Monday, October 30, 2006

மருந்தா-சுகமா? - வைராக்ய சதகம்

இதுவரை பார்த்தது

16 காமத்தின் வீழ்ச்சி
17 சிவனின் தனித்துவம்
18 மீன்களிலும் தாழ்ந்தவன்

கவி மேலும் தொடர்கிறார்.


த்ருஷா சுஷ்யத்யாஸ்யே பிபதி ஸலிலம் சீதமதுரம்
க்ஷூதார்த: சால்யான்னம் கவலயதி மாம்ஸாதிகலிதம்
ப்ரதீப்தே காமாக்னௌ ஸூத்ருடதரமாலிங்கதி வதூம்
ப்ரதீகாரம் வ்யாதே: ஸூகமிதி விபர்யஸ்யதி ஜன: 19


तृषा शुष्यत्यास्ये पिबति सलिलं शीतमधुरं
क्षुधार्तः शाल्यानं कवलयति मांसादिकलितम्‌।
प्रदीप्ते कामाग्नौ सुदृढतरमालिङ्गति वधूं
प्रतीकारं व्याधेः सुखमिति विपर्यस्यति जनः॥ १९॥


tR^ishhaa shushhyatyaasye pibati salila.n shiitamadhura.n
xudhaartaH shaalyaana.n kavalayati maa.nsaadikalitam.h .
pradiipte kaamaagnau sudR^iDhataramaaliN^gati vadhuuM
pratiikaara.n vyaadheH sukhamiti viparyasyati janaH .. 19..


Meaning:
One drinks cool sweet water for mouth parched with thirst; the hunger-smitten eats rice, flavored with meat et cetera.; with passion afire, embraces the wife firmly; people (treat) these remedies for these diseases contrarily as happiness.


பொருளுரை:

(மனிதன்) தாகத்தில் வறண்ட வாய்க்கு குளிர்ந்த சுவையான தண்ணீர் குடிக்கிறான்; பசி தாக்கியவன் மாமிசங்கள் முதலியவை சேர்த்து சுவைப்பட்ட சாதத்தை சாப்பிடுகிறான்; காமாக்னி கிளறும்போது மனைவியை திடமாக அணைக்கிறான்; (இவ்வித) வியாதிகளுக்கு மாற்றான மருந்துகளை சுகங்களென்று எதிரிடையாக நினைக்கும் ஜனங்கள்.


விரிவுரை:

யாக்கையின் பிணக்குகள் தீர உணவும், உறக்கமும் இடையறாது ஏற்கப்படுகின்றன. தாகம், பசி, காமம் வாட்டும்போது உடல் தேடும் உணவும், உறவும் இந்த பிணக்குகளிலிருந்து தற்காலிக விடுப்புக்கே. இந்த தீர்வுகள் மருந்துகளே அன்றி சுகங்களாகா. இதற்கு இரண்டு சான்றுகள். இத்தீர்வுகள் பெறா உடல் வாடுகிறது. மேலும், இந்த தீர்வுகள் உடலுக்கு எப்போதும் தேவைப்படுவதும் இல்லை. இன்று சுகமாயிருப்பது பின்னொருவேளை சுகமாயிருப்பதில்லை. இவ்விரண்டு காரணங்களால் இவை மருந்துகள் என்பது தெரிகிறது. மருந்துகள் சுகங்களாகா. உடலுக்கு பிறப்பும், இறப்பும் நிரந்தர பிணிகளாயின. பசியும் வேட்கையும் தற்காலிக பிணிகளாகின்றன. இந்த தற்காலிக நிவாரணங்களுக்காக அல்லல்படுவோர் அற்பர்கள். மூலமான பிறப்பெனும் வியாதி ஒழிய மருந்து வேண்டுபவனே அறிந்தவன். பவமென்னும் இவ்வுடல் ஒழிவதே உண்மையான சுகம்.

No comments: