Friday, August 18, 2006

ஆசைக்கு நிந்தனை! - வைராக்ய சதகம்

வைராக்ய சதகம் - நான்கு செய்யுள்களை முந்தைய பகுதியில் பார்த்து அனுபவித்தோம்.

தொடர்ந்து, இங்கே எழுதுகிறேன்.

இங்கும் கவி ஆசையை மேலும் நிந்திக்கிறார்.

=====================================================

amIShAM prANAnAM tulita-bisinI-patra-payasAM
kR^ite kiM nAsmAbhir vigalita-vivekair vyavasitam |
yad-ADhyAnAm agre draviNa-mada-niHsaMj~na-manasAM
kR^itaM vIta vrIDair nija-guNa-kathA-pAtakamapi ||5||

अमीषां प्राणानां तुलित-बिसिनी-पत्र-पयसां
कृते किं नास्माभिर् विगलित-विवेकैर् व्यवसितम्।
यद्-आढ्यानाम् अग्रे द्रविण-मद-निःसंज्ञ-मनसां
कृतं वीत व्रीडैर् निज-गुण-कथा-पातकमपि॥५॥

அமீஷாம் ப்ராணானாம் துளித-பிஸினி பத்ர பயஸாம் |
க்ருதே கிம் நாஸ்மாபிர் விகலித- விவேகைர்- வ்யவஸிதம் ||
யதாட்யாநாம் அக்ரே த்ரவிண மதநி:ஸம்ய்ஞ-மனஸாம்
க்ருதம் வீத வ்ரீடைர்நிஜ குண கதா பாதகமபி || 5 ||

What attempts for the sake of our life, as fickle as drops floating on lotus leaf! With stupefied minds, We committed the sin of shamelessly singing our self-praise stories in front of rich proud with their wealth || 5 ||

தாமரையிலை தண்ணீர் போன்ற நிலையற்ற நம் உயிரை காப்பாற்ற விவேகம் இழந்து நாம் என்னவெல்லாம் செய்யவில்லை?

பணத்தால் செருக்குற்ற செல்வர்களின் முன்னால் வெட்கமிழந்து குழப்பமான மனதுடன் தற்புகழ்ச்சி கதைகளை சொல்லும் பாவத்தை செய்தோம் || 5 ||



விளக்கம் : ப்ராணா: - ப்ராணம் – உயிர்நாடி, வாழ்க்கை என்று இரண்டு விதமாக பார்க்கலாம். தற்புகழ்ச்சி பாவம். அதை பணத்துக்காக கர்வமானவர்களிடம் மனதை அடகுவைத்து செய்தோமே என்று வருந்துகிறார் கவி. நிலையற்ற வாழ்க்கைக்கான நிலையான தன்மானத்தை இழக்க கூடாது என்பது தாத்பர்யம். || 5 ||

===================================================


क्षान्तं न क्षमया गृहोचित-सुखं त्यक्तं न सन्तोषतः
सोढा दुःसह-शीत-वात-तपन-क्लेशा न तप्तं तपः।
ध्यातं वित्तमहर्निशं नियमित-प्राणैर्न-शंभोः पदं
तत्-तत्-कर्म कृतं यद् एव मुनिभिस्तैस्तैः फलैर्वञ्चिताः॥६॥

kShAntaM na kShamayA gR^ihocita-sukhaM tyaktaM na santoShataH
soDhA duHsaha-shIta-vAta-tapana-kleshA na taptaM tapaH |
dhyAtaM vittamaharnishaM niyamita-prANairna-shaMbhoH padaM
tat-tat-karma kR^itaM yad eva munibhistaistaiH phalairva~ncitAH ||6||

க்ஷாந்தம் ந க்ஷமயா க்ருஹோசித-சுகம் த்யக்தம் ந ஸந்தோஷத:
ஸோடா து:ஸஹ ஶஈத-வாத-தபன-க்ளேஶஆ ந தப்தம் தப: |
த்யாதம் வித்தமஹர்னிஶம் நியமித-ப்ராணைர்ன-ஶம்போ: பதம்
தத்-தத்-கர்ம க்ருதம் யதேவ முனிபிஸ்தைஸ்தை: பளைர்வஞ்சிதா: || 6 ||

We forgave not out of pardon (because of weakness); gave-up home comforts not out of happiness (but out of lack of fulfillment); tolerated unberable cold, wind and heat not for penance (but without austerities); controlling senses, intensely thought of riches day and night but not of Shiva’s feet. Thus, We have performed all like ascetic saints, but without any benefits. || 6 ||

தவறான காரியங்களை பொறுத்தோம், மன்னிப்பினால் அல்ல (ஆனால், பலமின்மையால்). வீட்டு சுகங்களை துறந்தோம், ஆனால் சந்தோஷப்பட்டு அல்ல (ஆனால், திருப்தியின்மையால்). பொறுக்க இயலாத குளிர், வெயில், காற்றை சகித்தோம், ஆனால், தவத்திற்காக அல்ல. தன்னை அடக்கி இரவு பகல் செல்வங்களை தியானித்தோம், பரமேச்வரன் திருவடிகளை அல்ல. இந்த செயல்கள் எல்லாம் முனிவர்களை ஒத்து செய்தோம், ஆனால் பலன் ஏதுமில்லை! || 6 ||

விளக்கம்: பொறுமையாக இருப்பது, அவசியமான சுகங்களை விடுவது, குளிர்-வெயில் என்று பாராமல் முயற்சி செய்வது எல்லாம் முனிவர்களின் இயல்புகள். அவைகளை நாமும் செய்கிறோம், ஆனால் பலனில்லை. காரணம், இறைவனின் திருவடிகளுக்காக முயற்சிக்காமல் சம்சாரத்திற்காக உழலுகிறோம்.

7. भोगा न भुक्ता वयमेव भुक्ताः
तपो न तप्तं वयमेव तप्ताः।
कालो न यातो वयमेव याताः
तृष्णा न जीर्णा वयमेव जीर्णाः॥७॥

bhogA na bhuktA vayameva bhuktAH
tapo na taptaM vayameva taptAH |
kAlo na yAto vayameva yAtAH
tR^iShNA na jIrNA vayameva jIrNAH ||7||

போகா ந புக்தா வயமேவ புக்தா:
தபோ ந தப்தம் வயமேவ தப்தா: |
காலோ ந யாதோ வயமேவ யாதா:
த்ருஷ்ணா ந ஜீர்ணா வயமேவ ஜீர்ணா: || 7 ||

While attempting enjoyment of mundane wordly pleasures, We ourselves got consumed (in desires); Attempting austerities, We got ourselves burned; attempting to spend time, Our life has come to an end; Alas, our desires did not get satisfied, but we ourselves are consumed in desires. || 7 ||


உலக சுகங்களை அனுபவிக்க முயன்று, நாமே அந்த சுகங்களுக்கு இறையானோம். தவம் செய்ய முயன்று, நாமே தவித்தோம். காலத்தை கழிக்க முயன்று நாமே (வாழ்க்கையின்) முடிவை எட்டினோம். (அந்தோ!), ஆசையை ஜீரணம் செய்ய முயன்று நாமே அதற்கு இரையானோம் || 7 ||



விளக்கம்: ஆசைக்கு தீனி போட்டு மனிதனே தன் ஆயுளை அதற்கு பலியாக்குகிறான் என்கிறார் கவி. இந்த செய்யுளில், போகா - போக்தா भोगा - भोक्ता (நுகரும் இன்பம் - நுகர்பவன்) தபம் - தப்யம் तपं - तप्यं (தவம் - தவிப்பு) என்கிற ஜோடி வார்த்தைகள் அனுபவிக்க ரசமானவை. भोगं போகம் என்பதை உலக சுகம் என்று தமிழ்படுத்தியுள்ளேன் || 7 ||


बलीभिर्मुखमाक्रान्तं पलिनेताङ्कितं शिरः।
गात्राणि शिथिलायन्ते तृष्णैका तरुणायते॥८॥

balIbhirmukhamAkrAntaM palinetA~NkitaM shiraH |
gAtrANi shithilAyante tR^iShNaikA taruNAyate ||8||

பலீபிர் முகமாக்ராந்தம் பலிநேதாங்கிதம் சிர: |
காத்ராணி சிதிலாயந்தே த்ருஷ்ணௌகா தருணாயதே || 8 ||


வரிகள் நிறைந்த சுருங்கிய முகம், நரைமுடிகளால் தாக்கப்பட்டு வெள்ளையாக்கப்பட்ட தலை, தளர்ந்து போன அங்கங்கள், ஆசை மட்டுமே இளைமையாக இருக்கிறது!! || 8 ||


விளக்கம்: வாழ்க்கையின் இறுதியிலும் ஆசையின் தாக்கம் குறைவதில்லை என்கிறார் கவி. நரைமுடிகள் தலையை தாக்குவதாக (आक्रान्तं) சொல்வது கவிதை நயம்.



nivR^ittA bhogecChA puruSha bahumAno.api galitaH
samAnAH svaryAtAH sapadi suhR^ido jIvitasamAH |
shanairyaShTyutthAnaM ghana-timira-ruddhe ca nayane
aho mUDhaH kAyastadapi maraNApAya-cakitaH ||9||

निवृत्ता भोगेच्छा पुरुष बहुमानोऽपि गलितः
समानाः स्वर्याताः सपदि सुहृदो जीवितसमाः।
शनैर्यष्ट्युत्थानं घन-तिमिर-रुद्धे च नयने
अहो मूढः कायस्तदपि मरणापाय-चकितः॥९॥


நிவ்ருத்தா போகேச்சா புருஷ பகுமானோபி கலித: |

ஸமானா: ஸ்வர்யாதா: ஸபதி ஸூஹ்ருதோ ஜீவிதஸமா; |

ஶனைர் யஷ்ட்யுத்தானம் கன திமிர ருத்தே ச நயனே

அஹோ மூட: காயஸ்ததபி மரணாபாய சகித: || 9 ||



(சுகங்களில்) இச்சை இறங்கிவிட்டது. மனிதன் என்கிற கௌரவமும் போய்விட்டது. (என்) சமமான நண்பர்களோ சொர்க்கத்துக்கு விரைவாக ஓடி விட்டார்கள். (என்) வாழ்க்கையோ கோல் ஊன்றி மெதுவாக எழும்பும் நிலை. இரண்டு கண்களும் கூட கனமான திரைகளால் மூடப்பட்டன. அந்தோ!! இருந்த போதிலும், இந்த முட்டாள் உடம்பு மரணத்தை எண்ணி நடுங்குகிறது. || 10 ||

விளக்கம் - புருஷன் என்கிற கௌரவமும் போனது என்பதில் கவி – அந்த पुरुषः என்கிற பதத்தில் கணவன், ஆண்பிள்ளை, மனிதன் என்று மூன்று விதமான அர்த்தங்களில் யோசிக்கலாம். சமமான நண்பர்கள் सुहृदो समानाः ஸூஹ்ருதோ ஸமானா: என்பது ஒரு அற்புதமான பதம். சொர்க்கத்துக்கு ஓடிவிட்டதாக (ஆயாதா:) சொல்வது சுவை.

======================

மேலும் தொடரும்....

தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பும், விளக்கங்களும் என்னுடையவை.

பிழைகளையும், font குழப்பங்களையும் தயை செய்து எனக்கு தெரியப்படுத்தவும்.

நன்றி

5 comments:

கோவி.கண்ணன் [GK] said...

//விளக்கம்: வாழ்க்கையின் இறுதியிலும் ஆசையின் தாக்கம் குறைவதில்லை என்கிறார் கவி//

ஜயராமன் சார்... இது சரிதான் !
90 வயதானாலும் யாரும் சாவதற்கு அஞ்சவே செய்வர் !

விளக்கம் எல்லாமே அருமையாக மொழிப் பெயர்த்துள்ளீர்கள்.

Anonymous said...

Jayaraman Sir,

This is too good.

குமரன் (Kumaran) said...

//உலக சுகங்களை அனுபவிக்க முயன்று, நாமே அந்த சுகங்களுக்கு இறையானோம். தவம் செய்ய முயன்று, நாமே தவித்தோம். காலத்தை கழிக்க முயன்று நாமே (வாழ்க்கையின்) முடிவை எட்டினோம். (அந்தோ!), ஆசையை ஜீரணம் செய்ய முயன்று நாமே அதற்கு இரையானோம் || 7 ||
//

உண்மை.

Sri Srinivasan V said...

Dear Shri JAYARAMAN,
Really nice to read your postings on Vairagya sADAGAM.
Thanks for all your EFFORTS.
God Bless you,
affly,
srinivasan.

अनुनाद सिंह said...

अत्युत्तमम्