Tuesday, September 19, 2006

எந்த நிலையிலும் ஆசை - வைராக்ய சதகம் - VIII

முன் பகுதியில் 14 ச்லோகம் வரை பார்த்தோம்.

மேலும், தொடருகிறேன்....

================

பாடல் - 15


bhikShA-shanaM tadapi nIrasam eka-vAraM
shayyA ca bhUH parijano nija-deha-mAtram |
vastraM vishIrNa-shata-khaNDa-mayI ca kanthA
hA hA tathApi viShayA na parityajanti ||15||

भिक्षा-शनं तदपि नीरसम् एक-वारं
शय्या च भूः परिजनो निज-देह-मात्रम्।
वस्त्रं विशीर्ण-शत-खण्ड-मयी च कन्था
हा हा तथापि विषया न परित्यजन्ति॥१५॥

பிக்ஷா-சனம்-ததபி-நீரஸமேகவாரம்
சய்யா ச பூ: பரிஜனோ நிஜ தேஹ மாத்ரம் |
வஸ்த்ரம் விசீர்ண சத கண்ட மயீ ச கந்தா
ஹா ஹா ததாபி விஷயா ந பரித்யஜந்தி || 15 ||

===================

பொருள் - 15


தினசரி ஒருவேளை கிடைக்கும் பிச்சையிட்ட, அதுவும் சுவையற்ற, உணவு; பூமியே படுக்கை; உண்மையில் (இவ்) உடல் மட்டுமே சேவகன்; தேய்ந்துபோய் நூறு துண்டுகளாகி தைத்த துணியே உடுப்பு; ஹா!! ஹா!! இருந்தாலும், விஷய சுகங்களை (ஒருவன்) விடுவதில்லை || 15 ||

====================

மேலுரை - 15


வாழ்க்கை நிராசையானவருக்கும் விஷயங்களில் ஆசை நிற்பதில்லை என்கிறார் கவி. எல்லா சாதனங்களை துறந்தோருக்கும் அவர்கள் அனுபவிக்காத சுகங்களில் ஆசை குறைவதில்லை. இதுவே ஆச்சரியம் என்பதை ஹா!! ஹா!! என்று வியக்கிறார். புவி (பூ:) என்பது கட்டாந்தரை என்பது சூட்சுமம். துறவிக்கு அவன் உடலே சேவகன் என்பது அவனுக்கு வேறு ஆதரவுகள் இல்லை என்பதை சுட்டும். இங்கு கவி தீராத ஆசையின் பிடியில் உழலும் தன்னைக் குறித்தே முக்கியமாக சொன்னாலும், பரித்யஜந்தி என்று பொதுவாகவே சுட்டி இதுவே உலக நியதி என்று காட்டுகிறார். || 15 ||

======================

Monday, September 18, 2006

கண்ணீர் குடிக்கும் பறவைகள் - வைராக்ய சதகம் VII

"வைராக்ய சதகம்" என்னும் இந்த அற்புத காவியத்தை மேலும் அனுபவிப்போம்.



=========================

பாடல் 12


avashyaM yAtArashcirataramuShitvApi viShayA
viyoge ko bhedastyajati na jano yat svayam amUn |
vrajantaH svAtantryAd atula-paritApAya manasaH
svayaM tyaktA hyete shama-sukham anantaM vidadhati ||12||

अवश्यं यातारश्चिरतरमुषित्वापि विषया
वियोगे को भेदस्त्यजति न जनो यत् स्वयम् अमून्।
व्रजन्तः स्वातन्त्र्याद् अतुल-परितापाय मनसः
स्वयं त्यक्ता ह्येते शम-सुखम् अनन्तं विदधति॥१२॥

அவச்யம் - யாதாரச்சிரதமுஷித்வாபி – விஷயா
வியோகே- கோ - பேதஸ்த்யஜதி - ந - ஜனோ - யத் - ஸ்வயம் - அமூன் |
வ்ரஜந்த;-ஸ்வாதந்த்ர்யாத் - அதுள - பரிதாபாய - மனஸ;
ஸ்வயம் - த்யக்தா - ஹ்யேதே - சம - ஸூகம் - அனந்தம் - விதததி || 12 ||

===================

பொருள் - 12

As, Sensual pleasures surely leave us even if stayed with us long time, what difference is made, if we voluntarily discard them? (Because,) Sensual plesures cause incomparable misery if (they) leave us, but cause infinite bliss if we discard them with our self-control || 12 ||

புலனின்பங்கள் பல காலம் நம்மிடம் இருந்தாலும், ஒருநாள் நம்மை பிறிகின்றன. அதனால், நாமே அவற்றை துறந்தால் என்ன வேறுபாடு (விளையும்?)? புலனின்பங்கள் நம்மை பிறிந்தால், எண்ணற்ற துயரமும், நாம் அவற்றை துறந்தால், சுயக்கட்டுப்பாட்டில் (விளைந்த) முடிவற்ற இன்பமும் (அல்லவா) கிடைக்கின்றன!! || 12 ||

================

மேலுரை - 12


கவி இங்கு விஷய சுகங்களின் இரண்டு குறைகளை சொல்கிறார். ஒன்று, அவை வரைமுறையுடையவை. எல்லாமே ஒருநாள் முடிவுக்கு வரும். (அதாவது, சுகங்கள் தரும் விஷயங்கள் முடியும். அல்லது, நம் இச்சை ருசி மாறிவிடும்). இரண்டாவது, அவை முடியும்போது அவற்றை இழந்ததால் மிக்க மனக்கஷ்டத்தையும் கொடுக்கும். இதை ஈடு செய்ய ஒரே வழி, நாமாகவே இந்த விஷய சுகங்களை ஒழித்துக்கட்டுவதுதான். அப்படி செய்தால், நம்மீது நமக்கு மதிப்பும், புலன்களை வென்ற அபரிதமான மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இந்த உண்மை ஆன்மீக விஷயங்களில் மட்டுமல்லாது, உலக நடப்புகளிலும் உணரப்படுகின்றது. பல தீய பழக்கங்களை மக்கள் குற்ற உணர்ச்சியோடே அனுபவிக்கிறார்கள். மாறாக இன்பங்கள் நல்லதாக இருந்தாலும், அவற்றை நுகரும்போது இது எத்தனை நாளைக்கு என்று பயந்துகொண்டே அனுபவிக்கிறார்கள். இவை இரண்டும் இந்த ஆசைகளை துறந்தால் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும், என்கிறார் கவி.


==========================

பாடல் - 13


brahma-j~nAna-viveka-nirmala-dhiyaH kurvantyaho duShkaraM
yanmu~ncantyupabhoga-bhA~njyapi dhanAnyekAntato niHspR^ihAH |
samprAtAn na purA na saMprati na ca prAptau dR^iDha-pratyayAn
vA~nChA-mAtra-parigrahAn api paraM tyaktuM na shaktA vayam ||13||

ब्रह्म-ज्ञान-विवेक-निर्मल-धियः कुर्वन्त्यहो दुष्करं
यन्मुञ्चन्त्युपभोग-भाञ्ज्यपि धनान्येकान्ततो निःस्पृहाः।
सम्प्रातान् न पुरा न संप्रति न च प्राप्तौ दृढ-प्रत्ययान्
वाञ्छा-मात्र-परिग्रहान् अपि परं त्यक्तुं न शक्ता वयम्॥१३॥

ப்ரும்ம-ஞான-விவேக-நிர்மல-திய: குர்வந்த்யஹோ-துஷ்கரம்
யன்முங்ஜன்த்யுபபோக-பாங்ஜ்யபி-தனான்யேகாந்ததோ-நி:ஸ்ப்ருஹா: |
ஸம்ப்ராதான்-ந-புரா-ந ஸம்ப்ரதி-ந-ச ப்ராப்தௌ த்ருட-ப்ரத்ய்யான்
வாங்சா-மாத்ர-பரிக்ரஹான்-அபி-பரம்-த்யக்தும்-ந சக்தா வயம் || 13 ||

=======================

பொருள் - 13



Ah! What a difficult feat is performed by blemishless, discriminating minds with knowledge of (ultimate) reality, for they renounce without craving entire wealths bringing enjoyment (to them). (Whereas), We are unable to discard even wealths missed in the past, not available now or uncertain in future, (though), though these wealths remain only in mind || 13 ||

ஓ!! பகுத்தறிந்து ப்ரும்மஞானம் பெற்ற தூய்மையான மனங்களின் செயல் எவ்வளவு கடினமானது! அவை, சுகங்களுக்கு ஆதாரமான எல்லா செல்வங்களையும் பொருட்படுத்தாமல் துறக்கின்றனவே!! நாமோ, கிடைக்காமல் நழுவிய செல்வங்கள், இல்லாத செல்வங்கள், கிடைக்கும் என்று நம்பிக்கையற்ற செல்வங்களைக்கூட (மனதினால் கூட) துறக்க சக்தியற்றவர்களாக இருக்கிறோம். || 13 ||

==================

மேலுரை - 13



இந்த பாடலில் கவி நம் இயலாமையை சுட்டுகிறார். அல்பமான நம் மனங்கள் நம்மிடமில்லாத செல்வங்களை கூட ஆசைப்படாமல் இருக்க மறுக்கின்றன. கிட்டாதாயின் வெட்டென மறக்க கூட முடியாமல் ஆசை சூழ்ந்த நம் மனங்களுக்கு, எங்கும் பரந்து வியாபித்திருக்கும் பரப்பிரும்மத்தின் உண்மைநிலை உணர்ந்த மனம் தூய்மையானவர்கள், அவர்களின் கையிலுள்ள செல்வங்களை கூட முழுதும் துறப்பது விந்தையான செயலாக படுகிறது. இதனால், ஆசையை விடும் பக்குவம் உண்மை நிலையை பகுத்துணர்வர்களுக்கு எளிது என்கிறார் கவி.

========================


பாடல் - 14


dhanyAnAM giri-kandareShu vasatAM jyotiH paraM dhyAyatAM-
AnandAshrukaNAn pibanti shakunA niHsha~Nkam a~NkeshayAH |
asmAkaM tu manorathoparacita-prAsAda-vApI-taTa-
krIDA-kAnana-keli-kautuka-juShAm AyuH paraM kShIyate ||14||

धन्यानां गिरि-कन्दरेषु वसतां ज्योतिः परं ध्यायतां-
आनन्दाश्रुकणान् पिबन्ति शकुना निःशङ्कम् अङ्केशयाः।
अस्माकं तु मनोरथोपरचित-प्रासाद-वापी-तट-
क्रीडा-कानन-केलि-कौतुक-जुषाम् आयुः परं क्षीयते॥१४॥

மலைக்குகைகளில் வசித்து, பரஞ்சோதியை தியானித்து பெருகும் ஆனந்த கண்ணீர்த்துளிகளை பயமில்லாமல் குடிக்கும் பறவைகள் அமர்ந்துள்ள மடியை உடையவர்கள் பேறு பெற்றவர்கள். என் வாழ்வோ, கற்பனையில் (தோன்றிய) அரண்மனைகளிலும், நீர்நிலை கரைகளிலும், உல்லாச தோட்டங்களிலும் விளையாடி வேகமாக கழிகின்றன || 14 ||

==================

மேலுரை - 14

எதுவுமில்லாமல் குகைகளில் வசிப்போர்கள் தியானத்தில் உண்மையான பேரின்பத்தை பெருகிறார்கள் என்கிறார் கவி. பரஞ்சோதி என்று சொல்வது உண்மையான ப்ரும்மத்தின் த்யான ஸ்வரூபம். அதை த்யானித்தால் எல்லையில்லாத இன்பத்தில் கண்ணீர் பெருகும். மற்றும் இவர்கள் சமாதி நிலையில் பறவைகள் அமரும் கல் போல உலகுக்கு தோன்றுவார்கள் என்பதை மடியில் பயமில்லாமல் அமரும் பறவையை சுட்டி உணர்த்துகிறார். இதற்கு நேர்மாறாக, ஒன்றுமில்லாமல் கற்பனையில் இன்பம் காணும் நம் இழிநிலையை சுட்டுகிறார். நிஜத்தை விட கற்பனையே அல்ப ஜீவன்களுக்கு ஆனந்தமாய் இருக்கிறது என்பது தாத்பர்யம். மேலும், அந்த கற்பனை நிஜமாகும்போது அந்த ஆனந்தம் இருப்பதில்லை என்பதும் இங்கு நுணுக்கம்.

=============


மேலும் வரும்.....