹமே ப்ராரப்தம் என்று பெரியோர் சொல்லுகின்றனரே? அம்மட்டோடே விடாமல், அது தேஹம், ஆயுள், போகம் என முவ்வகையாய் பயன் படுகின்றது என்று ஏன் சொல்ல வேண்டும்?</strong></span></p><p><span style="color:#990000;"><strong>அன்றியும், இம்மனித தேஹமானது ஓர் பெரும் புண்ணியத்தினால் வந்தது என்று சொல்லப் பட்டதே. அவ்வாறு புண்ணியத்தின் பயனாக வந்த இந்த தேஹத்தினால் வாழ் நாட்களின் இடையில் துக்கங்களையும் அனுபவிக்கும்படியாதல் ஏன்? புண்ணிய மயமாகிய தேஹம் தோன்றியது முதல் அழியும் வரையில் இன்பத்தையே அனுபவித்தல் அல்லவோ உசிதம்? அப்படியிருக்க பாபப் பயனாகச் சொல்லப்பட்ட துன்பத்தையும் அனுபவிக்கக் காண்கின்றோமே. இதனை எப்படி ஒவ்வுவது?</strong></span></p><p><em><span style="font-size:85%;">விளக்கத்துடன் பதில்கள் மேலும் தொடரும்.... </span></em></p>ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-18224650.post-1132663486655490882005-11-22T18:11:00.000+05:302005-11-22T18:14:46.670+05:30Path to liberationThe concluding teaching of Lord Krishna to Arjuna in the Bhagavad Gita is surrender to Him by resigning all duties to Him, which offers an important insight into spiritual life.<br /><br />Unless one has been diligently performing the duties enjoined in the scriptures (Karma yoga) how is it possible to renounce them in the first place? Is this not the plight of the majority of spiritual aspirants for they do not have the necessary prerequisites to follow any of the prescribed means to liberation? Just as a parent constantly remembers his child who is living abroad more than the one who lives with him, the Supreme Being is also concerned about the welfare of those in bondage as they are separated from Him. When a spiritual seeker turns to Him with devotion the Lord also responds with overwhelming compassion.<br /><br /><br />In his discourse, <strong><span style="color:#cc0000;">Nannilam Sri Vaidyanatha Diskhitar</span></strong> said the path to realise the Ultimate Reality was through devotion to the different forms of God. The Bhagavata Purana states that devotion to God springs in the heart of a person who worships the various manifestations of the Almighty. Absolute faith marks true devotion. But devotion does not mature to this level overnight. It is the culmination of a slow and steady process over several lifetimes but every act and effort in this direction results in spiritual merit.<br /><br />There are <strong>five distinct prerequisites</strong> to develop devotion.<br /><br />The first is <strong>penance</strong>, which broadly translates into all the good habits and devotional acts that one follows in life. This enables to stay attuned to the spiritual goal.<br /><br />The second is reposing <strong>faith</strong> in God's grace.<br /><br /><strong>Fidelity</strong> to truth is the third requisite, which by itself is of immense merit for the scriptures state that the Earth is sustained by truth.<br /><br />The next requirement is a <strong>steadfast mind</strong>, which has to be developed by control of the sensory organs. Unless the mind develops concentration and does not get distracted by the attractions of the world it cannot engage in spiritual pursuit.<br /><br />Finally, the seeker must take <strong>refuge</strong> in God with total faith in His saving grace.<br /><br />After the sages compiled the Dharmasastras they deliberated what were the practices best suited to the Kali yuga. Only feeding others and devotion to God were chosen as they do not incur any transgression even if done improperly.<br /><br />********************************************<br /><br />The above appeared in "The Hindu" on 21st Nov. The URL is as follows:<br /><br /><a href="http://www.hindu.com/2005/11/22/stories/2005112200550900.htm">http://www.hindu.com/2005/11/22/stories/2005112200550900.htm</a>ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-18224650.post-1132657019000730852005-11-22T16:24:00.000+05:302005-11-29T18:29:50.986+05:301. விதி பெரியதா? மதி பெரியதா?<span style="font-size:180%;color:#990000;"><strong>விதி பெரியதா? மதி பெரியதா?<br /></strong></span>இந்து மதத்தை நன்றாக புரிந்து கொண்டோம் என்று நினைப்பவர்கள் கூட இதற்கு சரியாக பதில் கூற இயலாமல் சிரமப்படுகிறார்கள்.<br /><span style="font-size:130%;color:#990000;"><strong></strong></span><br /><span style="font-size:130%;color:#990000;"><strong>பாகம்: 1 வினைப்படியே வாழ்க்கை நடக்குமானால் முயற்சி ஏன்?<br /></strong></span>இந்த கேள்விக்கு சரியாக விடை தெரியாமல் குழம்புவர்களுக்கு ...... இதோ விடை.<br /><br />ஒவ்வொரு ஜீவனின் உள்ளத்தில் கர்ம, வாஸனை, என்று இரண்டு ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன.<br /><br />இதற்கு முன்னெடுத்த மனுஷ்ய ஜன்மத்தில் எவ்வளவோ நல்வினை தீவினைகளைச் செய்திருக்கக்கூடுமன்றோ? அவை செய்யும்போதே பதிவு ரூபமாய் உள்ளத்தினில் பதிந்து அடங்கியிருக்கின்றன. அங்ஙனம் அடங்கியிருந்து மறுஜன்மங்களில் தத்தம் பயனாகிய இன்ப துன்பங்களைத் தருகின்றன. அங்ஙனம் இன்ப துன்பங்களை மாத்திரம் தருவனவே கர்மங்கள் எனப்படுகின்றன.<br /><br />அவ்வின்ப துன்பங்கள் எக்காலத்தில் எவை எவை வருவனவோ அவையவை அக்காலத்தில் தன் செயல் மூலமாகவோ அல்லது பிறன் செயல் மூலமாகவோ அல்லது தைவீகமாகவோ ஜீவர்களால் அனுபவிக்கும் படியாகும். ஆனால், ஜீவர்களின் செய்கைக்குக் காரணம் கர்மாவாகாது. அது, வாஸனை. வாஸனையாவது, யாதானும் ஓர் காரியத்தைப் பலமுறை செய்தால் மீண்டும் அப்படிப்பட்ட காரியத்தையே செய்துகொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றச்செய்வதாகிய அப்யாஸ ஸம்ஸ்காரமேயாம். இந்த வாஸனையே ஜீவர்களை எதனையானும் ஸங்கற்பித்துக்கொண்டே இருக்கச் செய்கின்றது.<br /><br />ஸங்கற்பத்தால் காமமும் (விருப்பமும்) காமத்தால் செய்கையும் நிகழுகின்றது. வாஸனையானது இங்ஙனம் நேரில் ஸங்கர்பத்திற்கும் பரம்பரையாய் செய்கைக்கும் ஹேதுவாகின்றது. வாஸனாவசமாக நல்வினை தீவினைகளில் செல்லும்போது காகதளீய * நியாயமாகவே பூர்வகர்மா பயன்பட்டு ப்ராரப்தமாக வந்து இன்ப துன்பத்தைத் தருகின்றது. இப்போது செய்யும் கர்மாவினால் அவ்வின்ப துன்பம் வருகின்றதென்பதில்லை. கர்மா வேறு வாஸனை வேறு. வாஸனையால் ஏற்படுவது ஸங்கற்பம் காமம் முதலியவை. கர்மாவினால் வருவது இன்பதுன்பம். இவ்விதம் விவேகித்து அறிந்து கொண்டால் சாஸ்திர வாக்கியங்களில் விரோதம் சிறிதுமில்லை என்பது நன்றாய் விளங்கும<br /><br />சங்கை<br /><br /><span style="color:#990000;"><strong>கர்மாவுக்கு அந்நியமாய் வாஸனை எனும் ஒன்றை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்? கர்மாவே இன்ப துன்பங்களைத் தருவது போல அவ்வின்ப துன்பத்திற்கு ஏதுவாய்க் காணப்படும் செய்கைகளிலும் ஏவி விடுகின்றது என்பது கூடாதோ?<br /></strong></span><br />இது உசிதமல்ல. நல்வினை தீவினைகளில் ஏவிக்கொண்டே கர்மாவே இன்ப துன்பங்களையும் தருகின்றதெனின், புண்ய கர்மாவினாலேயே இன்பமும் பாவத்தினாலேயே துன்பமும் வருகின்றது என்பது போல புண்ய கர்மாவினால் புண்ணிய கார்யங்களிலேயே ஸங்கற்ப காமாதிகள் உண்டாக வேண்டும் என்றும் அவ்வாறே பாப கர்மத்தினால் கெட்ட கார்யங்களிலேயே ப்ரவ்ருத்தி ஏற்பட வேண்டும் என்றும் கொள்ள வேண்டியதாகிறது. அப்படியானால், சுகம் அனுபவிக்கின்றவர்கள் எல்லோரும் நல்ல கார்யத்திலேயே சென்று கொண்டிருக்க வேண்டும் என்றும், துன்பம் அனுபவிக்கின்றவர்கள் கெட்ட கார்யத்திலேயே சென்று கொண்டிருக்க வேண்டும் என்றும் கொள்ள வேண்டியதாகின்றது. ஆனால் உலகில் இந்த நியமம் காணப்படவில்லை. நல்ல கார்யங்களையே செய்து கொண்டு துன்பத்தையே அனுபவிக்கின்றதையும், கெட்ட கார்யங்களையே செய்து கொண்டு இன்பத்தையே அனுபவிக்கின்றதையும் காண்கின்றோம் அன்றோ? ஆதலால், ஸங்கற்பம் முதலிய செய்கைகளைச் செய்விப்பது ஒன்றும் இன்ப துன்பங்களைத் தருவது மற்றொன்றுமாக இருக்க வேண்டும் என்ற நிர்ணயிக்கப்படுகின்றது. ஆனது பற்றியே, கர்மாவிலும் வாஸனை வேறு என்று கொள்ள வேண்டியது ஆகின்றது.<br /><br />சங்கை<br /><br /><span style="color:#990000;"><strong>கர்மா, வாஸனை என வேற்றுமைப் படுத்திப் பிரித்துச் சொல்லப் பட்ட இவ்விரண்டும் எதனால் வந்தது என்பதைக் கவனித்தால், இதற்கு முன் எடுத்த ஜன்மங்களில் செய்த செய்கையினாலேயே என்பது விளங்குகிறது. இங்ஙனம், இரண்டிற்கும் காரணம் ஒன்றாகவே இருக்கின்றமையால் இவ்விரண்டு கார்யங்களையும் (கர்ம வாஸனைகள் இரண்டையும்) ஒன்றே எனக்கொள்ளலாமே? உசிதம் இவ்வாறு இருக்க, கர்மா வேறு, வாஸனை வேறு என இரண்டையும், தனித்தனிப் பொருளாய்ச் சொல்லுவது ஏன்?</strong></span><br /><br />இச்சங்கை அவிவேகத்தாலேயே நிகழுவதாம். அதெப்படி என்றால், பூர்வ ஜன்மத்திய செய்கைகளே கர்ம, வாஸனை இரண்டிற்கும் ஹேதுவாயிருக்கினும் அச்செய்கைகளால் வருவது இரண்டு விதமாய்ப் பிரிவடைகின்றமையால், அவைகளை நாம் இரண்டாகவே விவேகித்து கொள்ள வேண்டும்.<br /><br />உதாரணமாக, சுருட்டு குடித்தல் புகையிலை போடுதல் முதலிய செய்கைகளால் கபால வறட்சி (cancer) முதலிய வியாதியொன்றும், மீண்டும் அவைகளை உபயோகிக்க வேண்டும் எனும் அப்யாஸப் பற்று மற்றொன்றுமாக இரண்டு விதமான விசேஷம் ஏற்படுவதுபோல, நல்வினை தீவினைகளைச் செய்தலால் ஏற்படும் விசேஷமும் இரண்டு விதமாய் பிறிகின்றது. அதாவது, ஜன்மாந்தரத்தில் அனுபவிக்க வேண்டிய இன்ப துன்பங்களுக்கு மாத்திரம் ஹேதுவாகும் கர்மா ஒன்றும், மீண்டும் அதே கார்யங்களில் தூண்டிவிடுவதாகிய அப்யாஸ ஸம்ஸ்காரம் மற்றொன்றுமாம்.<br /><br />ஒரு கார்யத்தை ஓர் தடவை செய்தாலும் அது ஓர் கர்மாவாய்விடும். ஓரே காரியத்தை பல முறை செய்தால் ஒழிய வாஸனை ஏற்படாது. கர்மாவினால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும். வாஸனையால் வரும் ஸங்கற்பத்தை விவேகத்தால் வென்று விடலாம். கர்மா மிகவும் பலமுடையது. வாஸனை அற்பமே. இங்ஙனம், இவ்விரண்டிற்கும் மிகவும் வித்தியாஸமிருக்கின்றது. ஆதலால் இவ்விரண்டையும் ஒன்றாகக் கொள்ள இயலவில்லை. எனவே, கர்மா வேறு வாஸனை வேறு என்று சொல்லப்பட்டது.<br /><br />சங்கை<br /><br /><span style="color:#990000;"><strong>வாஸனையே, ஸங்கற்பம் முதலியவைகளின் மூலமாக, செய்கைக்கு ஏதுவாகின்றது என்று சொல்லப்பட்டதே. அதெப்படி?</strong></span><br /><br />உதாரணமாக அழகிய மங்கை, ஆபரணம், விலை உயர்ந்த வஸ்திரம், ருசியாகிய கனி முதலிய பொருள்கள் தற்செயலாய் எதிர்ப்படும் போது, எதிரில் உள்ளதை எல்லாம் பார்க்கும் இயல்பினால், நேத்திரம் அவைகளை நோக்கவே, அசுப வாஸனையே விசேஷமாய் உள்ளவன் ஆனால், இவை எவ்வளவு அழகாய் இருக்கின்றன என அவைகளின் சிறப்பை ஸங்கற்பிப்பான். அந்த ஸங்கற்பத்திற்குச் சற்று நேரம் இடம் கொடுத்து விட்டானாயின், அவைகளை தான் அனுபவிக்க வேண்டும் என விருப்பம் உதிக்கும். அவ்விருப்பம் மேற்படின் பிறகு அவைகளை அனுபவித்தே தீருவது என்னும் நிச்சயம் உடையோனாய் அக்கார்யத்தில் பிரவர்த்திப்பான். இவ்வுண்மையானது,<br /><br />विशयेश्वाविशेच्चेत स्सम्कल्पयति तद्गुणानु।<br />सम्यक्सम्कल्पनात्कामः कामात्पुम्शःप्रवर्ततम्॥<br /><br />விஷயங்களில் சித்தஞ்சென்றால், அவைகளின் குணங்களை ஸங்கற்பிக்கின்றது. நன்றாய் ஸங்கற்பித்தால் விருப்பம் உதிக்கும். காமம் ஏற்படின் மனிதன் பிரவர்த்திக்கின்றான்.<br />என சங்கர பகவத்பாதர் முதலிய பெரியோர்களால் உபதேசிக்கப்பட்டிருக்கின்றது.<br /><br />விவேகிக்கு அசுப வாஸனை சற்று குன்றியிருக்கும் ஆகையால் அவ்விஷயங்கள் எதிர்படும் போதே கண் பார்த்தாலும் பிறகு அவன் அவைகளின் குணங்களை ஸங்கற்பிக்க விடாமல் மனஸை நிக்ரஹித்து மற்றோர் நல்ல விஷயத்தில் செலுத்துவான். அங்ஙனமாயின், அவ்வசுப வாஸனை யாதும் செய்வதற்கு இன்றி அடங்கிப் போகின்றது. வாஸனையால் செய்கை நிகழுவதும் அதனை நிக்ரஹித்தலும் இவ்வாறே.<br /><br />வாஸனையானது சுபம் அசுபம் என்று இரு வகையாகும். பூர்வம் பாவங்களையே அடுத்தடுத்து செய்திருந்தால் அசுப வாஸனையும், புண்ணியங்களையே விசேஷமாய் செய்திருந்தால் சுபவாஸனையும், பூர்வம் பாவங்களையே விசேஷமாய் செய்திருந்தால் சுபவாஸனையும் ஏற்பட்டு சித்தத்தில் பதிந்து கிடக்கும். பூர்வம் சுபவாஸனையே விசேஷமாய் ஏற்பட்டிருக்கினும் இப்போது அஸத் ஸஹவாஸம் முதலியவைகளைச் செய்தால் அது குன்றி அசுப வாஸனையே பலத்து விடும். அல்லது பூர்வம் அசுப வாஸனையே விசேஷமாய் ஏற்பட்டிருக்கின், இப்போது செய்யும் ஸத்ஸஹவாஸம் முதலியவைகளால் அது குன்றி, சுபவாஸனை பலத்து விடும். ஆதலால், அசுப வாஸனையை தடுத்து சுபவாஸனையின் வழியே நடக்க வேண்டும்.<br /><br />இங்ஙனம்....<br /><br />वासनाच्चिधाप्रोक्ताशुद्धाचमलिनाचसा।<br />वासनौघेनशुद्धेन तत्र चेद्नुनीयसे तत्क्रमेनाशुतेनैवपद्मप्राप्यसि शाश्वतम्।<br />अथचेद्शुभौ भाव स्त्वाम्योजयति संकटे।<br />प्राक्तन्स्तद्सौयत्राज्जेतव्यौ भवतास्वयं॥<br /><br />"வாஸனை சுத்தம் மலினம் என்று இருவகையாம். சுத்த வாஸனைத் தொகுதிகள் நல் வழியில் ஏவும். அங்ஙனம் ஏவும் போது அவ்வழி நடப்பாயாயின், கிரமமாக அழிவில்லாத பதத்தை அடையலாம். அசுப வாஸனையானது கெட்ட காரியத்தில் ஏவும். அப்படி ஏவும் போது அந்த பூர்வ வாஸனையை பலமான முயற்சி கொண்டு உன்னால் வென்று போடத் தக்கது. "<br />என்பது முதலிய சுலோகங்களால் யோக வாஸிஷ்டம் முதலிய நூல்களில் உபதேசிக்கப் பட்டிருக்கின்றது.<br /><br />சுப வாஸனையின்படி நடந்தாலும், அல்லது அசுப வாஸனையின்படி நடந்தாலும் இப்போது வரும் இன்ப துன்பம் வந்தே தீரும். அது மாறுவதில்லை. ஏனெனின் இந்த சரீரம் கர்ப்பத்தில் உற்பத்தியாகும் போதே $இச்சரீரத்தினால் இந்த இந்த ஸமயத்தில் இந்த இந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டும்$ என இவனது பூர்வ கர்மங்களுக்கு தக்கபடி ஈசனால் ஆஜ்ஞை செய்யப்பட்டு விட்டது. அதை மீறி நடக்க எவராலும் இயலாது.<br />ஈசாக்ஞை மிக்க பலமுடையது. ஆதலால், அற்ப யோக்கியதை உடைய பசுக்களாகிய இச்சீவர்களால் அதன்படி எப்போது எவ்விதமான இன்ப துன்பம் வருமோ அப்போது அதற்குட்பட்டே நடக்க வேண்டும். இவ்வாறு, நல்லதை செய்தாலும் கெடுதியைச் செய்யினும் இப்போது வரும் பயன் ஒன்றே எனின் எதைச் செய்வது நலம் என்று யோசிக்க வேண்டும். ஒன்றும் செய்யாமல் ஒருவனும் ஓர் க்ஷணமும் இருக்க இயலாது. குரங்குக்குப் போல எப்போதும் யாதானும் ஓர் சேஷ்டை இருந்து கொண்டேயிருக்கும்.<br /><br />नहि कश्चित् क्षणमपि जातु तिश्मत्यकर्मकृत्।<br />कर्यतेह्यवशः कर्म सर्वः प्रकृति जैर्गुणैः॥<br /><br />"ஒருவனும் ஓர் க்ஷணமும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க மாட்டான். எல்லோரும் பிரகிருதியால் வரும் குணங்களால் அவசமாக எதனையேனும் செய்து கொண்டேயிருக்கின்றனர்"<br />என பகவானால் அர்ஜுன்னுக்கு உபதேசிக்கப்பட்டிருக்கின்றது.<br /><br />இங்ஙனம் இருத்தலால், மனிதர் எதனை செய்வது நலம் என யோஜிப்போமானால், சுப வாஸனையின் வழி நடக்க வேண்டும் என்று அறியப்படுகின்றது. அசுப வாஸனையின் வழி நடந்து தீமையைச் செய்தால் இச்செய்கையே பாவமாய் முடிந்து மறுமையில் துன்பத்திற்கே ஏதுவாகும். சுபவாஸனையின்படி நடப்பதோ என்றால், அதுவே புண்ணியமாய் வந்து மருமையில் இன்பத்தையே தரும். ஆதலால், மனிதர் அசுபவாஸனையின்படி நடக்கக் கூடாது என்பதே விவேகம்.<br /><br />சுபவாஸனையின்படியே நடக்கும் போது ஓரோர் சமயம் ஏற்கனவே சித்தத்தில் பதிந்துள்ள அசுப வாஸனைகள் பல ஓருங்கு சேர்ந்து கெட்ட காரியங்களில் மிக்கப் பலமாக ஏவுவதும் உண்டு. தீரர் அதற்கு சிறிதும் சலியாமல், திட விவேகத்தால் அவைகளைத் தகைந்து வென்று போடுவார். சொற்ப காலம் சுருட்டு, கள், கஞ்சா முதலியவைகளை அப்பியஸித்தவன் பின்னர் அவைகளை துரப்பியாஸம் எனக்கண்டு அவைகளை நிறுத்தி யிருக்கினும் ஓரோர் சமயம் முன்போலவே அவைகளில் சபலம் உண்டாகின்றது. அது, பூர்வம் செய்த அப்பியாஸத்தினால் ஏற்பட்டுள்ள வாஸனையினாலேயே அன்றோ?<br /><br />அற்ப கால அப்பியாஸத்திற்கே இவ்வளவு பலமாக வாஸனை ஏற்படும் எனின், அனந்த கோடி ஜந்மங்களில் அழகிய மங்கையை விரும்புதலும், ஆடையாபரணங்களில் மயங்குவதும் ருசியாகிய பதார்த்தங்களை உண்பதும் இவை போன்ற காரியங்கள் அப்பியாஸத்தில் ஏற்பட்டிருக்கம் ஆதலின் அதற்குத் தக்கபடி வாஸனை மனஸினில் எவ்வளவு திடமாய் ஊன்றி இருக்கக் கூடும்?<br /><br />விளக்கத்துடன் பதில்கள் மேலும் தொடரும்....ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-18224650.post-1130306274452315622005-10-26T11:24:00.000+05:302005-10-27T22:55:07.890+05:30VAIRAGYA SHATAKAM<span style="font-size:130%;">VAIRAGYA SHATAKAM</span> of Bhadruhari<br /><span style="font-size:85%;">Sri Ganesaya Namah: </span><br /><span style="font-size:85%;">Sri Sadgurubyo namah: </span><br /><span style="font-size:85%;"></span><br /><span style="font-family:arial;">This consists of 100 slokas. All Gems of philosophy. It is my personal experience that brooding / meditating on the meaning of these really bring focus to daily activities. A shlokam a day keeps worries away! </span><br /><br /><span style="font-size:85%;">[Note: You should be seeing the sanskrit and tamil letters properly without difficulty. If not, Please change the encoding. (right click on web page. Select : encoding -> Auto Select -> Unicode (UTF-8). That’s it. This will not trouble english pages also. If you still have difficulty, Change control panet -> regional settings -> (tab) Languages -> (select) Install files for complex scripts. If you need more details, Please post here or write to vaidyanathan.jayaraman AT gmail.com]</span><br /><br />SHLOKA 1<br /><br />चूडोत्तंसित-चन्द्र-चारु-कलिका-चञ्चच्-छिखा-भास्वरो<br />लीला-दग्ध-विलोल-काम-शलभः श्रेयो-दशाग्रे स्फुरन्।<br />अन्तः-स्फूर्जद्-अपार-मोह-तिमिर-प्राग्-भारम् उच्चाटयन्<br />श्वेतः-सद्मनि योगिनां विजयते ज्ञान-प्रदीपो हरः॥१॥<br /><br />cUDottaMsita-candra-cAru-kalikA-ca~ncac-ChikhA-bhAsvaro<br />lIlA-dagdha-vilola-kAma-shalabhaH shreyo-dashAgre sphuran<br />antaH-sphUrjad-apAra-moha-timira-prAg-bhAram uccATayan<br />shvetaH-sadmani yoginAM vijayate j~nAna-pradIpo haraH 1<br /><br /><span style="font-size:130%;"><strong>ஞான விளக்கு</strong> </span><br /><br />தலையில் அலங்காரமாக வைக்கப்பட்டுள்ள அழகிய பிறைச்சந்திரன் பிரகாசிக்கும் சடை, விளக்கை நெருங்கும் விட்டில் பூச்சியைக் கொல்வது போல, தன்னை மயக்க வந்த மன்மதனை விளையாட்டாகவே சாம்பலாக்கிய பெருமை, அடியார்களுக்கு மங்கலங்களை நிறைவேற்றி வைப்பதில் முன்னிற்கும் கருணை, உள்ளத்தின் உள்ளே சேர்ந்து இருக்கும் அறியாமை என்னும் இருட்டைத் துரத்தும் ஞான தீபம், பாவங்களை அபகரிக்கும் இப்படிப்பட்ட பரமேச்வரன், யோகிகளின் மனக்கோவிலில் எப்போதும் பிரகாசமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.<br /><br />LAMP OF WISDOM<br /><br />Decorated with the beautiful crescent on his shining hair, fame of turning manmada to ash like the lamp extinguishing the nearing moth, grace expressed by enriching wellness of devotees, the Easwara who steals the sins, the lamp of wisdom driving away the darkness of preserved ignorance, shines brightly in temple of minds of yogis for ever.<br /><br />================<br /><br />SHLOKA 2<br /><br />भ्रान्तं देशम् अनेक-दुर्ग-विषमं प्राप्तं न किञ्चित् फलं<br />त्यक्त्वा जाति-कुलाभिमानम् उचितं सेवा कृता निष्फला।<br />भुक्तं मान-विवर्जितं पर-गृहेष्व् आशङ्कया काकवत्<br />तृष्णे जृम्भसि पाप-कर्म-पिशुने नाद्यापि सन्तुष्यसि॥२॥<br /><br />bhrAntaM desham aneka-durga-viShamaM prAptaM na ki~ncit phalaM<br />tyaktvA jAti-kulAbhimAnam ucitaM sevA kR^itA niShphalA bhuktaM mAna-vivarjitaM para-gR^iheShv Asha~NkayA kAkavat<br />tR^iShNe jR^imbhasi pApa-karma-pishune nAdyApi santuShyasi 2<br /><br /><span style="font-size:130%;"><strong>ஆசை தாகமே </strong></span><br /><br />பணம் சேர்க்கும் ஆசை, அதனால் ஏராளமான தடைகள் இருந்தும், போக லாயக்கில்லாத இடங்களை எல்லாம் சுற்றி அலைங்தும் கொஞ்சம் கூட பலனில்லாமல் போய்விட்டது. முறையான ஜாதி, குல, கௌரவங்களை விட்டு விட்டுச் செய்த வேலைகள் எல்லாம் வீணாகிப் போய் விட்டன. உணவுக்கு ஆசைப்பட்டு, வெட்கத்தை விட்டு, காக்கை போல மற்றவர் வீடுகளில் சாப்பிட்டும் பலன் இல்லை. இவ்வளவு அவமானப்பட்டும், ஆசை தாகமே , நீ திருப்தி அடையவில்லை. பாவச் செயல்களின் பலனாகிய நீ, மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறாயே? 2<br /><br /><span style="font-size:130%;"><strong>OH! DESIRE! </strong></span><br /><br />Travelling across many difficult and dangerous places brought me no wealth; giving up pride of lineage, I have served the rich in vain, without self-respect, in others' homes; I have craved and eaten like crows in others' homes; and still, oh Desire! instigator of wicked deeds, you prosper and even then remain unsatisfied. 2<br /><br />*****ஜயராமன்http://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.com5