Monday, May 29, 2006

ராமாயண உட்பொருள்

ராமாயண சாரம்

தபஸிலும் ஸ்வாத்யாயத்திலும் (வேத படிப்பு) மிகச்சிறந்த வால்மீகி ராமாயண காவியம் எழுதினார் என்றால், அதில் மிகச் சிறந்த வேத வேதாந்தங்களை அடக்கி இருக்கிறார்.

ஹிந்து புராணங்களில் symbolism அதிகம் இருக்கின்றன. அவை சொல்ல வரும் விழயங்கள் நுட்பமானவை. உள்கருத்துக்களை நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.

Ideal woman ஆன பிராட்டி சீதா பெண்களுக்கு இலக்கணமாக பேசப்படுகிறாள். பிராட்டியை ஜீவனாக உருவகப்படுத்தி, அந்த ஜீவன் எப்படி ஆன்மீக படியேறி பரமாத்மாவை அடைவான் என்பதே ராமாயணம் நமக்கு காட்டும் வழி.

ராம என்கிற பதத்துக்கு எல்லா விஷயங்களிலும் ரமிக்கின்றவன் என்று அர்த்தம். (who revels in all beings and things…) எல்லாவற்றிலும் நீக்கமற கலந்திருக்கும் ஆத்மா தான் ராமன். அந்த ஆத்மா இணைந்திருப்பது சீதை என்கிற மனதுடன். சுயகட்டுப்பாடு (self control) இருக்கும் இடத்தில் ஆத்மா என்கிற ராமன் வெளிப்படுவான். எங்கு ஒன்றுக்கொன்று விரோதம் இல்லாமல் புலன் கட்டுப்பாடு (no conflict = a+yodhya) இருக்கிறதோ, அங்கு ராமன் என்கிற ஆத்மா வெளிப்படும்.

ராமன் என்கிற ஆத்மா, சீதை என்கிற மனதுடன் இணையும்போது சம்சாரம் (life) மற்றும் விஷயங்கள் ஏற்படுகின்றன.

சீதை என்கிற மனது எங்கிருந்து வந்தது என்று யாராலும் சொல்ல முடியாது. (அத்வைத்த்தில் இது தீராத தர்க்கம். சங்கரர் இதை அனாதி என்று சொல்லி விட்டுவிட்டார்...)

சீதையும் இந்த பூமியிலிருந்து தோன்றி பூமியிலேயே மறைகிறாள். மனசு எங்கிருந்து தோன்றுகிறது; சமாதி நிலையில் எங்கு மறைகிறது என்று அறிவார் இல்லை.

சீதை என்கிற மனம், ராமன் என்கிற ஆத்மாவுடன் இரண்டற கலந்து வெளி விவகாரங்களில் லயிக்காத வரை பூர்ணமான ஆனந்த நிலையில் இருக்கிறது. (perfect harmony) அது அயோத்தியாக இருந்தாலும், காடாக இருந்தாலும் சரி.

சீதை தங்கமானுக்கு ஆசைப்படும்போது, மனம் கீழான லௌகீக விஷயங்களில் ஆசைப்படும்போது, புறத்தே விரிந்து புலன் கருவிகளை நாட ஆரம்பிக்கிறது. இதுவே ஜீவனுக்கு இறங்கு முகம்.

ராமனின் (ஆத்மாவின்) பூர்ணத்துவத்தை மறந்த / அறியாத சீதை (மனம்), லட்சுமணனை (தபஸ் – முயற்சி) ராமனுக்காக ஏவுகிறாள். இதனால், சீதை (மனம்) பத்துதலை ராவணனுக்கு (பத்து புலன் கருவிகள்) எளிதாக வசப்படுகிறாள். தருமமும், தபஸூம் நிறைந்த உலகிலிருந்து, சீதை லங்கைக்கு (விஷயங்களால் நிறைந்த சம்சாரத்திற்கு material world) கடத்திச் செல்லப்படுகிறாள்.

பின் மனம் பல கஷ்டங்களை அனுபவித்து வருந்தி, ஒரு முகப்பட்டு ராமனுக்கு ஏங்கி சரணாகதி அடைகிறது.

ராமன் (self ஆத்மா) வாலி என்கிற காமத்தை வீழ்த்தி, வானரங்களை (நினைவுகள்) சேர்த்துக்கொண்டு சமுத்திரத்தை (விஷய சுகங்களாக தோன்றும் மாயை) தாண்டி லங்கையை அடைகிறான்.

அதாவது சீதை என்கிற மனம் உள்ளே திரும்பி ஆத்மாவிடம் இடையறாது லயித்தால் மனம் தன் அஸ்தித்வத்தை (இருப்பை) இழக்கிறது. பூர்ணமான புருஷனான ஆத்மா தன்னில் மனதை லயப்படுத்திக்கொண்டாலும், மனதால் பாதிக்கப்படுவது இல்லை.

ஜீவன் தன்னுடைய சுய சொரூபம் சுத்தப்பட்டு பரம்பதப்பட்ட (rehabilated) நிலையில் மனது ஆத்மாவில் ஒடுங்கி மறைகிறது. மோக்ஷ நிலையை எட்டிய ஆத்மாவுக்கு மனதால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. தன் ஆத்ம இன்பத்தில் (kingdom of life) லயித்த அதற்கு மனதின் தேவை இல்லாமல் போகிறது. அதனால், மனது காட்டுக்கு விரட்டப்படுகிறது.

ஆனால், மனஸ் ஆத்மாவின் தொடர்பின் காரணமாக ஞானம் பிறக்கிறது (லவ குசர்கள்). அவர்களின் சாரமாக ராமாயணம் உலகெங்கிலும் பரப்பப் படுகிறது.

இதுவே ராமாயணத்தின் சாரம். இதை உணர்ந்தவனுக்கு பிறப்பில்லை.